‘கொரோனா’ சந்தேகம்: யாழில் பலர் விடுவிப்பு!

கொரோனோ வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர் என்ற சந்தேகத்தின் பேரில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள், பரிசோதனைகளின் பின்னர், இன்று (16) விடுவிக்கப்பட்டுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகிறது.

அவர்களுக்கு தொற்று இல்லை என்பது பரிசோதனைகளின் மூலம் கண்டறியப்பட்டதையடுத்தே, விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல, ஏனைய வைத்திசாலைகளிலும் சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டவர்கள் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.