அவுஸ்திரேலியமுரசு

கிறிஸ்துமஸ் தீவில் இருக்கும் தடுப்பு முகாமை மீண்டும் திறப்பதாக 55 மில்லியன் டாலர்கள் செலவாகும் !

ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கிறிஸ்துமஸ் தீவில் இருக்கும் தடுப்பு முகாமை மீண்டும் திறப்பதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ள நிலையில், இதற்காக 55 மில்லியன் டாலர்கள் செலவாகும் எனக் கூறப்பட்டுள்ளது. கடந்த வாரம், ஆஸ்திரேலியாவின் Yongoh Hill குடியேற்றத் தடுப்பு மையத்திலிருந்து கிறிஸ்துமஸ் தீவு முகாமிற்கு 15 பேர் மாற்றப்பட்டிருந்தனர். முதலில் இவர்களை கிறிஸ்துமஸ் தீவுக்கு மாற்றுவதற்கான முயற்சி மையத்தில் ஏற்பட்ட போராட்டத்தினால் தற்காலிக நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர் அதற்கு அடுத்த நாளே தீவு முகாமிற்கு மாற்றப்படுபவர்களுக்கு மேலோட்டமான மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதாகக் கூறுகிறார் அகதிகள் ...

Read More »

தமிழர் தேசமும் ஒன்றுபட்டே நிற்கின்றது – கஜேந்திரகுமார்

ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் தங்களது கட்சிக்கு நாட்டு மக்களின் ஆணை வழங்கியிருப்பதாகக் குறிப்பிட்டார். அவரது கட்சிக்கு மக்கள் ஆணை கிடைத்திருக்கிறது என்பது சரியாக இருந்தாலும், இந்த ஆணை வடக்கு – கிழக்கிலிருந்தும் கிடைத்திருக்கிறது என்று சேர்த்துக் கூறுவது சரியானதல்ல. இவ்வாறு சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி கோத்தாபாய இராஜபக்ச ஆற்றிய உரைக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழங்கிய பதிலுரையில் குறிப்பிட்டார். அவரது உரையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: தமிழ் மக்களின் உரிமை அங்கீகரிக்கக்கோரியே வடக்கு கிழக்கில் மக்கள் ஏகோபித்த ஆணை ...

Read More »

அகதிகளின் உரிமைகளை மறுக்கும் ஆஸ்திரேலிய அரசு………!

ஆஸ்திரேலிய அரசினால் பப்பு நியூ கினியா மற்றும் நவுருத்தீவுக்கு அனுப்பப்பட்ட அகதிகளின் உரிமைகளைப் பாதுகாக்க ஆஸ்திரேலியா தொடர்ந்து மறுப்பதாக ஐ.நா. வுக்கு சமர்பித்த அறிக்கையில் ஆம்னெஸ்டி இண்டர்நேசனல் எனும் மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. ஐ.நா.வின் அனைத்துலக காலாந்தர மீளாய்வு (Universal Periodic Review) விரைவில் நடக்கவிருக்கும் நிலையில், மீளாய்வுக்காக அறிக்கை சமர்பித்துள்ள ஆமென்ஸ்டி அமைப்பு, ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியவர்களும் அகதிகளும் தொடர்ந்து மனித உரிமை மீறல்களுக்காக ஆளாவதாக கவலைக் கொண்டுள்ளது. பாதுகாப்புத் தேடி ஆஸ்திரேலியாவுக்கு வந்தவர்களை குறிப்பாக படகு வழியாக தஞ்சமடைந்தவர்களை ...

Read More »

ஆஸ்திரேலியாவின் இறைமை நடவடிக்கை என்னென்ன?

ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோத வர முயல்பவர்கள் தொடர்பாக எடுக்கப்படும் எல்லைகள் இறைமை நடவடிக்கையின் மூலம், கடந்த ஜூலை 1 முதல் ஜூலை 31 வரை சட்டவிரோத பயணங்கள் தொடர்பில் எவ்வித கைதும் நடக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ஒருவர் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு மையங்கள் தீவு நாடுகளான பப்பு நியூ கினியா, நவுருத்தீவில் அமைந்திருக்கின்றன. இவை Regional Processing மையமாகவும் அறியப்படுகின்றன. நவுருவில் உள்ள இந்த மையத்தில் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் 12,000 டன் அம்மோனியம் நைட்ரேட் தொழில்துறை நகரம்!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பாக இயங்கும் தொழில்துறை நகரம் ஒன்றில் சேமிக்கப்பட்டிருக்கும் 12,000 டன் அம்மோனியம் நைட்ரேட் தொடர்பில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. குடியிருப்புகளுக்கு அருகாமையில் இந்த ரசாயன கிடங்கு அமைந்துள்ளதால், பெய்ரூட் போன்ற பயங்கரமான வெடிவிபத்து எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்ற அச்சத்தில் இங்குள்ள மக்கள் உள்ளனர். லெபனானில் செவ்வாய்க்கிழமை 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்ததில் குறைந்தது 135 பேர் இறந்துள்ளனர், மேலும் 5,000 பேர் காயங்களுடன் தப்பியுள்ளனர். அதே சூழல் அவுஸ்திரேலியாவின் பரபரப்பாக இயங்கும் தொழில்துறை நரகம் ஒன்றிலும் தற்போது உருவாகியுள்ளது. சிட்னியின் ...

Read More »

இந்தியர்களுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் சுதந்திர தின வாழ்த்து

இந்திய சுதந்திர தினத்தையொட்டி, உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஆஸ்திரேலியாவின் நீண்டகால நட்பு நாடு இந்தியா. இரு நாட்டு உறவுகள், நம்பிக்கை மற்றும் மரியாதையை அடித்தளமாக கொண்டு எழுப்பப்பட்டுள்ளது. இந்த நட்புறவு ஆழமானது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆஸ்திரேலியாவுக்கு வந்தபோது, நமது கலாசாரம் வேறுபட்டிருந்தாலும், நாம் ஒரே விஷயங்களில் நம்பிக்கை வைத்துள்ளோம் என்று கூறினேன். இந்த உறவை பிரதமர் மோடியும், நானும் மேலும் ஒருபடி உயர்த்தி உள்ளோம்.  இவ்வாறு அவர் ...

Read More »

ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய கருணையின் அடிப்படையில் அனுமதி

கர்நாடகா மாநிலம் மைசூரில் உள்ள உடல்நலப் பாதிக்கப்பட்ட தனது குடும்ப உறுப்பினரைக் கவனித்துக் கொள்ள ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பியிருந்த 31 வயது சய்தரா சங்கர், கடந்த மார்ச் 20ம் தேதி கொரோனா சூழல் காரணமாக ஆஸ்திரேலிய எல்லைகள் மூடப்பட்டதால் ஆஸ்திரேலிய திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.  இந்த தடைக்காலத்தில் ஆஸ்திரேலியாவில் குடியுரிமைக் கொண்டவர்களும் நிரந்தரமாக வசிப்பதற்கான உரிமைக் கொண்டவர்களும் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் ஆஸ்திரேலியாவில் தற்காலிக விசா பெற்ற சய்தரா சங்கர் ஆஸ்திரேலியா திரும்ப அனுமதிக்கப்படவில்லை. “தனது கணவனிடமிருந்து நான்கு வயது மகனிடமிருந்தும் பிரிந்திருப்பதை ...

Read More »

அவுஸ்ரேலியாவில் 10 லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பாதிப்பு

ஆஸ்திரேலியாவில் கொரோனா தாக்கத்திற்கு இடையில், தற்காலிக விசாவில் அந்நாட்டிலுள்ள சுமார் 10 லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய அரசால் வழங்கப்படும் JobKeeper மற்றும் JobSeeker போன்ற உதவித்திட்டங்களிலும் இத்தொழிலாளர்கள் தவிர்க்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் உள்ள உணவக உரிமையாளர் ஒருவர், வேலைக்காக வந்த 470 விண்ணப்பங்களில் இரு விண்ணப்பங்கள் மட்டுமே ஆஸ்திரேலியர்களிடம் இருந்து வந்ததாகக் குறிப்பிடும் அளவிற்கு அங்கு தற்காலிக விசாவில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நிலை மோசமானதாக இருக்கின்றது. அதாவது சுமார் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட வேலைக்கான விண்ணப்பங்கள் தற்காலிகமாக அங்குள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களால் ...

Read More »

கிறிஸ்துமஸ் தீவு தடுப்பு முகாமைத் திறக்கும் ஆஸ்திரேலியாவின் முடிவு: ‘அரசியல் பிரசாரம்’

ஆஸ்திரேலியாவின் பெருநிலப்பரப்பிற்கு வெளியே உள்ள கிறிஸ்துமஸ் தீசு தடுப்பு முகாமைத் திறக்கும் ஆஸ்திரேலிய அரசின் முடிவு தஞ்சக்கோரிக்கையாளர்களை குற்றவாளிகளாக அடையாளப்படுத்தும் அரசியல் ரீதியான பிரசார செயல் என முன்னாள் ஆஸ்திரேலிய தடுப்பு முகாம் அகதியும் குர்து பத்திரிகையாளருமான பெஹ்ரூஸ் பூச்சானி விமர்சித்துள்ளார். முன்பு, மனுஸ் தீவில் செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டிருந்த இவர் ஜூலை 2019 நியூசிலாந்து பயணத்திருந்த நிலையில் சமீபத்தில பூச்சானியின் தஞ்சக்கோரிக்கை நியூசிலாந்தில் ஏற்கப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டு ஒரு மாதக் காலம் கிறிஸ்துமஸ் தீவில் வைக்கப்பட்டிருந்த பூச்சானி, ...

Read More »

ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவு தடுப்பு முகாம்

ஆஸ்திரேலியாவின் பெருநிலப்பரப்பிற்கு அப்பால் அமைந்துள்ள கிறிஸ்துமஸ் தீவு தடுப்பு முகாம் மீண்டும் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதை ஆஸ்திரேலிய எல்லைப்படை உறுதிச்செய்துள்ளது. ஆஸ்திரேலியாவிலிருந்து 1500 கிலோ மீட்டர்களுக்கு அப்பால் அமைந்திருக்கும் இத்தீவில் உள்ள முகாம் திறக்கப்படுவதன் மூலம் ஆஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் உள்ள இட நெருக்கடி பிரச்னையை சமாளிக்க இயலும் என ஆஸ்திரேலிய எல்லைப்படை கருதுகின்றது. கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக எல்லைகள் .மூடப்பட்டிருப்பதாலும் சர்வதேச விமானங்கள் குறைக்கப்பட்டிருப்பதாலும் தடுப்பில் உள்ள வெளிநாட்டினரை நாடுகடத்துவது .தடைப்பட்டிருப்பதாக எல்லைப்படை தெரிவித்துள்ளது. இந்த சூழலில், தடுப்பு முகாம்களில் ...

Read More »