அவுஸ்திரேலியமுரசு

அவுஸ்ரேலிய தடுப்பு முகாமிலிருந்த சிரிய அகதி கம்போடியாவில் குடியேற்றம்!

அவுஸ்ரேலிய அகதிகள் தடுப்பு முகாமில் ஒன்றான நவுருத்தீவு முகாமிலிருந்த சிரிய அகதி ஒருவர் கம்போடியாவில் குடியமர சம்மதம் தெரிவித்திருந்த நிலையில், அவர் அந்நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார். இருப்பினும் இவர் குறித்த மேலதிக தகவல்கள் எதையும் அவுஸ்ரேலிய குடிவரவு அதிகாரிகள் வெளியிடவில்லை. முன்னதாக,2014 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா-கம்போடியா இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் படி நவுரு தடுப்பு முகாமில்(Nauru Detention Centre-Australia) உள்ள அகதிகளை கம்போடியாவில் குடியமர்த்துவது என திட்டமிடப்பட்டிருந்தது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட கம்போடியாவுக்கு ஆஸ்திரேலிய அரசு சுமார் 50 மில்லியன் டாலர்களை கொடுத்தது. இந்த ஒப்பந்தத்தின் ...

Read More »

அவுஸ்ரேலிய அணுசக்தி விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தை பார்வையிட்ட மைத்திரி!

மருத்துவம் மற்றும் நோய்களை கண்டறிவதில் அணுசக்தி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் ஆய்வுகளை பார்வையிடுவதற்காக அவுஸ்திரேலிய அணுசக்தி நிறுவனமான அவுஸ்திரேலிய அணுசக்தி விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  நேற்று (26) அவதானிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். அணுசக்தி பிறப்பாக்கி பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  விஜயம் செய்தார்.

Read More »

அவுஸ்ரேலியாவில் இருந்து அமெரிக்காவிற்கு குடியேற விரும்பும் அகதிகள்!

அவுஸ்ரேலியாவில் உள்ள தடுப்பு முகாம்களில் இருப்பவர்கள் 1600 ற்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்காவில் குடியேற விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சிக் காலக்கட்டத்தின் இறுதி நேரத்தில் அவுஸ்திரேலியா- அமெரிக்கா இடையே கையெழுத்தான ஒரே முறை அகதிகளை குடியமர்த்துவதற்கான ஒப்பந்தத்தின் படி, அவுஸ்திரேலியாவின் மனுஸ் மற்றும் நவுரு தடுப்பு முகாம்களிலிருந்து 1,250 அகதிகள் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியமர்த்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. அதற்கான ஆயத்த பணிகள் நடந்து வரும் நிலையில், இதற்கு 1600 ற்கும் மேற்பட்ட அகதிகள் ஆர்வம் காட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது. மனுஸ் மற்றும் ...

Read More »

அவுஸ்ரேலியாவை அதிர வைத்த இந்திய திருமணம்!

அவுஸ்ரேலியாவில் வாழும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஜோடிக்கு பிரம்மாண்டமான முறையில் திருமணம் அரங்கேறியுள்ளது. சிட்னியில் வசித்து வருபவர் Divya Dhingra. இவருக்கும் இந்தியாவில் நிதித்துறையில் வேலை பார்க்கும் Gurjab Sigh Kohli என்னும் நபருக்கும் நாடே திரும்பி பார்க்கும் வகையில் அவுஸ்ரேலியாவில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்த Rosehill கார்டனுக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய Divya மற்றும் Gurjab தம்பதிகளுக்கு வாண வேடிக்கைகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதே போல எல்லோரும் கேக்-ஐ சிறிய கத்தியால் தானே வெட்டுவார்கள். ஆனால் இந்த ...

Read More »

14-வயது மகளை 20-வயது மூத்தவருக்கு திருமணம் செய்து வைத்த தாய்!

அவுஸ்திரேலியாவில் பெற்ற தாயே தனது மகளை விட 20-வயது மூத்த நபருக்கு திருமணம் செய்து வைப்பதற்கு சம்மதம் தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள மசூதி ஒன்றில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ஆம் திகதி திருமணம் ஒன்று நடந்துள்ளது. அதில் திருமணப் பெண்ணாக 14-வயது சிறுமியும், அச்சிறுமியை திருமணம் செய்துகொள்பவர் சிறுமியை விட 20-வயது மூத்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இத்திருமணத்தை அந்த மசூதியில் உள்ள Imam Ibrahim Omerdic(62) என்பவர் நடத்தி வைத்துள்ளார். இந்த திருமணம் அச்சிறுமியின் தாயின் சம்மதத்துடனே ...

Read More »

‘காலச் சுவடு’ ஆசிரியர் கண்ணனின் இலக்கியச் சந்திப்பு!

அவுஸ்ரேலியாவில் ‘காலச் சுவடு’ ஆசிரியர் கண்ணனுடன் இலக்கியச் சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது. காலம்: 27 மே 2017  மாலை 5:30 இடம்: யாழ் பங்ஷன் சென்ரர், பெண்டில் கில், ரயில் நிலையத்துக்கு முன்பாக. தொடர்பு: 046 9849 125 (ஆசி கந்தராஜா), 0424 669 165 (ரஞ்சகுமார்)

Read More »

சிறீலங்கா – அவுஸ்ரேலியா இடையில் மூன்று உடன்படிக்கைகள்!

சிறீலங்கா  மற்றும் அவுஸ்ரேலியாவுக்கிடையில் இருதரப்பு நல்லுறவுகளை மேம்படுத்தும் வகையில் மூன்று புதிய உடன்படிக்கைகளில் கைச்சாத்திடப்பட்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அவுஸ்ரேலிய பிரதமர் மல்கம் டேர்ன்புல்லுக்கும் இடையில் இன்று காலை இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. அவுஸ்ரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் அவுஸ்ரேலிய பிரதமர் மல்கம் டேர்ன்புல்லுக்கும் இடையில் இன்று காலை பேச்சுவார்த்தை நடைபெற்றது. கன்பெராவிலுள்ள அவுஸ்ரேலிய மத்திய பாராளுமன்ற கட்டடத்தில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் பல்வேறு பிரிவுகளில் இருதரப்பு நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் ...

Read More »

மைத்திரி – அவுஸ்ரேலிய பிரதமர் சந்திப்பு!

அவுஸ்ரேலியாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல்லை சந்தித்துள்ளார். கென்பராவில் உள்ள  நாடாளுமன்ற கட்டிடத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அவுஸ்ரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புலின் அழைப்பின்பேரில் அங்கு சென்றுள்ள ஜனாதிபதி கென்பரா நகரில் நடைபெற்ற பல நிகழ்வுகளில் கலந்துகொண்டதுடன் கென்பரா நகரில் உள்ள சூரிய மின்சக்தி நிலையத்திற்கும் நேற்று(24)  விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

Read More »

கென்பரா நகரில் அமைந்துள்ள கம்பா விகாரைக்கும் சென்ற மைத்திரி!

அவுஸ்திரேலியாவிற்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் கென்பரா நகரில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் நேற்று (24) பங்குபற்றியதுடன் கென்பரா நகரில் அமைந்துள்ள கம்பா விகாரைக்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன்போது சமய கிரியைகளை நடாத்திய விகாராதிபதி அவர்கள் ஜனாதிபதி அவர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கியதுடன் அங்கு வருகை தந்திருந்த இலங்கையர்களுடன் ஜனாதிபதி சினேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார்.  

Read More »

மைத்திரி கன்பரா தாவரவியல் பூங்காவில் மரம் நட்டார்!

அவுஸ்ரேலியாவிற்கான மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கன்பராவிலுள்ள தேசிய தாவரவியல் பூங்காவுக்கு நேற்று (24) விஜயம் செய்தார். கன்பரா முதலமைச்சரைப் பிரதிநிதித்துவப்படுத்தி கன்பராவின் சட்ட மா அதிபர் கோல்டன் றம்சே மற்றும் பூங்காவின் பதில் கடமைபுரியும் நிறைவேற்று முகாமையாளர் ஸ்கொட் ஸட்லியும் ஜனாதிபதியை வரவேற்றனர். அவுஸ்ரேலியாவுக்கான தனது விஜயத்தை நினைவுகூரும் வகையில் மைத்திரி பூங்காவில் மகோகனி மரக்கன்று ஒன்றை நாட்டினார். இந்த நிகழ்வில் கன்பராவின் சட்ட மா அதிபர் ரம்சே தெரிவிக்கையில் சுற்றாடல்துறை அமைச்சராகவுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் இந்த விஜயம் உண்மையிலேயே ...

Read More »