பெண்கள் மட்டுமே நடித்துள்ள திரைக்கு வராத கதை

ஆண் நடி­கர்­களே இல்­லாமல் திரைக்கு வராத கதை என்ற படம் உரு­வா­கி­யி­ருக்­கி­றது. 90களில் முன்­னணி நடி­கர்­க­ளுடன் ஜோடி போட்டு நடித்த நதியா திரு­ம­ணத்­திற்கு பிறகு நடிக்­காமல் ஒதுங்கியிருந்தார்.

கடந்த சில வரு­டங்­க­ளுக்கு முன்பு மீண்டும் சினி­மாவில் நடிக்க வந்தார். தொடர்ந்து சில படங்களில் நடித்த நதியா, சிறிது கால­மாக வாய்ப்­பில்­லாமல் இருந்தார்.தற்­போது சிறிது இடை­வெ­ளிக்கு பிறகு மீண்டும் நடிக்­க­வந்­துள்ளார். இவர் நடிக்கும் புதிய படத்­திற்கு ‘திரைக்கு வராத கதை’ என்று பெயர் வைத்­துள்­ளனர்.

நதி­யா­வுடன் இனியா, ஈடன், கோவை சரளா, ஆர்த்தி, சபிதா ஆனந்த் உள்­ளிட்ட பலரும் நடித்­தி­ருக்­கி­றார்கள். பிலிம் இன்ஸ்­டியூட் மாண­வர்கள் சேர்ந்து சொந்­த­மாக இந்த படத்தை எடுத்து வரு­கின்­றனர்.இப்­ப­டத்தை மலை­யா­ளத்தில் மம்­முட்டி, மோகன்லால் மற்றும் கேர­ளாவின் முன்­னணி நட்­சத்­தி­ரங்­களை வைத்து பட­மாக்­கிய துள­சிதாஸ் இயக்­கு­கிறார்.

இவர் தமி­ழுக்கு அறி­மு­க­மாகும் முதல் படம் இது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. எம்.ஜி.குமார் பாடல் க­ளுக்கு இசை­ய­மைக்க ஆரோல் கொரோலி பின்­னணி இசை­ய­மைக்­கிறார். சஞ்சீவ் சங்கர் ஒளிப்­ப­திவு செய்­கிறார். தமி­ழ­முதன், பரிதி, சக்தி கிருஷ்ணா ஆகியோர் பாடல்­களை எழு­து­கின்­றனர். இப்­ப­டத்தை எம்.ஜே.டி.புரொ­டக் ஷன்ஸ் சார்பில் கே.மணி­கண்டன் தயா­ரிக்­கிறார்.

ராகுல் பிலிம்ஸ் நிறு­வனம் வெளி­யி­டு­கி­றது. இப்­ப­டத்தில் குறிப்­பி­டத்­தக்க அம்சம் என்­ன­வென்றால், இப்­ப­டத்தில் ஒரே­யொரு காட்­சியில் கூட ஆண்கள் நடிக்­க­வில்லை என்­ப­துதான்.

கதையின் போக்கில் ஏற்­படும் சம்­ப­வங்கள் உண்மை சம்­ப­வங்­க­ளாக மாறு­கி­ன்றன. இதன் பின்­ன­ணியில் திரில்லர் கதை­யோட்­டத்­துடன் சஸ்பென்ஸ், அதிரடி கலந்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இம்மாதம் இறுதியில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.