திரைமுரசு

அவுஸ்திரேலியப் பெண் ஊடகவியலாளரின் சிறந்த பணி

உலகின் அதிகூடிய அவலட்சணமான பெண் எனப் பழிக்கப்பட்டவர், தனது ஆவணப்படம் வெளியிடப்பட்ட வேளையில், தான் கணினி வழித் துன்புறுத்தல்களை எதிர்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். லிஸி வலகியுஸ் என்ற இப்பெண், 17 வயதாக இருந்த போது, அவரைப் பழிக்கும் வீடியோக்களை ஓன்லைனில் கண்டு பெரும் வேதனைப்பட்டுள்ளார். எனினும், அவுஸ்திரேலியப் பெண் ஊடகவியலாளர் ஒருவர், கடந்த வெள்ளிக்கிழமை, இவர் தொடர்பான ஆவணப்படத்தை வெளியிட்டு இவருக்கு வாழ்வின் ஒளியைக் காட்டியுள்ளார்.

Read More »

மனோரமா பெயரில் நடிகர் சங்கம் விருது

மனோரமா பெயரில் விருது வழங்கப்படும் என, நடிகர் சங்க துணைத் தலைவர், பொன்வண்ணன் தெரிவித்து உள்ளார். நடிகை மனோரமாவின், முதல் ஆண்டு நினைவு நிகழ்ச்சி, சென்னையில் நடைபெற்றது. இதில், நடிகர்கள் சிவகுமார், பிரபு, ராம்குமார், மனோரமா மகன் பூபதி, பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்; மனோரமா படத்திற்கு, மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். பொன்வண்ணன் பேசுகையில், ‛‛முதல்வர் உடல்நலம் பெற்று வந்ததும், நடிகர் சங்கம் சார்பில், மனோரமாவுக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தப்படும். ஆண்டுதோறும் நடிகர் சங்கம் சார்பில், மனோரமா பெயரில் விருது வழங்கப்படும், என்றார்.

Read More »

ஜோதிகா நடிக்கும் ‘மகளிர் மட்டும்’

ஜோதிகாவின்  அடுத்த படம் ’மகளிர் மட்டும்’. குற்றம் கடிதல் இயக்குனர் பிரம்மாவின் இயக்கத்தில் ஜோதிகா நடித்து வரும் ’மகளிர் மட்டும்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. படத்தின் போஸ்ட்டர் மற்றும் தலைப்பை பார்க்கும் போதே ஜோ ‘ஒன் உமேன் ஷோ’ நடத்தியிருக்கிறார் என்று தெரிகிறது. சூர்யாவின் 2டி நிறுவனம் தான் தயாரிப்பு. படத்தில் பானுப்பிரியா, ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், லிவிங்ஸ்டன் என க்ளாசிக் படையே உள்ளது. இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

Read More »

குழந்தைகளை கவர்ந்த சிவகார்த்திகேயன்

‘ரெமோ’வில் சிவகார்த்திகேயன் நடிப்பு குழந்தைகளை மிகவும் கவர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘ரெமோ’. இப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும் திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் லாரன்ஸ் நடத்திவரும் அறக்கட்டளையில் பயிலும் குழந்தைகளுக்கு இப்படத்தை பிரத்யேகமாக திரையிட்டு காண்பித்துள்ளனர். காஞ்சிபுரம் சிவகார்த்திகேயன் ரசிகர் மன்றத்தின் சார்பில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. படம் பார்த்த குழந்தைகள் அனைவரும் சிவகார்த்திகேயனின் நடிப்பை விரும்பி ரசித்ததாக தெரிவித்தனர். இப்படத்தில் ...

Read More »

‘மாவீரன் கிட்டு’ படத்­துக்கு தேசிய விரு­து கிடைக்கு­ம் – சுசீந்­திரன்

‘மாவீரன் கிட்டு’ படத்­துக்­காக எனக்கு தேசிய விருது கிடைக்கும் என நான் உறு­தி­யாக நம்­பு­கிறேன் என்று இயக்­குநர் சுசீந்­திரன் குறிப்­பிட்டார். விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, பார்த்­திபன், சூரி, ஹரீஷ் உத்­தமன் உள்­ளிட்ட பலர் நடிக்க சுசீந்­திரன் இயக்­கத்தில் உரு­வாகி இருக்கும் படம் ‘மாவீரன் கிட்டு’. இமான் இசை­ய­மைத்­தி­ருக்கும் இப்­ப­டத்­துக்கு காசி விஸ்­வ­நாதன் எடிட்டிங் பணிகள் கவ­னித்து வரு­கிறார். சந்­தி­ர­சாமி, தாய் சர­வணன் மற்றும் ராஜீவன் மூவரும் இணைந்து தயா­ரித்து இருக்­கி­றார்கள்.   இப்­ப­டத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் வெளி­யீட்டு விழா லயோலா கல்­லூ­ரியில் ...

Read More »

பெண்கள் மட்டுமே நடித்துள்ள திரைக்கு வராத கதை

ஆண் நடி­கர்­களே இல்­லாமல் திரைக்கு வராத கதை என்ற படம் உரு­வா­கி­யி­ருக்­கி­றது. 90களில் முன்­னணி நடி­கர்­க­ளுடன் ஜோடி போட்டு நடித்த நதியா திரு­ம­ணத்­திற்கு பிறகு நடிக்­காமல் ஒதுங்கியிருந்தார். கடந்த சில வரு­டங்­க­ளுக்கு முன்பு மீண்டும் சினி­மாவில் நடிக்க வந்தார். தொடர்ந்து சில படங்களில் நடித்த நதியா, சிறிது கால­மாக வாய்ப்­பில்­லாமல் இருந்தார்.தற்­போது சிறிது இடை­வெ­ளிக்கு பிறகு மீண்டும் நடிக்­க­வந்­துள்ளார். இவர் நடிக்கும் புதிய படத்­திற்கு ‘திரைக்கு வராத கதை’ என்று பெயர் வைத்­துள்­ளனர். நதி­யா­வுடன் இனியா, ஈடன், கோவை சரளா, ஆர்த்தி, சபிதா ஆனந்த் உள்­ளிட்ட ...

Read More »

சசிகுமார் ஜோடியாக ரவிச்சந்திரன் பேத்தி

பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகள் வழி பேத்தி தன்யா. திரைப்படத்தில் நடிக்கும் ஆர்வம் கொண்ட தன்யா இதற்காக முறைப்படி நடனம், நடிப்பு பயிற்சி பெற்றுள்ளார். தனியாக போட்ஷ¨ட் நடத்தி அதனை முன்னனணி இயக்குனர்களுக்கு அனுப்பி வைத்தார். அதைப்பார்த்த இயக்குனர் மிஷ்கின் தான் அடுத்து இயக்கும் படத்தின் நாயகியாக தன்யாவை தேர்வு செய்தார். இந்த நிலையில் உப்புகருவாடு படத்திற்கு பிறகு ராதாமோகன் இயக்கும் பிருந்தாவனம் என்ற படத்தில் அருள்நிதி ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். தற்போது சசிகுமார் அடுத்து தயாரித்து நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக ...

Read More »

எம்.எஸ்.தோனி – தி அன்டோல்ட் ஸ்டோரி

கப்டன் மஹேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு தான் எம்.எஸ்.தோனி மொத்தப்படமும். ஆனால், வாழும் கிரிக்கெட் சூறாவளியான தோனியின் வரலாற்றை எத்தனைக்கு எத்தனை சுவாரஸ்யமாகவும், ஜனரஞ்சகமாகவும் தரமுடியுமோ? அத்தனைக்கு அத்தனை பிரமாண்டமாகவும் பிரமாதமாகவும் தந்திருக்கிறார் இயக்குனர் நீரஜ் பாண்டே. கதைப்படி, பீஹார் ராஞ்சியில் வசிக்கும் நடுத்தரவர்க்க குடும்பத்தில் பிறந்த தோனி, தன் திறமையால் எப்படியெல்லாம் போராட்ட சூழலான வாழ்க்கையில், குடும்பத்திற்காக இரயில்வேயில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் கிடைத்த டிக்கெட் கலெக்டர் வேலையையும் பார்த்துக் கொண்டே, கிரிக்கெட்டில் படிப்படியாக முன்னேறி, எப்படி இந்திய அணியில் இடம் பிடித்து, ...

Read More »

விளம்பர தூதராகிறார் ஜேசுதாஸ்

கேரள மாநில அரசின் ஹரித கேரளம் எனப்படும், துாய்மை கேரளா திட்டத்தின் விளம்ப துாதராக, கர்நாடக இசை பாடகர் ஜேசுதாஸ், 76, நியமிக்கப்படுவதாக, அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடதுசாரி முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. மாநிலத்தை துாய்மையானதாக மாற்ற, ஹரித கேரளம் என்ற பெயரில், புதிய திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.இதன்படி, நீர்நிலைகள், பொது இடங்கள் உள்ளிட்ட, முக்கிய இடங்கள் துாய்மைப்படுத்தப்படும். இந்த திட்டத்தை, மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த, ஜேசுதாசை விளம்பர துாதராக நியமிக்க, ...

Read More »

அவுஸ்ரேலியாவில் படமாக்கப்பட்டு வரும் ஜேம்ஸ் வசந்தன்

ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் குஷ்பு, ராதிகா சரத்குமார், சுஹாசினி மணிரத்னம் மற்றும் ஊர்வசி ஆகியோர் இணைந்து நடித்து வருகிறார்கள். 1980 – 90களில் முன்னணி நடிகைகளாக வலம் வந்தவர்கள் குஷ்பு, ராதிகா, சுஹாசினி மற்றும் ஊர்வசி. நடிகைகள் என்பதைத் தாண்டி நெருங்கிய நண்பர்களாகவும் வலம் வந்தார்கள். தற்போது இவர்கள் நால்வரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்கள். முழுக்க அவுஸ்ரேலியாவில் படமாக்கப்பட்டு வரும் இப்படத்தை ஜேம்ஸ் வசந்தன் இயக்கி வருகிறார். இன்னும் இப்படத்துக்கு பெயரிடப்படவில்லை. ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் அவுஸ்ரேலியாவிலேயே முடிக்க திட்டமிட்டு ...

Read More »