செய்திமுரசு

காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை அச்சுறுத்திய புலனாய்வுப் பிரிவினர்!

யாழ்ப்பணத்தில் காணமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் மேற்கொண்ட துண்டுப்பிரசுரங்கள் கையளிக்கும் நிகழ்வில் புலனாய்வுப் பிரிவினர் சூழ்ந்து கொண்டமையினால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான நிலைமை காணப்பட்டது. வவுனியா காணமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவு தூபிக்கு முன்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு ஆதரவு தெரிவித்து துண்டுப்பிரசுரங்கள் வழங்கியிருந்தனர். இந்த இடத்திற்கு வந்த ஏராளமான புலனாய்வாளர்கள் துண்டுப்பிரசுரங்கள் வழங்கிய காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை கையடக்க தொலைபேசிகள் ஊடாக ஒளிப்படங்கள் எடுத்து அச்சுறுத்தினார்கள். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான ...

Read More »

நல்லூரை ஆக்கிரமிக்கும் இராணுவம்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவில் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ள காவல் துறையில்  மூன்றில் இரண்டு பகுதியினர் அடுத்தவாரம் மீளப்பெறப்பட்டு, இராணுவத்தினர் அதிகளவில் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இடம் பெற்று வருகிறது. எதிர்வரும் ஓகஸ்ட் 20ஆம் திகதி வைரவர் சாந்தி உற்சவத்துடன் திருவிழா நிறைவடையவுள்ளது. இந்த நிலையில், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வீதித் தடைகள், அடியவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் வருடா வருடம் காவல் துறையினர்  ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வருடம் ஏப்ரல் ...

Read More »

பிரியா – நடேசன் குடும்பம் தொடர்பிலான அவுஸ்திரேலிய அமைச்சர் டட்டனின் கூற்றுக்கு சட்டத்தரணி பதிலடி

பிரியா ; நடேசன் குடும்பத்தினரால் ஆஸ்திரேலிய அரசுக்கு ஒரு கோடி டொலர் செலவாகியுள்ளது என்றும், இந்தப்பணம் நாட்டு முன்னேற்றத்துக்காக பயன்படுத்தப்படவேண்டியது என்றும், வாய்ப்புக்கள் அனைத்தும் தீர்ந்துபோன பிறகும் நாடு திரும்புவதற்கு அடம்பிடிக்கும் ப்ரியா நடேசன் குடும்பத்தினால் நாட்டு மக்களின் வரிப்பணம்தான் வீணாகிறது என்றும் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டன் கூறிய கருத்துக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் பிரியா ; நடேசன் குடும்பத்தினரின் சார்பாக வழக்கை முன்னெடுத்துவரும் சட்டத்தரணி அவ்வளவு  பெருந்தொகைப்பணத்தை செலவுசெய்து அந்தக்குடும்பத்தினை எப்படியாவது நாட்டைவிட்டு துரத்துவதற்கு எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருபவர் பீற்றர் டட்டனே ...

Read More »

மருத்துவமனையிலிருந்து பலவந்தமாக அகற்றப்பட்டார் பிரியா

உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் பேர்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இலங்கையை சேர்ந்த தமிழரான பிரியாவை அவுஸ்திரேலிய அதிகாரிகள் மீண்டும் பலவந்தமாக கிறிஸ்மஸ்தீவிற்கு கொண்டு சென்றுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதால் பிரியாவின் உடல்நிலை மோசமடைகின்றது இதன் காhரணமாக அவரை கிறிஸ்மஸ்தீவிற்கு கொண்டுசெல்லக்கூடாது என மருத்துவர்கள் வாதிட்டுவந்த நிலையிலேயே அதிகாரிகள் அவரை பலவந்தமாக கிறிஸ்மஸ்தீவிற்கு கொண்டு சென்றுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரியாவை மருத்துவபரிசோதனைக்காக கொண்டு செல்லதிட்டமிட்டிருந்தனர்,ஆனால் அதற்கு சில மணிநேரத்துக்கு எல்லை காவல் படையினர் தலையிட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரை விமானநிலையத்துக்கு ...

Read More »

சீன மாணவர்களை குறி வைத்து கடத்தும் ஆஸ்திரேலிய கும்பல்

ஆஸ்திரேலியாவில் படித்து வரும் சீன மாணவர்களை குறி வைத்து கடத்தும் கும்பல் அவர்களை மிரட்டி கோடிகணக்கில் பணம் பறித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஏராளமான சீன மாணவர்கள் படித்து வருகின்றனர். பெரும்பாலும் சீன மாணவர்கள் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். பணக்காரக சீன மாணவர்களை அடையாளம் கண்டு கொள்ளும் ஆஸ்திரேலிய கும்பல் ஒன்று அவர்களை குறி வைத்து கடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. சீனாவின் போலீஸ் துறை அல்லது வருமான வரித்துறை அதிகாரிகள் போல மாணவர்களை இந்த கும்பல் போனில் தொடர்பு ...

Read More »

அறிந்தவன், தெரிந்தவன், ஊரவன் பார்ப்பது அறிவீனம்

பொதுவாக ஒரு தொழிலை, ஒருவர் மேற்கொள்வதாயின் அது தொடர்பிலான கல்வி அறிவு, ஆளுமை போன்றவை முதன்மையானவை. உதாரணமாக, மருத்துவராகப் பணியாற்றுவதாயின் அது தொடர்பிலான மருத்துவக் கற்கை நெறியைப் பயின்று பூர்த்தி செய்திருப்பதுடன் நோயாளிகள், தாதியருடன் நீடித்த சுமூக உறவைப் பேணும் வகையிலான ஆளுமையைக் கொண்டிருக்க வேண்டும். அண்ணளவாக 40 ஆண்டுகளுக்கு முன்பு, சட்டவல்லுநர்களே நமதுநாட்டில் அரசியல் செய்தார்கள். ஆனால் இன்று, கல்வித் துறை சார்ந்த புலமை இருந்தாலென்ன இல்லாவிட்டாலென்ன, எல்லோரும் செய்யக் கூடிய தொழிலாக அரசியல் மாறி விட்டது. இலங்கை நாடாளுமன்றில் உள்ள மொத்த ...

Read More »

அவுஸ்திரேலிய காட்டுத்தீயில் சிக்கி 3 பில்லியன் விலங்குகள் பாதிப்பு – ஆய்வில் தகவல்

அவுஸ்திரேலியாவில் கடந்த ஆண்டில் பேரழிவை ஏற்படுத்திய ;காட்டுத்தீயினால் சுமார் 3 பில்லியன் விலங்குகள் உயிரிழந்தது அல்லது இடம்பெயர்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளன. விஞ்ஞானிகள் கூற்றுப்படி, நாட்டின் பூர்வீக வனவிலங்குகளுக்கு ஏற்படும் தாக்கத்தின் அளவை முதன்முறையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது “நவீன வரலாற்றில் மிக மோசமான வனவிலங்கு பேரழிவுகளில் ஒன்றாகும்” என்று இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (WWF) தெரிவித்துள்ளது. கடந்த கோடையில் காட்டுத் தீப்பிழம்புகளால் ஒவ்வொரு அவுஸ்திரேலிய மாநிலத்திலும் பரவி 33 பேர் உயிரிழந்தனர். அவுஸ்திரேலியா முழுவதும் உள்ள பல பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 10 விஞ்ஞானிகள் குழு பாலூட்டிகள், ...

Read More »

யாழில் நால்வருக்கு கொரோனா தொற்று

யாழ்.போதனா வைத்தியாலையில் கடந்த 25ம் திகதி 2வது தடவையாகவும் அனுமதிக்கப்பட்டு 7ம் விடுதியில் தனிமைப்படுத்தல் அறையில் வைக்கப்பட்டிருந்தவருக்கு கொரோனா தொற்று இருக்கலாமென வைத்தியர் தெரிவித்துள்ளார். எனினும் அவருக்கு குறைந்தளவு தொற்றே ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் அவருடன் பழகிய வைத்தியசாலை ஊழியா்கள் 4 போ் அடையாளம் காணப்பட்டு அவா்களுடைய வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், எதிர்வரும் 31ம் திகதி பரிசோதனை நடத்தப்படும் எனவும் கூறியுள்ளார். குறித்த தகவலை யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளா் த.சத்தியமூா்த்தி கூறியுள்ளார். இது குறித்து இன்று மாலை யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ...

Read More »

வன்னியில் சிங்களவர் ஒருவரை வெற்றிபெற வைப்பதற்கு முயற்சி

வன்னியில் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கொண்டுவருவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வன்னியில் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கொண்டுவருவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என சுட்டிக்காட்டியுள்ள செல்வம் அடைக்கலநாதன் சிங்களவர் வரமுடியாத வன்னியில் அவர்கள் வருவதற்கான ஆபத்தையும் வாய்ப்பையும் பலர் உருவாக்கிக்கொண்டிருக்கின்றார்கள் என குறிப்பிட்டுள்ளார். சிங்களவர் ஒருவர் வன்னியில் வெற்றிபெற்றால் அவரைநிச்சயம் அமைச்சராக்குவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இங்கே சிங்கள குடியேற்றங்கள் அதிகரிக்கப்படும், எம்மை முற்றுமுழுதாக நசுக்கும் ஆபத்து ஏற்படும்; எனவும் அவர் தெரிவிததுள்ளார். தனிப்பட்டவர்கள் ...

Read More »

தமிழ் மக்கள் மீது கொடூரமான கொலைகள் நடாத்தப்பட்டது! -மணிவண்ணன்

இனப்படுகொலைக்கு சாட்சியம் இல்லை என கூறுவது தென்னிலங்கை அரசியல்வாதிகளின் நிகழ்ச்சிநிரலை பலப்படுத்துவதாக உள்ளது. யுத்த குற்றத்துக்கும் இனப்படுகொலைக்கும் கிட்டத்தட்ட ஒரே சாட்சியங்களே தான். ஆனால் யுத்த குற்றம் என்பதை தாண்டி இனப்படுகொலை என்பதை நிரூபிக்க தேவையான விடயமாக நோக்கத்தை உறுதிப்படுத்தல் உள்ளது இலங்கை அரசாங்கம் தமிழர்களை அழிக்கும் நோக்கத்துடன் செயற்படுவதனை கடந்த கால இனவன்முறை வரலாற்றை எடுத்து கூறினாலே சாட்சிகள் போதுமானதாகும். சாட்சியங்கள் இல்லை என்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளருமான ...

Read More »