அவுஸ்திரேலியமுரசு

அவுஸ்ரேலியாவில் விமானம் மூலம் தாக்குதல் நடத்த திட்டம்! சதி முறியடிப்பு!

அவுஸ்ரேலியாவில் விமானம் மூலம் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் செய்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டது. அவுஸ்ரேலியாவில் உள்ள சிட்னி நகரில் வெடி குண்டு மூலம் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுப் பிரிவு  காவல் துறைக்கு  தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து அங்கு காவல் துறையினர்  தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் சிட்னியின் புறநகரான சர்ரி ஹில்ஸ், லகெம்பா, விலேபார்க் மற்றும் பஞ்ச்பவுல் உள்ளிட்ட பகுதியில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது சந்தேகப்படும் நிலையில் இருந்த 4 பேரை பிடித்து காவல் துறையினர்   விசாரித்தனர். ...

Read More »

அவுஸ்ரேலிய குடிவரவு திணைக்களத்தின் நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருவர் தீக்குளித்துள்ளார்!

அவுஸ்ரேலிய குடிவரவு திணைக்களத்தின் நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பு தெரிவித்து சிட்னியில் நபர் தனக்குத்தானே எரியூட்டிக்கொண்டுள்ளார் சிட்னியில் குடிவரவு திணைக்களத்திற்கு அருகில் குறிப்பிட்ட நபர் தனக்குத்தானே எரியூட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.திணைக்களத்திற்கு அருகில் உள்ள லீ வீதியில் 30 வயது மதிக்கத்தக்க நபர் தன்மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட நபர் மருத்துவமனையில் கடும் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறையினர் சுமார் பத்து நிமிடங்களிற்கு மேல் அந்த நபருடன் பேச்சுவார்த்தைகைள மேற்கொண்டதாகவும் எனினும் பின்னர் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் அதிகாரிகள் ...

Read More »

உலகின் மிக பெரிய மின் சேமிப்பு கலன்!

தெற்கு அவுஸ்ரேலிய மாநிலத்திற்கென, மிகப்பெரிய மின் சேமிப்புக் கலனை நிறுவும் பணிகளில் இறங்கி உள்ளது, டெஸ்லா. மின் கார் தயாரிப்பாளரான, டெஸ்லாவின் அதிபர் எலான் மஸ்க், இதற்கான ஒப்பந்தத்தை, அந்த மாநில அரசுடன் கையெழுத்திட்டு உள்ளார். டெஸ்லா நிறுவனம், ‘பவர் வால்’ என்ற வீட்டு மின் சேமிப்புக் கலன்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், 2016ல் புயல், வெப்ப அலை ஆகியவற்றால், தெற்கு அவுஸ்ரேலிய மாநிலத்தில் மின் அமைப்புகள் சேதமடைந்தன. அப்பகுதி மக்கள், மின்சாரமின்றி பல நாட்கள் அவதிப்பட்டனர். எனவே தான், அம்மாநில முதல்வர், ...

Read More »

இரட்டை பிரஜாவுரிமை! அவுஸ்திரேலிய அரசியல் கட்சிகளிற்கு நெருக்கடி நிலை!

அவுஸ்திரேலிய அரசியல் கட்சிகளிற்கு கடந்த சில வாரங்களில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள இரட்டை பிரஜாவுரிமை விவகாரத்தில் லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஓருவர் சிக்குண்டுள்ளதை தொடர்ந்து பிரதமர் மல்கம் டேர்ன்புல் அரசாங்கத்திற்கு நெருக்கடி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிஸ்கோம் யூலியா பாங்ஸ் இரட்டை பிராஜவுரிமையை கொண்டுள்ளார் என குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிரேக்க பிரஜாவுரிமைக்குரியவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படும் பட்சத்தில் அவர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டிய நிலை ...

Read More »

அவுஸ்திரேலிய அரசாங்கம் கொள்கை ரீதியில் மனித உரிமைகளிற்கு எதிரானது !

அவுஸ்திரேலியாவின் தற்போதைய அரசாங்கம் கொள்கை ரீதியில் மனித உரிமைகளிற்கு எதிரானது என அந்நாட்டின் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் கிலியன் டிரிக்ஸ் (Gilion Tricks ) தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து இந்த வாரத்துடன் ஓய்வுபெறவுள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். பெண்களின் மனித உரிமை, பூர்வீகக்குடிகளின் மனித உரிமை, அகதிகளின் மனித உரிமை என சமூகத்தின் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர்களது மனித உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமை விவகாரங்களில் அவுஸ்திரேலியா பின்னோக்கி ...

Read More »

சிட்னியின் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்ட நபர் சுட்டுக் கொலை!

சிட்னியின் மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்ட நபர் ஓருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சிட்னியின் மத்திய பேருந்து நிலையத்திற்கான நுழைவாயிலிற்கு அருகில் காணப்படும் பூக்கடைக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாய்லாந்தை சேர்ந்த டனுகுல் மொக்மூல் என்ற நபரே இவ்வாறு காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டிற்கு பலியாகியுள்ளார். ஆயுதமுனையில் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெறுகின்றது என்ற தகவலை தொடர்ந்து அங்கு சென்ற காவல்துறையினர் பின்னர் குறிப்பிட்ட நபர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இது பயங்கரவாத சம்பவம் அல்ல என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கையில் கத்திரிகோலை ...

Read More »

அவுஸ்ரேலிய மாநிலங்களில் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் மாநிலமாக நியூ சவுத் வேல்ஸ்

அவுஸ்ரேலிய மாநிலங்களில் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் மாநிலமாக நியூ சவுத் வேல்ஸ் திகழ்கிறது என CommSec இன் State of the States (மாநிலங்களின் மாநிலம்) அறிக்கை தெரிவித்துள்ளது. இந்தநிலையில் குறித்த அறிக்கையின் பிரகாரம் வர்த்தக முதலீடு, கட்டுமானப்பணிகள், வேலையற்றோர் வீதம், சனத்தொகை வளர்ச்சி உள்ளிட்ட 8 அம்சங்களின் அடிப்படையில் கணிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நியூ சவுத் வேல்ஸ் முதலிடத்திலும் விக்டோரியா இரண்டாமிடத்திலும் ACT மூன்றாமிடத்திலும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாநிலமாக மேற்கு ஆஸ்திரேலியா 8ம் இடத்தில் உள்ளது என இந்த ...

Read More »

இரட்டைக் குடியுரிமை விவகாரத்தில் அவுஸ்ரேலிய அமைச்சர் பதவி நீக்கம்

இரட்டைக் குடியுரிமை விவகாரத்தில் அவுஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவுஸ்ரேலிய சட்டப்படி அந்நாட்டு அரசியல்வாதிகள் இரட்டைக் குடியுரிமையோ, அதற்கு மேற்பட்ட குடியுரிமையோ பெற்றிருந்தால் நாடாளுமன்றத்துக்கு தேர்வாக முடியாது. இந்நிலையில் அந்நாட்டு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் மேத்யூ கேனவன் இத்தாலி குடியுரிமை பெற்றிருப்பது தெரிய வந்ததையடுத்து பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கடந்த 2006-ஆம் ஆண்டு தனது தாய் இத்தாலிய குடியுரிமைக்கு விண்ணப்பித்ததாகத் தெரிவித்துள்ள கேனவன், ஆனால் தனது தாய் தனக்கும் சேர்த்து இத்தாலியக் குடியுரிமை பெற்றது தனக்கு தெரியாது என்று கூறியுள்ளார். ...

Read More »

மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த அகதிகளை ஏற்க அவுஸ்ரேலியா ஒப்புதல்!

அமெரிக்காவுடன் ஏற்பட்ட உடன்பாட்டினை அடுத்து, எல்-சால்வடார் (El salvador) உள்ளிட்ட மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த அகதிகளை ஏற்றுக் கொள்ள அவுஸ்ரேலியா ஒப்புக் கொண்டுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஓபாமா ஆட்சிக் காலத்தில் மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த ஆயிரத்து 200 அகதிகளை ஏற்றுக் கொள்ள அவுஸ்ரேலியா ஒப்புக் கொண்டிருந்தது. இவர்களுக்கு பப்புவா நியூகினியா, நவ்ரு தீவுகளில் வாழ்விடங்களை அமைக்கவும் ஒப்புதல் அளித்திருந்தது. இவர்களைத் தொடர்ந்து தற்போது கோஸ்டாரிகா, எல் சால்வடார் நாடுகளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட அகதிகளை ஏற்றுக் கொள்ள அவுஸ்ரேலியா ஒப்புக் கொண்டுள்ளது. ...

Read More »

மிஸ் வேர்ல்ட் அவுஸ்ரேலியாவாக முஸ்லிம் பெண் தெரிவு!

அவுஸ்திரேலியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நடந்த உலக அழகிப் போட்டியில் Esma Voloder எனும் இளம் பெண் தெரிவு செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் அகதி முகாமில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.போஸ்னியா எனும் நாட்டில் சண்டை நடந்தபோது அதன் காரணமாக அகதியாக மாறிய அவரின் பெற்றோர் அகதி முகாமில் தங்கியிருந்தபோது அங்கு பிறந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை தான் Miss World Australia அழகியாக தெரிவு செய்யப்பட்டதும், சில நிற வெறியர்கள் தன்னை ஒரு முஸ்லிம் பெண் என்பதால் இழிவுபடுத்துவது கவலைக்குரியது என தெரிவித்தார்.  

Read More »