அவுஸ்திரேலியமுரசு

தமிழ் அகதிகளை விடுவிக்க ஆஸ்திரேலிய மருத்துவ சங்கம் கோரிக்கை

ஆஸ்திரேலியாவின் புதிய உள்துறை அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் Karen Andrews பொறுப்பேற்றுள்ள நிலையில், இது அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் சுகாதார பிரச்னைகள் தொடர்பாக புதிய அணுகுமுறையைப் பின்பற்றுவதற்கான நல்ல வாய்ப்பு என ஆஸ்திரேலிய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இது புதிய உள்துறை அமைச்சர் Karen Andrews தனது புதிய பொறுப்பைக் கருணையுடன் தொடங்குவதற்கான நேரமாகும். அத்துடன், ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவு தடுப்பில் உள்ள தமிழ் அகதி குடும்பத்தை விடுவிப்பதற்கான நடவடிக்கையை புதிய அமைச்சர் மேற்கொள்ள வேண்டும் என மருத்துவ சங்கம் குறிப்பிட்டுள்ளது. “எந்த நாட்டு ...

Read More »

அவுஸ்திரேலியாவில் இலங்கை சிறுவனுக்கு நேர்ந்த துயரம்- மன்னிப்புக் கோரிய பள்ளி நிர்வாகம்

தெற்கு அவுஸ்திரேலியாவின் Coober Pedy பகுதியில் பள்ளிச் சிறுவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து ஓட்டுநர், இலங்கைப் பின்னணி கொண்ட 5 வயதுச்சிறுவனை உரிய இடத்தில் இறக்கிவிடத் தவறியதுடன் பணிமுடிந்து பேருந்தை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு சென்றதையடுத்து குறித்த சிறுவன் தனியாக நீண்டதூரம் நடந்துசென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட்டுச் சென்றபின்னர், நீண்ட நேரம் பேருந்தினுள்ளேயே காத்திருந்த சிறுவன், பேருந்தைவிட்டு இறங்கி தனியாக Stuart நெடுஞ்சாலையை நோக்கி நடக்கத்தொடங்கியிருக்கிறார். புத்தகப்பையையும் சுமந்தபடி சுமார் 1 மணிநேரத்திற்கு மேல் நடந்துசென்ற இச்சிறுவன் அவ்வீதியால் சென்ற பெண்மணி ...

Read More »

உயிர்த்த ஞாயிறு விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் தனது பெயரை சேர்த்தமைக்கு அவுஸ்திரேலிய பேராசிரியர் கடும் எதிர்ப்பு

உயிர்த்தஞாயிறு தாக்குதல் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் தனது பெயர் இடம்பெற்றுள்ளமைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள அவுஸ்திரேலிய பேராசிரியர் ஒருவர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவை சேர்ந்த பேராசிரியர் லுக்மன் தலிப்பே இதனை தெரிவித்துள்ளார். அவரின் சார்பில் பிரிட்டனை சேர்ந்த பரப்புரை அமைப்பொன்று அறிக்கையொன்றை இலங்கையின் நாளேடுகளிற்கு அனுப்பிவைத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து இலங்கையில் சமீபத்தில் இடம்பெற்ற விவாதங்களின் போது எதிர்பாராத வகையில் எனது பெயருக்கு களங்கமேற்படுத்தப்பட்டுள்ளது என பேராசிரியர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். ...

Read More »

ஆஸ்திரேலியாவில் 2 முக்கிய மந்திரிகளின் பதவி பறிப்பு

அமைச்சரவை மறுசீரமைப்பின்போது பெண்களுக்கான தொடர்ச்சியான பதவி உயர்வுகளை பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்தார். ஆஸ்திரேலிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பாதுகாப்புத்துறை மந்திரி லிண்டா ரெனால்ட்ஸ், அட்டர்னி ஜெனரல் கிறிஸ்டியன் போர்ட்டர் ஆகியோர் மீதான கற்பழிப்பு குற்றச்சாட்டுகள், அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. அவர்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. பல்லாயிரக்கணக்கான பெண்கள் வீதிக்கு வந்து போராடியதால் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், குற்றச்சாட்டில் சிக்கிய 2 மந்திரிகளையும் அமைச்சரவையில் இருந்து நீக்கி பிரதமர் ஸ்காட் மாரிசன் உத்தரவிட்டுள்ளார். உள்துறை மந்திரி பீட்டர் ...

Read More »

உடல் குறைப்பாட்டுடன் இந்திய தம்பதிக்கு பிறந்த குழந்தை: நாடுகடத்தும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய தம்பதியருக்கு உடல் குறைப்பாட்டுடன் பிறந்த குழந்தையையும், அக்குடும்பத்தையும் ஏற்க மறுத்து அனைவரையும் இந்தியாவுக்கு நாடுகடத்தும் செயலில் ஆஸ்திரேலிய அரசு ஈடுபட்டிருக்கிறது. கயான் கட்யால் எனும் 6 வயதாகும் அக்குழந்தைக்கு ஆஸ்திரேலிய பிறப்புச் சான்றிதழ் உள்ள போதிலும் ஆஸ்திரேலியாவில் அக்குழந்தைக்கான உரிமைகள் மறுக்கப்படுவதாக கவலைத் தெரிவித்திருக்கிறார் குழந்தையின் தந்தையான வருண் கட்யால். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியரான வருண் கட்யால் ஐரோப்பிய சமையல் குறித்து கற்பதற்காக ஆஸ்திரேலியா சென்று பின்பு ஆஸ்திரேலியாவிலேயே தனது பணி வாழ்க்கையையும் அமைத்துக் கொண்டார். இந்தியரான ...

Read More »

வெள்ளத்தில் மிதக்கும் சிட்னி நகரம்… 18000 பேர் வெளியேற்றம்

தொடர் மழையால் சிட்னி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பாதிப்பு மோசமாக உள்ளது. ஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை கொட்டி வருகிறது. நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் மிக அதிகளவில் மழை பெய்து வருகிறது. இதனால் தலைநகரம் சிட்னி உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கடந்த சில நாட்களில் மட்டும் இந்த பகுதியில் 100 செ.மீ. மழை பெய்துள்ளது. இது மிக அதிகளவு ஆகும். 1961-ம் ஆண்டு இதே போல மிக பலத்த மழை பெய்து, வெள்ளம் ஏற்பட்டது. அதேபோல ...

Read More »

அகதியின் புதிய ஆவணப்படம்

நவுருத்தீவில் செயல்படும் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பில் தஞ்சம் கோரிய மக்களை ஆஸ்திரேலிய அரசு எப்படி நடத்துகிறது என்பதை அம்பலப்படுத்தும் புதிய ஆவணப்படம் ஒன்றை அத்தடுப்பில் இருந்த முன்னாள் கைதியான Elahe Zivardar எனும் ஈரானிய அகதி வெளியிட்டிருக்கிறார். Searching for Aramsayesh Gah என்ற தலைப்பிலான படத்தில், படகு சிக்கல் முதல் அகதிகள் சிறைவைக்கப்பட்டுள்ள முறை வரை நவுருத்தீவில் உள்ள ஆஸ்திரேலிய தடுப்பு முறை குறித்த பல்வேறு அம்சங்கள் இதில் பேசப்பட்டுள்ளது. “என்னை எப்படி அறிமுகப்படுத்திக் கொள்வது என உண்மையில் எனக்குத் தெரியவில்லை. ...

Read More »

ஆஸ்திரேலியாவில் வெளுத்து வாங்கும் மழை… 50 ஆண்டுகளில் இல்லாத வெள்ளப்பெருக்கு

கிழக்கு ஆஸ்திரேலியாவில் கனமழை பெய்து வருவதால் நாளை பல்வேறு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் கடந்த  வியாழக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி, பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். வேகமாகப் பாய்ந்த வெள்ள நீர் பெரிய அளவில் சேதத்தை உண்டாக்கியதால் சிட்னியின் தென்மேற்குப் பகுதியில் வாழும் மக்கள், நள்ளிரவில், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறவேண்டியிருந்தது. வெள்ளப்பெருக்கினால் ...

Read More »

பாகிஸ்தான் பிரதமருக்கு கொரோனா… சீன தடுப்பூசி போட்ட 2 நாளில் பாதிப்பு

பாகிஸ்தானில் தற்போது சீனா வழங்கிய சினோபாம் தடுப்பு மருந்து மட்டுமே பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு உதவும் வகையில் சீனா அரசு 5 லட்சம் டோஸ்கள் சினோபாம் மருந்தை இலவசமாக வழங்கி உள்ளது. இந்த மருந்தை பயன்படுத்தி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று முன்தினம் தடுப்பூசி (முதல் தவணை) போட்டுக்கொண்டார். இந்நிலையில், இம்ரான் கானுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரது சிறப்பு உதவியாளர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் வீட்டில் ...

Read More »

ஆஸ்திரேலியா பப்பு நியூ கினியா: அகதிகளுக்கு கொரோனா தொற்று

ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்ற அகதிகள் கடல் கடந்த தடுப்பு தீவாக செயல்படும் பப்பு நியூ கினியாவில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 6 அகதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், பப்பு நியூ கினியாவில் வைக்கப்பட்டுள்ள அகதிகளை/ தஞ்சக்கோரிக்கையாளர்களை ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு வர வேண்டும் என அகதிகள் நல வழக்கறிஞர்கள் தெரிவித்திருக்கின்றனர். இன்றைய நிலையில், அத்தீவில் சுமார் 90 அகதிகளும் 40 தஞ்சக்கோரிக்கையாளர்களும் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. தற்போது கொரோனா தொற்றினால் அகதி ஒருவர், வயிற்று வலிக்கான மருத்துவ சிகிச்சைக்கு ...

Read More »