அவுஸ்திரேலியாவிற்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் கென்பரா நகரில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் நேற்று (24) பங்குபற்றியதுடன் கென்பரா நகரில் அமைந்துள்ள கம்பா விகாரைக்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இதன்போது சமய கிரியைகளை நடாத்திய விகாராதிபதி அவர்கள் ஜனாதிபதி அவர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கியதுடன் அங்கு வருகை தந்திருந்த இலங்கையர்களுடன் ஜனாதிபதி சினேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார்.
Eelamurasu Australia Online News Portal




