சசிகுமார் ஜோடியாக ரவிச்சந்திரன் பேத்தி

பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகள் வழி பேத்தி தன்யா. திரைப்படத்தில் நடிக்கும் ஆர்வம் கொண்ட தன்யா இதற்காக முறைப்படி நடனம், நடிப்பு பயிற்சி பெற்றுள்ளார். தனியாக போட்ஷ¨ட் நடத்தி அதனை முன்னனணி இயக்குனர்களுக்கு அனுப்பி வைத்தார்.

அதைப்பார்த்த இயக்குனர் மிஷ்கின் தான் அடுத்து இயக்கும் படத்தின் நாயகியாக தன்யாவை தேர்வு செய்தார். இந்த நிலையில் உப்புகருவாடு படத்திற்கு பிறகு ராதாமோகன் இயக்கும் பிருந்தாவனம் என்ற படத்தில் அருள்நிதி ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். தற்போது சசிகுமார் அடுத்து தயாரித்து நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க தன்யா ஒப்பந்தமாகி உள்ளார். இந்தப் படத்தை பிரகாஷ் என்ற புதுமுகம் இயக்குகிறார். பெயரிடப்படாத இந்தப் படத்தில் கோவை சரளா, சங்கிலி முருகன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள்.

இதில் தன்யாக தேனி பெண்ணாக மதுரை தமிழ் பேசி நடிக்கிறார். “என் தாத்தா என்னை எப்போது பார்த்தாலும் நீ நிச்சயம சினிமாவில் ஹீரோயினா வருவாய் என்பார். அவர் வாக்கு பலித்திருக்கிறது. முதல் படம் வெளிவரும் முன்பே ஒரே நேரத்தில் 3 படத்தில் நடிக்கிறேன்.

இன்னும் நிறைய வாய்ப்புகள் வருகிறது. அவற்றை ஒப்புக்கொள்ளவில்லை. ஒன்றிரண்டு படங்களில் என்னை நிரூபிக்க வேண்டும். அதற்கு எனக்கு டைம் வேண்டும்” என்கிறார் தன்யா.