திரைமுரசு

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் நல்லெண்ணத் தூதராக பிரியங்கா சோப்ரா

ஐக்கிய நாடுகள் சபையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (யூனிசெப்) நல்லெண்ணத் தூதராக நடிகை பிரியங்கா சோப்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டாம் உலகப்போரின்போது அழிந்த நாடுகளில் உள்ள சிறார்களுக்கு உணவு மற்றும் சுகாதார வசதிகளை வழங்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் ஆரம்பிக்கப்பட்டது. குறிப்பாக, உலகம் முழுவதும் உள்ள பெண் பிள்ளைகளின் கல்வி, நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளித்தல், எய்ட்ஸ் உள்ளிட்ட பால்வினை நோய்க்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சிறுவர், சிறுமியரின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்காக உலக நாடுகளின் பங்களிப்புடன் ...

Read More »

ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து

இன்று 66-வது பிறந்தநாள் காணும் நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 12-12-1950 அன்று பிறந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பத்திரிகையாளர் சோ ஆகியோரின் மறைவையடுத்து, தனது பிறந்தநாளை கொண்டாடப் போவதில்லை என்று சமீபத்தில் அறிவித்திருந்தார். பெரிய விழாவாக கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களையும் அறிவுறுத்தி இருந்தார். இந்நிலையில், இன்று 66-வது பிறந்தநாள் காணும் நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ...

Read More »

உலகில் ஆக அதிக நகைச்சுவை நடிகராக மலேசிய கலைஞர் ஹரித் இஸ்கண்டார்

உலகில் ஆக அதிக நகைச்சுவை உணர்வுடைய நடிகர் எனும் பட்டத்தை மலேசிய கலைஞர் ஹரித் இஸ்கண்டார் (Harith Iskander)வென்றுள்ளார். மலேசிய நகைச்சுவை நடிகரும் வழக்குரைஞருமான ஐம்பது வயது ஹரித், அமெரிக்காவில் தலம் கொண்டுள்ள Laugh Factory நிறுவனத்தின் போட்டியில் கலந்துகொண்டார். அதன் முதல் சுற்றில், 56 நாடுகளைச் சேர்ந்த 89 நகைச்சுவைக் கலைஞர்கள் கலந்துகொண்டனர். மொத்தம் மூன்று சுற்றுகள் நடந்தேறின. இறுதியில் 20 பேருக்கு இடையில் கடும் போட்டி நிலவியது. இணையத்தள வாக்கெடுப்பு முறை கொண்டு வெற்றியாளர்களை உலக ரசிகர்கள் தேர்ந்தெடுத்தனர். ஃபிலிப்பீன்ஸ், இந்தியா, ...

Read More »

குருநாதர் எம்.ஜி.ஆரை விஞ்சிய ஜெயலலிதா

அரசியல் துறையில் தன்னுடைய குருநாதரான எம்.ஜி.ஆரை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா விஞ்சி விட்டார் என்று நடிகர் ரஜினி காந்த் கூறினார். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை கோடம்பாக்கத்தில் நினைவு அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதாவுடன் சேர்த்து மறைந்த பத்திரிக்கையாளர் சோ ராமசாமிக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், மூத்த நடிகர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால் உள்ளிட்டோர் முன்னின்று நடத்தினர். அப்போது ரஜினிகாந்த் ஜெயலலிதா பற்றிய தன்னுடைய ...

Read More »

ஜெயலலிதா மரணம்! – மோடிக்குக் கடிதம் எழுதியது ஏன்?- கெளதமி

ஜெயலலிதாவின் மரணம் குறித்து மோடிக்குக் கடிதம் எழுதியது ஏன் என்று நடிகை கெளதமி விளக்கம் அளித்துள்ளார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை (டிச.5) இரவு 11.30 மணிக்கு மறைந்தார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 22-ஆம் திகதி முதல் கடந்த 75 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச.4) மாலை 5 மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை இரவு வரை அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. ...

Read More »

ஐஸ்வர்யாராய் தற்கொலைக்கு முயன்றாரா?

நடிகை ஐஸ்வர்யாராய் குடும்ப தகராறில் தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றதாக பாகிஸ்தானில் இருந்து தகவல் பரவி உள்ளது. பட உலகில், இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உலக அழகி பட்டம் வென்று இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் ஐஸ்வர்யாராய். தமிழில் இருவர், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இவரும் இந்தி நடிகர் அமிதாப்பச்சன் மகன் அபிஷேக்பச்சனும் மணிரத்னம் இயக்கிய குரு படத்தில் ஜோடியாக நடித்து காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆரத்யா ...

Read More »

அடுத்த முதல்வர் அஜித்

அடுத்த முதல்வர் அஜித் என பரவிய வதந்திக்கு, வாய்ப்பே இல்லை என்று அஜித்துக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள். சிவா- அஜித் படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் காஜல் அகர்வால், விவேக் ஓபராய், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட நடிகர்களுடன் முக்கியக் காட்சிகளைப் படமாக்கி வந்தது படக்குழு. தமிழக முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 5-ம் தேதி இரவு சுமார் 11.30 மணிக்கு காலமானார் என்பதை அஜித்துக்கு தெரியப்படுத்தினார்கள். இச்செய்தி அவரை மிகவும் சோகப்படுத்தியது. கண்டிப்பாக நேரில் அஞ்சலி செலுத்தியாக வேண்டும் என்று உடனடியாக ...

Read More »

ராதிகாவை தேர்வு செய்த அவுஸ்ரேலியா!

தென்னிந்திய மக்களிடம் சுற்றுல்லத் துறையை விளம்பரப்படுத்த உள்ள அவுஸ்ரேலியா, அதற்கான விளம்பரப் படங்கள் எடுப்பதற்காக ராதிகாவை தேர்வு செய்துள்ளது. ராடன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் மூலம் பல்வேறு டிவி சீரியல்களை தயாரித்து நடித்து வரும் ராதிகா, தனது நிறுவனம் மூலம் அவுஸ்ரேலியா சுற்றுல்லாத் துறையுடன் இணைந்து விளம்பரப் படங்கள் எடுக்க இருக்கிறார். இதற்காக அவர் விரைவில், தனது ‘வாணி ராணி’ சீரியல் குழுவினருடன் அவுஸ்ரேலியாசெல்ல இருக்கிறார். அங்கு அந்த சீரியலின் பத்து எப்பிசோட்களை படமாக்குவதுடன், பல்வேறு விளம்பரப் படங்களையும் எடுக்க உள்ளார்.

Read More »

“மக்களின் பாராட்டு, கொஞ்சம் ‘ஓவர்’தான்!” – ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய் இப்போது மிகுந்த உற்சாகமாய் காணப்படுகிறார். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் ‘ஏ தில் ஹே முஷ்கில்’ படத்தின் அதிரடி வெற்றி அவருக்கு அதிக மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. தனக்காக வடிவமைக்கப்படும் விசேஷ கவுனை அணிந்து அழகு தேவதையாக பொது இடங்களில் வலம் வரும் அவர், பரபரப்பு காட்டாமல் எல்லோருடனும் இயல்பாக பேசுகிறார். எண்ணற்ற செல்பிகளுக்கு ‘போஸ்’ கொடுக்கிறார்! “எப்போதுமே, அவசர அவசரமாக தலையைக் காட்டிவிட்டுப் போவதும், படபடவென்று பேசிவிட்டு கிளம்பிவிடுவதும் எனக்குப் பிடிக்காது. நான் ஈடுபடும் ஒவ்வொரு விஷயத்துக்கும் போதுமான நேரத்தை ஒதுக்க ...

Read More »

‘‘எனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது’’- சுருதிஹாசன்

‘‘வீட்டில் பூஜை அறை கிடையாது. ஆனாலும் எனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது’’ என்று நடிகை சுருதிஹாசன் கூறினார். நடிகை சுருதிஹாசன் இதுகுறித்து அளித்துள்ள பேட்டி வருமாறு:– கடவுள் நம்பிக்கை ‘‘எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகமாக இருக்கிறது. கடவுள் மீது இருக்கும் பக்தி சாதாரண நிலைகளில் இருந்து வேறுபட்டது. குறிப்பிட்ட சாமிதான் என்று இல்லாமல் அனைத்து சாமிகளையும் கும்பிடுகிறேன். எனக்கு கடவுளை வழிபடுவதற்கு யாரும் சொல்லித் தரவில்லை. வீட்டில் பூஜை அறை கூட கிடையாது. ஆனாலும் தானாகவே கடவுள் நம்பிக்கை வந்து விட்டது. எப்படி ...

Read More »