அவுஸ்திரேலியமுரசு

டிரோன்களை செயலிழக்கச் செய்யும் புதிய நவீன ரக துப்பாக்கி !

ஆஸ்திரேலியாவில் டிரோன்களை செயலிழக்கச் செய்யும் புதிய நவீன ரக துப்பாக்கிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. உரிய அனுமதியின்றி பறக்கவிடப்படும் டிரோன்களை செயலிழக்கச் செய்யும் வகையில் ஆஸ்திரேலிய இராணுவம் புதிய துப்பாக்கியினை உருவாக்கியுள்ளது. இந்த துப்பாக்கி குண்டுகளுக்கு பதில் கதிர் வீச்சுகளை பயன்படுத்துகிறது. தடை செய்யப்பட்ட இடங்களை படம்பிடிப்பது, சிறிய ரக குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்துவது என டிரோன்களின் பயன்பாடு தவறான வழிக்கு மாற்றப்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்தவே இந்த கதிர்வீச்சு துப்பாக்கிகள் ஆஸ்திரேலிய இராணுவத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி மூலம் 10 ஆயிரம் அடி தூரத்தில் ...

Read More »

மெல்பேர்னில் வீட்டு முன்பணத்தில் மோசடி மோசடி செய்த தம்பதி!

மெல்பேர்ன் வீடு கட்டுவதற்காக வாடிக்கையாளர்கள் செலுத்திய முன்பணத்தில் மோசடி செய்த தம்பதியினருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. இவர்கள் இருவரும் 2015 ஆம் ஆண்டு முதல் இந்த மோசடிக்குற்றத்தை மேற்கொண்டுவந்துள்ளனர். நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதையடுத்து கணவனுக்கு மூன்று வருட சிறையும் மனைவிக்கு 20 மாத சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. வீடு விற்பனை முகவரான Nguyen, வீட்டுத்தரகு வர்த்தகத்தில் தனது கணவன் Ngo-ஐயும் பங்குதாரராக இணைத்து பணியாற்றியிருந்தார். இவர்களின் ஊடாக வாடிக்கையாளர்கள் வீடு கட்டுவதற்கு வைப்புச்செய்த பணத்தை இன்னொரு வங்கிக்கணக்கிற்கு மாற்றிக்கொண்டனர். இதன் மூலம் இந்த மோசடியை செய்திருக்கிறார்கள் என்றும் ...

Read More »

அவுஸ்திரேலியா தடுத்து வைத்துள்ள ஈழ அகதியின் வேண்டுகோள்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால்  கடந்த ஐந்து வருடங்களிற்கு மேலாகதடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழ  தமிழர் ஒருவர் தன்னை விடுதலை செய்து பிரிட்டனில் உள்ள சகோதரியிடம் செல்வதற்கு அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். 2013 முதல் மனஸ் தீவு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள  திரவியராஜா சுப்பிரமணியம் என்ற 37 வயது இலங்கை தமிழரே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். பிரிட்டனில் உள்ள தனது குடும்பத்தினருடன் இணைவதற்கு பிரிட்டனின் உள்துறை அமைச்சு அனுமதி மறுக்கின்றது என பிரிட்டனின்  குடிவரவு தீர்ப்பாயத்திற்கு  அவர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட நபர் இலங்கையில் அனுபவித்த சித்திரவதைகள் ...

Read More »

மனுஸ் தீவில் தனக்குத்தானே தீமூட்டி கொண்ட அகதி!

மனுஸ் தீவில் அகதி ஒருவர் தனக்குத்தானே தீமூட்டி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனை தொடர்ந்து உடனடியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை மூலம் அவர் உயிராபத்து எதுவுமின்றி காப்பாற்றப்பட்டுள்ளார் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சோமாலியாவை சேர்ந்த 30 வயதுடைய அகதி ஒருவரே இவ்வாறு தீக்குளித்தார். அங்குள்ள அகதிகள் நல அமைப்பு வட்டாரங்களின் ஊடாக இந்த தகவல் தெரியவருகிறது. அவுஸ்திரேலியாவில் லிபரல் கட்சி கூட்டணி ஆட்சி பீடம் ஏறியது முதல் இதுவரை சுமார் 70 தற்கொலை முயற்சி சம்பவங்கள் ...

Read More »

அவுஸ்திரேலிய முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளின் எண்ணிக்கை வெளியானது!

அவுஸ்திரேலியாவின் அகதிகள் பிராந்திய தடுப்பு முகாம்களில் 58 இலங்கையர்கள் மாத்திரமே தங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அவுஸ்திரேலியாவின் உள்துறை திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. அவர்களில் 43 பேர் நவுறு தீவிலும், 15 பேர் பப்புவா நியுகினியிலும் உள்ளனர். அதேநேரம் ஆட்கடத்தல் செயற்பாடுகளை தடுப்பதற்கு இலங்கை அரசாங்கத்துடன் ஒத்துழைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு பிரவேசிக்கின்ற எந்த நபரும், அங்கு குடியேற்றப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய உள்துறை திணைக்களத்தின் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார். இவ்வாறு படகு மூலம் பிரவேசிக்கின்ற இலங்கையர்கள், ...

Read More »

ஆஸ்திரேலிய பெண் சுட்டுக்கொலை – அதிகாரிக்கு 12½ ஆண்டு சிறை!

ஆஸ்திரேலிய பெண்ணை சுட்டுக்கொன்றது தொடர்பாக அமெரிக்க காவல் துறை அதிகாரிக்கு 12½ ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அமெரிக்காவில் காவல் துறை அதிகாரியாக பணியாற்றி வந்தவர், முகமது நூர். இவர் மினியா போலிஸ் நகரில் 2017-ம் ஆண்டு, ஜூலை மாதம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரது வாகனத்தை நோக்கி வந்த ஜஸ்டின் ரூஸ்சைக் டாமண்ட் என்ற ஆஸ்திரேலிய பெண்ணை அவர் சுட்டுக்கொன்று விட்டார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜஸ்டின் ரூஸ்சைக் டாமண்ட், தனது வீட்டின் பின்புறம் நடந்த ...

Read More »

அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு அச்சுறுத்தல்?

அவுஸ்திரேலியாவில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய கல்வித்திணைக்களத்திடம் கல்வி அமைச்சர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். அவுஸ்திரேலியாவிலுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்களை இலக்கு வைத்து பல குற்றச்செயல்கள் இடம்பெறுவதாக அண்மையில் வெளிவந்த தகவல்களை அடுத்து இந்தக்கோரிக்கை அமைச்சு மட்டத்திலிருந்து எழுந்திருக்கிறது. குறிப்பாக மெல்பேர்ன் Monash பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்களை இலக்கு வைத்து கடந்த மூன்று வாரங்களில் 12 ற்கும் மேற்பட்ட திருட்டுச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் இந்தவாரம் ...

Read More »

அவுஸ்திரேலிய காவல் துறைக்கு காத்திருந்த அதிர்ச்சி!

தாய்லந்திலிருந்து கடத்தி வரப்பட்ட 840 மில்லியன் டொலர் மதிப்புள்ள ‘Ice’ போதைப்பொருள் அவுஸ்திரேலியாவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்தப் போதைப்பொருள் ஒலிபெருக்கிகளுக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது. மெல்பர்ன் துறைமுகத்துக்குள் கடத்தப்பட்ட அந்த ஒலிபெருக்கிகளில் 1.6 டன் ‘மெத்’தும் (meth) 37 கிலோகிராம் போதைமிகு அபினும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவுஸ்திரேலியாவில் பறிமுதல் செய்யப்பட்ட ஆக அதிக அளவு ‘மெத்’ இதுதான் என்று எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர். X-ray எனப்படும் ஊடுகதிர்ச் சோதனையின்போது, வழக்கத்துக்கு மாறாக ஏதோ இருப்பதைப் பார்த்த அதிகாரிகள், ஒலிபெருக்கியைத் திறந்து பார்த்தபோது அதற்குள் ...

Read More »

அவுஸ்திரேலிய துப்பாக்கிதாரி யார்?

கடந்த மூன்று  நாட்களுக்கு முன்னர் டார்வின் பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் துப்பாக்கிதாரி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. டார்வினில் தாக்குதல் நடத்திய நபர் நகரத்தின் மதிப்புமிக்க குடும்பத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. அவர் சில நாட்களுக்கு முன்னர் தான் வேலைக்கு ஒழுங்காக சமூகமளிக்காத காரணத்திற்காக பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்றும் செய்திகள் தெரிவித்துள்ளன. குறிப்பிட்ட நபர் பணிநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து அவரது தாயார் வேலைத்தளத்துக்கு அழைப்பெடுத்து தனது மகனுக்கு இன்னொரு சந்தர்ப்பம் வழங்கி உதவுமாறு கெஞ்சியதாகவும் கூறப்படுகிறது. 45 வயதான குறிப்பிட்ட நபர் இந்த வருட ஆரம்பத்தில் ...

Read More »

பார்வையற்ற தமிழ் அகதியை ஓன்பது வருடங்களாக தடுத்துவைத்துள்ளது அவுஸ்திரேலியா!

பார்வையற்ற மனோநிலை பாதிக்கப்பட்ட தமிழ் அகதியொருவரை ஒன்பது வருடங்களாக  அவுஸ்திரேலியா தடுத்து வைத்திருப்பதற்கு தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள  ஐநா குறிப்பிட்ட தமிழ் அகதியை உடனடியாக விடுதலை  செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கியநாடுகளின் குழுவொன்று இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. ஒரு தசாப்தகாலமாக சிறையில் வாடும்  கண்பார்வையற்ற மனோநிலை பாதிக்கப்பட்ட தமிழ் அகதியை அவுஸ்திரேலியா உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என ஐநா தெரிவித்துள்ளது. ஒன்பது வருடங்களாக நபர் ஒருவரை தடுத்து வைத்திருப்பதன் மூலம் அவுஸ்திரேலியா  சர்வதேச சட்டங்களை மீறியுள்ளது என ஐநா தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட ...

Read More »