அவுஸ்திரேலியமுரசு

பிரியா – நடேஸ் குடும்பத்தை நியூசிலாந்து / அமெரிக்காவில் குடியமர்த்த திட்டம்!

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் கிறிஸ்மஸ் தீவு அகதிகள் முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் பிரியா – நடேஸ் குடும்பம் நியூசிலாந்து அல்லது அமெரிக்காவில் குடியமர்த்தப்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த குடும்பத்தை எங்கே குடியமர்த்துவது என்பது தொடர்பில் உள்துறை அமைச்சர் Karen Andrews-இன் அலுவலகம் ஆராய்ந்துவருவதாகவும், ஆனால் இவர்களை அவுஸ்திரேலியாவில் குடியமர்த்துவது தொடர்பில் ஆராயப்படவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சர் Marise Payne தெரிவித்துள்ளார். Nine Radio-வுக்கு வழங்கிய நேர்காணலில் இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் Marise Payne, குறித்த குடும்பத்தை அமெரிக்காவில் அல்லது நியூசிலாந்தில் குடியமர்த்துவதற்கான வாய்ப்பு ...

Read More »

அவுஸ்திரேலியாவில் ஆபத்தான நபராக மாறிய இலங்கையர்

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் தற்போது பரவத் தொடங்கியுள்ள கொரோனா வைரசிற்கு இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா சென்ற நபரே காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மே 8 ம் திகதி இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா சென்ற நபர் ஒருவர் மூலமே அங்கு வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 40 வயது நபர் ஒருவரை சோதனைக்கு உட்படுத்திய வேளை அவர் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நபர் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா திரும்பியதை தொடர்ந்து ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மே 23 ம் ...

Read More »

உடல்நிலை பாதிப்பு தரிணிகா கிறிஸ்மஸ் தீவிலிருந்து பேர்த் கொண்டு செல்லப்பட்டுள்ளார்

அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த நடேஸ்பிரியா தம்பதியினரின் புதல்வி தரிணிகா உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பேர்த்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். கடந்த பத்து நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட அவர் நேற்று கடும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

Read More »

விக்டோரியாவில் 3 சிறுவர்கள் உட்பட 9 பேருக்கு கோவிட் தொற்று!

விக்டோரியாவில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக ஒன்பது பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவர்கள் அனைவரும் ஏற்கனவே இனங்காணப்பட்ட பரவல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் தலைமை மருத்துவ அதிகாரி Brett Sutton அறிவித்தார். கிட்டத்தட்ட 25 ஆயிரம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 11 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்ததாக இன்று காலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அறிவிக்கப்பட்டிருந்தநிலையில் இவர்களில் இருவர் குறித்த அறிவிப்பு நேற்றையதினம் வெளியாகியிருந்தது. ஏனைய 9 பேரில் 3 சிறுவர்களும் ஒரு Arcare Maidstone முதியோர் பராமரிப்பு பணியாளரும் அடங்குகின்றனர். அதேநேரம் புதிதாக தொற்றுக்கண்டவர்களில் ...

Read More »

மெல்பன் நகரின் முடக்க நிலை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிப்பு

விக்டோரியாவில் சமூகப்பரவல் ஊடாக புதிதாக ஆறு பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மெல்பனுக்கான முடக்கநிலை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்படவுள்ளதாக acting premier James Merlino அறிவித்துள்ளார். புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள எவரும் முதியோர் பராமரிப்பு இல்லங்களைச் சேர்ந்தவர்கள் அல்லவென தெரிவிக்கப்படுகிறது. Highlights விக்டோரியாவில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக ஆறு பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மெல்பன் பெருநகரப்பகுதி முழுவதும் முடக்கநிலை மேலதிகமாக ஒரு வாரத்திற்கு நீடிக்கப்படுகிறது. மெல்பன் கோவிட் பரவலின் ஆரம்பப்புள்ளி தெற்கு அவுஸ்திரேலியாவிலுள்ள தனிமைப்படுத்தல் விடுதியுடன் தொடர்புபடுகின்றது. அதேநேரம் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் இனவாதத்தை அதிகரித்திருக்கும் கொரோனா பெருந்தொற்று

ஈராக்கிலிருந்து வெளியேறிய முகமது அல்-கபாஜி ஆஸ்திரேலியாவில் தங்கள் குடும்பத்தினருடன் அரசியல் தஞ்சம் கோரிய போது அவரது 13 ஆகும். தன்னுடைய வாழ்நாளில் பெரும் பகுதியை ஆஸ்திரேலியாவிலேயே அவர் கழித்திருக்கிறார். இந்த நிலையில், அவரை விமான நிலையத்தில் தொடர்ந்த அடையாளம் தெரியாத நபர், அவரைப் பார்த்து, “எந்த நாட்டிலிருந்து வந்தாயோ அந்த நாட்டுக்கே திரும்பிப்போ,” எனக் கத்தியிருக்கிறார். “யாரோ ஒருவர் ஆஸ்திரேலியாவில் உள்ள என்னைப் பார்த்து வந்த இடத்திற்கு திரும்பிப்போ என்பது அவமானமாக உள்ளது,” என்கிறார் முகமது. இந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று சூழல் ஏற்கனவே ...

Read More »

மெல்போர்னில் அமுலில் உள்ள முடக்க கட்டுப்பாடு மேலும் ஒருவாரத்திற்கு நீடிப்பு

அவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாநிலம் இன்று (புதன்கிழமை) தலைநகர் மெல்போர்னில் அமுலில் உள்ள முடக்க கட்டுப்பாடுகளை மேலும் ஒரு வாரத்திற்கு நீடித்துள்ளது. பிற பிராந்தியங்களில் கட்டுப்பாடுகளை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சமீபத்திய புதிய வைரஸ் பிறழ்வை கட்டுப்படுத்தும் முயற்சியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரிப்பை அடுத்து கடந்த மாதம் 27 அன்று அமுல்படுத்தப்பட்ட முடக்க கட்டுப்பாடு நாளைய தினம் வியாழக்கிழமை இரவு முடிவடையவுள்ளது. இந்நிலையில் குறித்த கட்டுப்பாடுகள் நாளை முதல் ஜூன் 10 ஆம் திகதிவரை அமுலில் இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

Read More »

அவுஸ்திரேலிய கிரிக்கெட் தலைமை நிர்வாக அதிகாரியாக நிக் ஹாக்லி நியமனம்

அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக இங்கிலாந்தில் பிறந்த நிக் ஹாக்லி நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்கு நிக் ஹாக்லியை நியமித்ததை அவுஸ்திரேலிய கிரிக்கெட் திங்களன்று (மே 31) உறுதிபடுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்கொண்டு கடந்த பருவத்தின் சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டிகளை வெற்றிகரமாக நடத்துவதை மேற்பார்வையிடும் ஹாக்லி, 2020 ஜூன் முதல் அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றினார். கிரிக்கெட்டுக்கு முன்னர், 2012 லண்டன் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளுக்கான வணிக பேச்சுவார்த்தைகளின் தலைவராக ஹாக்லி இருந்தார். ...

Read More »

புலம்பெயர் தொழிலாளர்கள் பெரும் பங்களிப்பை செய்திருக்கின்றனர்!

ஆஸ்திரேலியாவுக்கு புதிதாக வரும் புலம்பெயர்ந்தவர்கள், அகதிகள் மீள்குடியமர ஆஸ்திரேலிய சமூகங்கள் உதவுவதாகக் கூறியிருக்கிறார் ஈழத்தமிழ் அகதியான சங்கர் காசிநாதன். தனது சொந்த அனுபவத்தில் இதைக் கூறுவதாக சங்கர் குறிப்பிட்டுள்ளார். “இலங்கையிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த எங்களது குடும்பம் மீள்குடியமர ஆஸ்திரேலியாவில் எங்கள் அருகாமையில் வசித்தவர்கள் உதவியிருக்கிறார்கள். எங்களுக்கு தேவையான பொருட்களைப் பெற, உடைகளைப் பெற, வேலைகளைப் பெற உதவியிருக்கிறார்கள். எங்களுக்கு உணவுக்கூட அளித்திருக்கிறார்கள்,” என அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், ஆஸ்திரேலியாவில் வழங்கப்படும் நல உதவிகளிலேயே வாழ நாங்கள் ஆஸ்திரேலிய வரவில்லை எனக் குறிப்பிட்டுள்ள சங்கர், ...

Read More »

ஆஸ்திரேலிய தடுப்பு முகாம் அகதிகளை ஏற்றுக்கொள்ள இன்றும் தயாராக இருக்கும் நியூசிலாந்து அரசு

ஆஸ்திரேலி தடுப்பு முகாம் அகதிகளில் ஆண்டுதோறும் 150 பேரை ஏற்றுக்கொள்ள இன்றும் தயாராக இருப்பதாக நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா- அமெரிக்கா இடையேயான அகதிகள் ஒப்பந்தத்தின் கீழான மீள்குடியேற்றம் நிறைவடைந்த பின்னர், நியூசிலாந்தின் சலுகையை ஆஸ்திரேலிய அரசு பரிசீலிக்கக்கூடும் எனக் கருதப்படுகின்றது. அதே சமயம், ஆஸ்திரேலிய பிரதமர் Scott Morrison மற்றும் நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern இடையேயான சந்திப்பில் இதுகுறித்த விவாதிக்கப்படுமா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா ஆட்சியின் இறுதிக்காலக்கட்டத்தில் கையெழுத்தான அகதிகள் ஒப்பந்தம்,ஆஸ்திரேலியாவின் ...

Read More »