திரைமுரசு

கமல் ஹாசன் – கௌதமி பிரிவு!

கடந்த 13 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த நடிகர் கமல் ஹாசனும் நடிகை கவுதமியும் பிரிவதாக அறிவித்துள்ளனர். அந்தத் தகவலை கவுதமி தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். Gautami ✔@gautamitads Heartbroken to have to share…Life and decisions https://gautamitadimalla.wordpress.com/2016/11/01/life-and-decisions/ …via @wordpressdotcom 1:00 PM – 1 Nov 2016 Life and decisions It is heartbreaking for me to have to say today that I and Mr. Haasan are no longer together. After almost ...

Read More »

பழங்குடி இனத்தவர் கதாபாத்திரத்தில் மீண்டும் ஜெயம் ரவி

விஜய் இயக்கத்தில் உருவாகும் படத்தில் மீண்டும் பழங்குடி இனத்தவர் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் ஜெயம் ரவி. பிரபுதேவா, தமன்னா நடிப்பில் வெளியான ‘தேவி’ படத்தைத் தொடர்ந்து தனது படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் இயக்குநர் விஜய். ஜெயம் ரவி நாயகனாக நடிக்கும் இப்படத்தை இப்படத்தை தனது ‘தி திங்க் பிக் ஸ்டூடியோஸ்’ நிறுவனம் மூலமாக தயாரிக்கவும் இருக்கிறார். நாயகியாக சாயிஷா சைகல், ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ், சண்டை பயிற்சியாளராக சில்வா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இப்படத்தின் நாயகி சாயிஷா சைகல், ...

Read More »

திரைக்கு வராத கதை – விமர்சனம்

நடிகர் பிரணவ் மோகன்லால் நடிகை இனியா இயக்குனர் துளசி தாஸ் இசை ஸ்ரீகுமார் எம் ஜி ஓளிப்பதிவு சஞ்சீவ் ஷங்கர் விமர்சிக்க விருப்பமா? கோவையில் கல்லூரியில் படிக்கும் இனியா தனது தோழிகளுடன் சேர்ந்து குறும்படம் ஒன்றை எடுக்கிறார். இது கல்லூரி பேராசிரியருக்கு பிடிக்காததால், யாருமே யோசிக்காத வகையில் ஒரு கதையை தயார் செய்துவருமாறு கூறுகிறார். இதனால், வேறு ஒரு கதையை யோசிக்கும் இனியா, அதை படமாக்குவதற்காக தோழிகளுடன் மலைப் பங்களாவுக்கு பயணமாகிறார். இவர்கள் செல்லும் வழியில் மற்றொரு நாயகியான ஈடனுடைய கார் பழுதாகி நிற்கிறது. ...

Read More »

வருடந்தோறும் சிறந்த ஓவியர்களுக்கு விருது- சூர்யா

எனது தந்தை பெயரில் வருடந்தோறும் ஓவியப்போட்டி நடத்தி அதில் வெற்றி பெறுவோருக்கு சிறந்த ஓவியருக்கான விருதுகள் வழங்க திட்டமிட்டு உள்ளோம் என சூர்யா கூறினார்.நடிகர் சிவகுமாரின் 75-வது பிறந்தநாள் விழாவையொட்டி நடந்த நிகழ்ச்சியில் நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். விழாவின்போது சிவகுமாரின் மகனும், நடிகருமான சூர்யா கூறியதாவது:- என் தந்தையின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் நோக்கத்தில் அவர் வரைந்த ஓவியங்களை கண்காட்சியாக நடத்தினோம். அதற்கு பெரிய வரவேற்பு இருந்தது. ஏராளமானோர் இந்த கண்காட்சியை கண்டுகளித்தனர். எனது தந்தை பெயரில் வருடந்தோறும் ஓவியப்போட்டி ...

Read More »

ரஷிய அதிபரின் கிரெம்ளின் மாளிகையில் இசை நிகழ்ச்சி நடத்தும் எஸ்.பி.பி.

பல மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடி ’கின்னஸ்’ புத்தகத்தில் இடம்பிடித்துள்ள ’பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்பிரணியம் ரஷிய அதிபரின் கிரெம்ளின் மாளிகையில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 1966-ம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் பின்னணிப் பாடகராக அறிமுகமான எஸ்.பி. பாலசுப்ரமணியம், 1969-ம் ஆண்டு வெளியான ‘சாந்தி நிலையம்’ படத்தில் ‘இயற்கை என்னும் இளையகன்னி’ என்ற மனதை மயக்கும் மெல்லிசை பாடலின் மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதித்தார். பின்னர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான அடிமைப்பெண் படத்தில் ...

Read More »

ஜெயலலிதாவாக மாற ஆசைப்படும் த்ரிஷா

முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க ஆசைப்படுவதாக த்ரிஷா தெரிவித்துள்ளார். துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக த்ரிஷா நடித்துள்ள கொடி படம் தீபாவளிக்கு வெளிவருகிறது. படத்தில் வில்லித்தனம் கலந்த அரசியல்வாதியாக நடித்துள்ளார் த்ரிஷா. இந்நிலையில் த்ரிஷாவுக்கு புது ஆசை பிறந்துள்ளது. ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க வேண்டும் என ஆசையாக உள்ளது. முதல்வர் ஜெயலலிதாவாக நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என த்ரிஷா தெரிவித்துள்ளார்.  

Read More »

ஜெயலலிதா மனோபலத்தால் மீண்டு வருவார்-கவிஞர் வைரமுத்து

முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவ பலத்தாலும், மனோபலத்தாலும் மீண்டு வருவார் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் தொடர்ந்து 35-வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார். லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே மீண்டும் சென்னை வந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர் மேரிசியாங் அப்பல்லோ பிசியோதெரபி நிபுணர்களுடன் இணைந்து பிசியோதெரபி சிகிச்சை அளிக்கிறார். இது தவிர எய்ம்ஸ் நுரையீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் கில்நானியும் சிகிச்சை அளித்து வருகிறார். தொடர்ந்து அளிக்கப்படும் தீவிர சிகிச்சை மூலம் ...

Read More »

பாடகியாக மடோனா செபாஸ்டியன்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் ‘கவண்’ படத்தின் மூலம் பாடகியாகவும் அறிமுகமாக இருக்கிறார் மடோனா செபாஸ்டியன். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன், டி.ராஜேந்தர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. தொடர்ச்சியாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. அபிநந்தன் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு ‘ஹிப் ஹாப்’ தமிழா இசையமைத்து வருகிறார். நவம்பரில் இசை வெளியீடு, டிசம்பரில் படத்தையும் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. சமீபத்தில் இப்படத்துக்கு ‘கவண்’ என தலைப்பிட்டு இருக்கிறது படக்குழு. மேலும், தற்போது ...

Read More »

திருமணத்தின் பின்னரும் நடிகைகள் நடிக்கும் வழக்கம் பொலிவூட்டில் உள்ளது – கஜோல்

பொலிவூட் நடிகை ஒருவருக்கு திருமணமாகிவிட்டது என்றால் அவரின் நடிப்புத்துறை வாழ்க்கை முடிவடைந்துவிட்டது என அர்த்தமல்ல.முந்தைய காலத்திலிருந்து இந்த நிலை இருந்தது என நடிகை கஜோல் கூறியுள்ளார். திருமணமான பின்னரும் திரைப்படங்களில் தான் நடிப்பது குறித்து செவ்வியொன்றில் கேட்கப்பட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,  திருமணமான நடிகைகள் நீண்ட காலமாக பொலிவூட்டில் நடித்து வந்துள்ளனர். யாரும் அவர்களிடம் சென்று, உங்களுக்குத் திருமணமாகிவிட்டது. இன்னும் நீங்கள் பணியாற்றுகிறீர்கள் எனக் கூறியதில்லை எனத் தெரிவித்துள்ளார். 42 வயதான கஜோல் 1999 ஆம் ஆண்டு நடிகர் அஜய் ...

Read More »

சிவகுமாரின் 75-வது பிறந்த நாள் சிறப்பு ஓவியக் கண்காட்சி

தந்தை சிவகுமாரின் 75வது பிறந்த நாளை, சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் பிரம்மாண்டமாக கொண்டாட திட்டமிட்டு இருக்கிறார்கள். 1965ம் ஆண்டு ‘காக்கும் கரங்கள்’ மூலமாக தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் சிவகுமார். அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நாயகனாக நடித்தார். வரும் அக்டோபர் 27ம் தேதி தனது 75வது வயதில் அடியெடுத்து வைக்கிறார் சிவகுமார். இதனை சிவகுமாருடைய மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் ‘மார்க்கண்டேயனுக்கு வைரவிழா’ என்ற தலைப்பில் பிரம்மாண்டமாக கொண்டாட திட்டமிட்டு இருக்கிறார்கள். சிவகுமார் வரைந்துள்ள பல்வேறு ஓவியங்களில் இருந்து 140 ...

Read More »