திரைமுரசு

தமிழில் கையெழுத்திடும் இயக்கம் தொடங்கிய நடிகர் ஆரி!

ரெட்டை சுழி, மாலைப் பொழுதின் மயக்கத்திலே, நெடுஞ்சாலை, தரணி, மாயா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் ஆரி, தமிழில் கையெழுத்திடும் இயக்கத்தை தொடங்கி உள்ளார். ஆரி சென்னையில் அளித்த பேட்டியில் கூறியதாவது:– ‘‘உலகிற்கே தாய்மொழி நம் தமிழ்மொழி. இன்று அழியக்கூடிய மொழியிலும் தமிழே முதலாவதாக உள்ளது. இதற்கு காரணம் ஆங்கில கல்வி மோகம்தான். கடந்த ஜூன்மாதம் வட அமெரிக்காவில் உள்ள டேலஸ் மாகாணத்தில் நடந்த தமிழர் திருவிழாவில் தமிழில் கையெழுத்திடுவது என்ற முழக்கத்தை தொடங்கி 1119 பேர் கையெழுத்திட்டு புதிய கின்னஸ் உலக சாதனை ...

Read More »

“சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றேன்” !நடிகை ரேவதி

“5 வருடங்களுக்கு முன்பு சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றேன்”, என்று நடிகை ரேவதி கூறினார். பாரதிராஜா டைரக்டு செய்த ‘மண்வாசனை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர், ரேவதி. ‘கன்னிராசி’, ‘ஆண்பாவம்’, ‘மவுனராகம்’, ‘அரங்கேற்ற வேளை’, ‘ஒரு கைதியின் டைரி’ உள்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். இவருக்கும் ஒளிப்பதிவாளரும், டைரக்டருமான சுரேஷ்மேனனுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். சுரேஷ்மேனனும், ரேவதியும் சேர்ந்து ‘புதியமுகம்’ என்ற படத்தை சொந்தமாக தயாரித்தனர். அதில் சுரேஷ்மேனன் கதா நாயகனாக நடித்தார். ...

Read More »

புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை!

சிவாஜி, வாணி ஸ்ரீ, பாலாஜி, சிஐடி சகுந்தலா நடிப்பில் வெளியான ‘வசந்த மாளிகை’ திரைப்படம் மீண்டும் புதிய பரிமாணத்தில் வெளியாக இருக்கிறது. சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ ஜோடியாக நடித்த காலத்தால் அழியாத காதல் காவியம் ‘வசந்த மாளிகை’ திரைப்படம். பாலாஜி, சி.ஐ.டி.சகுந்தலா ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அன்றைய கால கட்டத்தில் கலரில் வந்து வெள்ளி விழா கொண்டாடிய படமிது. இதில் கே.வி.மகாதேவன் இசையில், கவியரசு கண்ணதாசன் எழுதிய, மயக்கம் என்ன…, கலைமகள் கைபொருளே…, இரண்டு மனம் வேண்டும்…, ஏன் ஏன் ஏன்… ...

Read More »

அமெரிக்காவில் 25 வருடம் காவலாளியாக பணிபுரிந்தேன் – அரங்கேற்றம் நடிகை பிரமிளா

நடிப்புக்கு முழுக்குபோட்ட பின் அமெரிக்காவில் 25 வருடம் காவலாளியாக ( செக்யூரிட்டியாக )பணிபுரிந்ததாக அரங்கேற்றம் படத்தில் நடித்த நடிகை பிரமிளா தெரிவித்துள்ளார். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அரங்கேற்றம் படம் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை பிரமிளா. அந்த படத்தில் குடும்ப சூழ்நிலை காரணமாக பாலியல் தொழிலில் ஈடுபடும் வேடத்தில் நடித்தார். இந்த வேடம் சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும் பிரமிளாவின் நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தது. பிரமிளா தொடர்ந்து கதாநாயகி, கவர்ச்சி வேடம், வில்லி என பல படங்களில் நடித்தார். மலையாளத்தில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். ...

Read More »

மதுவுக்கு எதிரான ‘ஏந்திரு அஞ்சலி ஏந்திரு’!

மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாடல் ஒன்றை பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து வெளியிட்டுள்ளார். இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்தர் அதை பாடியுள்ளார். மதுக்கடைகளை மூட வலியுறுத்தி மாணவர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். விழிப்புணர்வு பிரசாரங்களையும் நடத்துகின்றனர். ஆனாலும் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. ‘படிப்படியாக மதுவிலக்கு’ என அறிவித்து கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதாக தெரிவித்த தமிழக அரசும் வாக்குறுதியை மறந்து விட்டது. இந்நிலையில் கவிஞர் வைரமுத்துவின் மகனும் பாடலாசிரியருமான கபிலன் மதுவுக்கு எதிராக, ‘ஏந்திரு ...

Read More »

பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்!

‘சொப்பன சுந்தரி நான்தானே’ என்ற பாடல் மூலம் மிகவும் பிரபலமான பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அக்டோபர் மாதம் திருமணம் நடக்க இருக்கிறது. பிரபல சினிமா பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி. பார்வையற்றவரான இவர் மலையாள பட உலகில் அதிகம் பாடல்களை பாடியுள்ளார். பிருதிவிராஜ் நடித்த ஜே.சி.டேனியல் படத்தில் இடம்பெற்ற காற்றே காற்றே என்ற பாடல் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். விக்ரம் பிரபு நடித்து திரைக்கு வந்த ‘வீர சிவாஜி’ படத்தில் பாடிய ‘சொப்பன சுந்தரி நான்தானே’ பாடல் அவரை மேலும் பிரபலப்படுத்தியது. என்னமோ ...

Read More »

தமிழ் திரைப்பட விளம்பரங்களில் ஆங்கில சொற்கள் இடம்பெறக் கூடாது!

சினிமா விளம்பரங்களில் ஆங்கிலச் சொற்கள் இடம்பெறச் செய்வதை திரைத் துறையினர் தவிர்க்க வேண்டும் என இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளி வர உள்ள ‘அடங்காதே’ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத் தில் நடைபெற்றது. நிகழ்ச்சி யில் தங்கர் பச்சான் பேசிய தாவது: சமீப காலமாக நாளிதழ்களிலும், சமூக வலைதளங்களிலும் சினிமா பட விளம்பரங்களைப் பார்க் கிறேன். படத்தின் பெயர் மட்டும் தான் தமிழில் இடம்பெற்றிருக் கிறது. படத்தில் பணிபுரிந்துள்ள தொழில்நுட்பக் கலைஞர்கள் தொடங்கி மற்ற அனைத்தும் ஆங் ...

Read More »

ஷாரூக்கான் மகனுக்கு ஜோடியாகும் ஸ்ரீதேவியின் இளைய மகள்!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், ஹிந்தியில் வெளியான தடக் படத்தில் அறிமுகமானார். இஷான் கத்தாருக்கு ஜோடியாக அவர் நடித்த அந்த படம் வெற்றி பெற்றது. இந்நிலையில், அடுத்தபடியாக ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷிகபூரும், பாலிவுட் பட இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தயாரிக்கும் புதிய படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார். இந்த படத்தில் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் நாயகனாக அறிமுகமாகப்போகிறாராம். இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் நிலையில், தற்போது தீவிரமாக கதை கேட்டு வருகிறார் கரண் ஜோஹர்.

Read More »

நயன்தாராவை ஏமாற்றிய படம்!

அறம், டோரா படங்களுக்குப் பிறகு நயன்தாரா கதையின் நாயகியாக நடித்து வெளியான படம் கோலமாவு கோகிலா. இந்த படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தபோதும், தமிழ்நாட்டில் இப்படத்திற்கு ஓப்பனிங் இருந்தது. இந்நிலையில், கடந்த 31-ந்திகதி அன்று கோ கோ கோகிலா என்ற பெயரில் இப்படம் தெலுங்கில் வெளியிடப்பட்டது. ஆனால் நயன்தாராவின் நடிப்புக்கு கைதட்டல் கிடைத்தபோதும், படத்திற்கு வரவேற்பு இல்லையாம். அந்த வகையில், தெலுங்கில் இப்படம் பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த நயன்தாராவிற்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.

Read More »

புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்!

பல படங்களில் பிசியாக நடித்து வரும் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் இன்று முதல் புதிய உறுதி ஒன்றை எடுத்துள்ளார். இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் தற்போது கதாநாயகனாக பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது இவரது நடிப்பில் ஐயங்கரன், ஜெயில், வாட்ச்மேன், 4 ஜி, அடங்காதே, 100% காதல் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், சமுதாயத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். ஜல்லிக்கட்டு, காவிரி மேலாண்மை, ஸ்டெர்லைட் ஆலை மூடுதல் உள்ளிட்ட போராட்டங்களில் கலந்துக் கொண்டு ...

Read More »