திரைமுரசு

கௌரவ தோற்றத்துக்கு ரூ.13 கோடி வாங்கும் தீபிகா!

பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே, கௌரவ வேடத்தில் நடிப்பதற்காக ரூ.13 கோடி வரை சம்பளம் பேசியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தீபிகா படுகோவின் கணவரும் நடிகருமான ரன்வீர் சிங் நடிக்கும் 83 படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இது 1983ல் இந்தியா கிரிக்கெட் அணி உலக கோப்பை வென்ற சம்பவத்தை தழுவி உருவாகும் படம். இதில் கபில்தேவ் கேரக்டரில் ரன்வீர் சிங் நடிக்கிறார். ரன்வீரின் மனைவியாக நடிக்க தீபிகா படுகோனேவிடம் பேசப்பட்டது. சிறு வேடம் என்பதால் அவர் நடிக்க மறுத்தார். இந்நிலையில் ரூ.13 கோடி ...

Read More »

அரை வாளி தண்ணீருக்கு அரை மணி நேரம் காத்திருக்கிறேன்!

பட விழாவில் கலந்துக் கொண்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் அரை வாளி தண்ணீருக்கு அரை மணி நேரம் காத்திருக்கிறேன் என்று வேதனையுடன் பேசியிருக்கிறார். யோகிபாபு நடிப்பில் வெளியாக இருக்கும் ‘கூர்கா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பேசியதாவது:- ‘தங்கம், பிளாட்டினத்தை விட தண்ணீர் மிகவும் விலை உயர்ந்தது. தண்ணீர் பற்றாக்குறை தற்போது அதிக அளவில் உள்ளது. அதற்கு காரணம் நாம் தான். இப்போதாவது தண்ணீர் சேகரிப்பது தொடர்பாக நல்ல வி‌ஷயங்களை நாம் செய்ய முயற்சி ...

Read More »

2-வது திருமணம் செய்து கொண்டது ஏன்? – பிரகாஷ்ராஜ்

2-வது திருமணம் செய்து கொண்டது குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் விளக்கமளித்துள்ளார். தந்தையர் தினத்தையொட்டு நடிகர் பிரகாஷ்ராஜ் அளித்துள்ள பேட்டி வருமாறு:- “சொந்த வாழ்க்கையில் தந்தையின் பங்கு முக்கியம். எனக்கு 4 குழந்தைகள். அதில் ஒரு குழந்தை இறந்து விட்டது. குழந்தைகளுக்கு வெளி உலகம் நிறைய கற்று கொடுக்கிறது. அவர்களை இப்படித்தான் வாழ வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது. சுதந்திரம் கொடுத்தால் கெட்டுப்போவார்கள் என்ற பயம் பல பெற்றோர்களுக்கு இருக்கிறது. குழந்தைகள் மீது நம்பிக்கை இல்லாதபோது பயம் வருகிறது. குழந்தைகளை பொறுப்பாக வளர்த்து அவர்கள் ஆசைகளை ...

Read More »

கதிர், சூரி இணைந்து உருவாக்கும் சர்பத்!

பரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து நடிகர் கதிர், காமெடி நடிகர் சூரியுடன் இணைந்து சர்பத் என்னும் படத்தில் நடித்து வருகிறார். பரியேறும் பெருமாள் வெற்றிக்குப் பிறகு கதிர் தற்போது விஜய்யுடன் ‘தளபதி 63’ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ‘சர்பத்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார் – வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்கும் ‘சர்பத்’ படத்தை பிரபாகரன் இயக்கி வருகிறார். இதில் கதிர் உடன் முதல் முறையாக சூரி இணைந்து நடிக்கிறார். கதாநாயகியாக ரகசியா ...

Read More »

சர்வதேச படவிழாவில் திரையிடப்பட உள்ள ஜி.வி. பிரகாஷ் திரைப்படம்!

22வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவிற்கான ‘சர்வதேச பனோரமா’ பிரிவில் ஜிவி பிரகாஷ் நடித்த திரைப்படம் தேர்வாகியுள்ளது. ராஜீவ் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஜிவி பிரகாஷ், அபர்ணா பாலமுரளி மற்றும் பலர் நடித்த படம் ‘சர்வம் தாள மயம்’. இந்த படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட்டானது. இந்நிலையில் இந்த படம்  2019ம் ஆண்டுக்கான 22வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவிற்கு ‘சர்வதேச பனோரமா’ பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ...

Read More »

ஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், தற்போது சிக்சர் படத்திற்காக ஜிப்ரான் இசையில் ஒரு பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். சிக்சர் படத்தில் வைபவ் ரெட்டி, பல்லாக் லால்வானி, சதீஷ், ராதாரவி உள்பட பலர் நடித்து வருகிறார்கள். சாச்சி என்பவர் இயக்கி வரும் இப்படத்திற்கு பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

Read More »

விஜய் சேதுபதியுடன் இணையும் பிரபல நடிகை!

நடிகர் விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை முதல் முறையாக இணைந்து நடிக்க இருக்கிறார். விஜய் சேதுபதி அடுத்ததாக எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளர் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இன்று பழனியில் துவங்கி இருக்கிறது. சந்திரா ஆர்ட்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை எஸ்.பி.ஜனநாதன் க்ளாப் அடித்து தொடங்கி வைத்தார். கிறிஸ்துமஸ், புத்தாண்டு வருடம், காதல், இசை ...

Read More »

ஒருத்தர் மேல விஸ்வாசத்தை காட்ட இன்னொருத்தர ஏன் அசிங்கப்படுத்திறீங்க?

எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் – வித்யா பாலன் – ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி வரும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி உள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 59-வது படமாக உருவாகி வருகிறது ‘நேர்கொண்ட பார்வை’. இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது. இதில் அஜித் ஜோடியாக வித்யா பாலன், முக்கிய வேடங்களில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங், அஸ்வின் ராவ், சுஜித் சங்கர், ...

Read More »

ஒரு பாடலுக்கு நடனம் ஆடியது ஏன்?

திரையுலகில் கதாநாயகர்களை விட, கதாநாயகிகள் மத்தியில் கடும் போட்டி இருந்து வருகிறது.போட்டிகள் அதிகமாக இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி, ‘நம்பர்-1’ இடத்தில் நயன்தாரா இருந்து வருகிறார். இரண்டாவது இடத்துக்கான கதாநாயகிகள் அடிக்கடி மாறி வருகிறார்கள். இவர்களில் தமன்னாவும் ஒருவர். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களிலும் அவர் நடித்து வருகிறார். இந்த நிலையில், சிரஞ்சீவி நடித்து வரும் ‘சாயிரா நரசிம்ம ரெட்டி’ என்ற தெலுங்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துக் கொண்டிருக்கிறார். ஒரே ஒரு பாடலுக்கு தமன்னா நடனம் ஆடுகிறார். வேகமாக வளர்ந்து ...

Read More »

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவராக பாரதிராஜா !

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவராக இயக்குனர் பாரதிராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் இயக்குனர்களுக்காக தமிழ் இயக்குனர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. விக்ரமன் தலைவராகவும், ஆர்கே.செல்வமணி பொதுசெயலாளராகவும் பேரரசு பொருளாளராகவும் இருந்து வருகின்றனர். இயக்குனர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை வடபழனியில் உள்ள தனியார் திரையரங்கில் நடைபெற்றது. இதில் தலைவர் விக்ரமனும் பொதுசெயலாளர் ஆர்கே.செல்வமணியும் ஆண்டறிக்கையை வாசித்து சங்கத்தின் நிர்வாகம் செய்த பணிகளை பட்டியலிட்டனர். பின்னர் பொருளாளர் பேரரசு ஆண்டு கணக்கு அறிக்கையை தாக்கல் செய்தார். பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகத்தின் ...

Read More »