செய்திமுரசு

‘கொரோனா’ சந்தேகம்: யாழில் பலர் விடுவிப்பு!

கொரோனோ வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர் என்ற சந்தேகத்தின் பேரில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள், பரிசோதனைகளின் பின்னர், இன்று (16) விடுவிக்கப்பட்டுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகிறது. அவர்களுக்கு தொற்று இல்லை என்பது பரிசோதனைகளின் மூலம் கண்டறியப்பட்டதையடுத்தே, விடுவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல, ஏனைய வைத்திசாலைகளிலும் சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டவர்கள் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More »

இலங்கை ரீதியில் 12 மத்திய நிலையங்கள்!

இலங்கை வரும் பயணிகளை கண்காணிப்பதற்காக நாடாளாவிய ரீதியில் 12 மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. பம்மைமடு, கந்தக்காடு, பனிச்சங்கேணி, மயிலன்குளம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள தேசிய பாதுகாப்பு படை முகாம்களில் இந்த நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பொரவெள, கல்கந்த, கஹகொல்ல, தியத்தலாவை இராணுவ மருத்துவமனை மற்றும் தியத்தலாவை இராணுவ முகாமிலும் இந்த மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக இராணுவம்கூறியுள்ளது. குறித்த மத்திய நிலையங்களில் இதுவரை 8 வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட ஆயிரத்து 723 பேர் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

Read More »

உலகை உலுக்கிய குழந்தை மரணம் – 3 பேருக்கு 125 ஆண்டு சிறை

2015-ம் ஆண்டு சிரியா அகதிகள் சென்ற படகு துருக்கி கடலில் கவிழ்ந்த விபத்தில் உலகை உலுக்கிய குழந்தை அய்லான் குர்தி மரணம் தொடர்பாக 3 பேருக்கு 125 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு போர் நடந்து வரும் சிரியாவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவர்கள் மத்திய தரைக்கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் படகுகளில் பயணம் செய்து ஐரோப்பிய நாடுகளை அடைகின்றனர். பல நேரங்களில் இந்த ஆபத்தான பயணங்கள் விபத்தில் முடிந்துவிடுகின்றன. அந்த வகையில் கடந்த 2015-ம் ஆண்டு ...

Read More »

‘கோவிட்-19’ வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை வழிமுறைகள்!

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேமாகாணம், வூஹான் நகரில் முதன்முதலில் மக்களை பாதிக்கத் தொடங்கிய கோவிட்-19 வைரஸ் உலகம் முழுவதும் 114 நாடுகளில் பரவி மக்களைப் பாதித்துள்ளது. கோவிட் -19 வைரஸ் பரவுவதை தடுக்க பதற்றம் அடையாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி உலகசுகாதார மையம் உள்ளிட்ட சர்வதேச நிறு வனங்கள் அறிவுறுத்தி இருக்கின்றன. கோவிட்-19 வைரஸ் அச்சத்தில் இருந்து விடுபட சில வழிகாட்டுதல்கள்: கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் தொற்று நோய் என்பதால் அது ஒரு நபரிடம் இருந்துமற்றவர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பரவக்கூடும். மூக்கு, தொண்டை, ...

Read More »

சவால்களை சந்திக்கும் பெண்களின் கதைகளை நான் சொல்ல விரும்புகிறேன்!

ஆஸ்திரேலியாவில் கலாச்சார ரீதியாக, மொழி ரீதியாக வேறுபட்ட பெண்கள் குறைவான ஊதியத்திற்கு பணியாற்றும் நிலை இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆனால் சிலரின் வழிகாட்டுதலின் படி சில பெண்கள் தங்கள் துறைகளில் சிறந்து விளங்கி வருகின்றனர். ஆப்பிரிக்க- ஆஸ்திரேலிய பெண்ணான ஹவானட்டு பங்குரா திரைப்படக்கலை சார்ந்த துறையில், தன்னை நிலைநிறுத்திக் கொண்டது இதற்கு ஒரு சான்றாக அமைந்திருக்கிறது. இவர் சியாரா லியோனிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் அகதியாக தஞ்சமடைந்தவர். “என்னைப் போன்ற பெண்களின் கதைகளை, சவால்களை சந்திக்கும் பெண்களின் கதைகளை நான் சொல்ல விரும்புகிறேன்,” எனக் கூறும் ஹவானட்டு ...

Read More »

பாடல் பதிவுக்கு ஆஸ்திரேலிய எல்லைப்படை அதிகாரிகள் அனுமதி மறுப்பு!

ஆஸ்திரேலிய ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குர்து அகதியும் இசையமைப்பாளருமான மோஸ்தபா அசிமிடபரின் பாடல் பதிவுக்கு ஆஸ்திரேலிய எல்லைப்படை அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். சுமார் 7 ஆண்டுகளாக மனுஸ்தீவில் சிறைவைக்கப்பட்டிருந்த மோஸ்தபா, மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார். நான்கு மாதங்கள் மெல்பேர்ன் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளார். மாற்று தடுப்பு மையாக அறியப்படும் இந்த ஹோட்டலில் இவருடன் 55 அகதிகள் வைக்கப்பட்டுள்ளனர். மோஸ்தபா பப்பு நியூ கினியாவில் தடுப்பில் வைக்கப்பட்டிருந்த போது நியூசிலாந்து இசைக்கலைஞர் ரூத் முண்டேவுடன் இணைந்து ‘தி பேர்ட்ஸ்’ என்ற பாடலை ...

Read More »

கிளிநொச்சியில் வெடி பொருள் வெடிப்பு! -இளைஞர் கைது!

கிளிநொச்சி, முரசு மோட்டை கோரக்கன் கட்டு குடியிருப்பு பகுதியில் வீடொன்றில் நேற்றிரவு (14-03-2020) இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தையடுத்து குறித்த வீட்டில் தங்கியிருந்த இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி  காவல் துறையினர்  தெரிவித்தனர் கிளிநொச்சி முகமாலைப்பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில்  ஈடுப்பட்டு வருகின்ற நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். வெடிப்பு சம்பவம்& இடம்பெற்றதையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் குறித்த வீட்டை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். இதன்போது ஒரு தொகை வெடி பொருட்களுடன் குறித்த நபரை கைதுசெய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ; இராணுவத்தினர், கிளிநொச்சி காவல் ...

Read More »

ஆஸ்திரேலியா-நியூசிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு

கொரோனா அச்சம் காரணமாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பொது நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மக்கள் கூடும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. கொரோனா அச்சம் காரணமாக மார்ச் 16-ம் திகதி முதல் ஏப்ரல் 12-ம் திகதி வரை நடைபெறுவதாக இருந்த அனைத்து பேட்மிண்டன் போட்டித் தொடர்களையும் உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு நிறுத்தி வைத்துள்ளது. அவ்வகையில் இந்தியாவில் வரும் 24-ம் திகதி தொடங்கவிருந்த இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரும் திகதி குறிப்பிடப்படாமல் தள்ளி ...

Read More »

அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சரை சந்தித்த இவன்கா டிரம்பின் நிலை……?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மகள் இவன்கா டிரம்ப் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளப்போவதில்லை எனவும் எனினும் வீட்டிலிருந்து பணிபுரிவார் எனவும் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் இறுதியாக இவன்கா டிரம்பினையும் சிரேஸ்ட அதிகாரிகள் சிலரையும் சில நாட்களிற்கு முன்னர் சந்தித்துள்ள நிலையிலேயே வெள்ளை மாளிகை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பீட்டர் டட்டன் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்துள்ளதாக தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை எனினும் பீட்டர் டட்டன் சிரேஸ்ட அதிகாரிகளை சந்தித்தவேளை அவரிற்கு நோய் அறிகுறிகள் ...

Read More »

ஞாயிறு திருப்பலி, ஆராதனைகள் குறித்து பேராயரின் வேண்டுகோள் !

அனைத்து ஆலயங்களிலும் ஆராதனைகள் முன்னெடுக்கப்படுவதை தவிர்க்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்தவகையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அச்சுறுத்தலையடுத்தே பேராயர் இவ்வாறு வேண்டுகோளை விடுத்துள்ளார். அனைத்து தேவாலயங்களிலும் ஞாயிறு ஆராதனைகள் மற்றும் பிற ஆராதனைகள் முன்னெடுப்பதை மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை தவிர்க்குமாறு பேராயர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் ஏனைய தினங்களில் இடம்பெறும் பிரார்த்தனைகள் மற்றும் ஆராதனைகளை தவிர்க்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையில் இதுவரை 10 கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »