குமரன்

ஆச்சரியமுட்டும் அவுஸ்ரேலியா!

· அவுஸ்ரேலியா உலகில் ஆறாவது பெரிய நாடு. ·அவுஸ்ரேலியாவில் உள்ள ஆடுகளின் எண்ணிக்கை சுமார் 150 மில்லியன். ஆனால் மக்கள்தொகையோ சுமார் 23 மில்லியன் மட்டுமே. · அவுஸ்ரேலியாவில் 45,000 ஆண்டுக்கு முன்பிருந்து மனிதர்கள் வாழ்ந்துவருவதற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. · சுமார் 750 ஊர்வன வகைகள் அவுஸ்ரேலியாவில் மட்டுமே உள்ளன. · பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய இரண்டாவது நாடு அவுஸ்ரேலியா (முதல் நாடு நியூஸிலந்து) · உலகிலேயே ஆக அதிகமாக சூதாட்டத்துக்குச் செலவிடுபவர்களில் ஆஸ்திரேலியர்களும் அடங்குவர். · உலகின் ஆக நீளமான வேலி ...

Read More »

MH 370 தேடல் கப்பல் அவுஸ்ரேலியா திரும்புகிறது!

மலேசியா எர்லைண்ஸ் நிறுவனத்தின் காணாமல்போன MH 370 விமானத்தின் தேடல் பணிக்காகப் பயன்படுத்தப்பட்ட கப்பல்களில் ஒன்று மீண்டும் அவுஸ்ரேலியா திரும்புகிறது. Fugro-Equator எனும் அந்தக் கப்பலை வரவேற்க அவுஸ்ரேலிய, மலேசியப் போக்குவரத்து அமைச்சர்கள் Fremantle நகரத் துரைமுகத்துக்குச் செல்ல தயாராக இருக்கின்றனர். இந்தியப் பெருங்கடலின் சுமார் இருபதாயிரம் சதுரகிலோமீட்டர் பரப்பளவில் தேடல் பணி நடந்தது. கடந்த வாரம் மாயமாகக் காணாமற்போன விமானத்துக்கான தேடல் பணிகள் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. எனினும் விமானம் விழுந்த இடம் குறித்த புதிய ஆதாரங்கள் கிடைத்தால் தேடல் பணி மீண்டும் ...

Read More »

மொபைலிலேயே கண் பரிசோதனை!

கண் கண்ணாடிகளை இணையத்திலேயே வாங்கும் வசதி வந்துவிட்டது. ஆனால், துாரப் பார்வையா, கிட்டப் பார்வையா என்பதை அறிய, மருத்துவர்களை நாடவேண்டியிருக்கிறது. இப்போது அதற்கு மாற்றாகவும் ஒரு கருவி வந்திருக்கிறது. அமெரிக்காவில், கலிபோர்னியாவிலுள்ள, ‘ஐக்யூ’ (Eyeque) என்ற நிறுவனம், அதே பெயரில் உருவாக்கியிருக்கும் சாதனத்தை ஒரு ஸ்மார்ட்போனில் பொருத்திக்கொள்ள வேண்டும். அதனுடன், இலவசமாகக் கிடைக்கும், ‘மை ஐக்யூ’ என்ற மொபைல் செயலியையும் தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். ஐக்யூ சாதனம் வழியே மொபைலில் தெரியும் சில காட்சி களை பார்த்து, தெளிவாகத் தெரியும் வரை, செயலியில் ...

Read More »

உலகத்துக்கே வழிகாட்டியாக மாறிவிட்டீர்கள்!

உலகத்துக்கே வழிகாட்டியாக மாறிவிட்டீர்கள் என்று இளைஞர்கள் போராட்டத்துக்கு இளையராஜா புகழாரம் சூட்டியுள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று பல்வேறு ஊர்களில் இளைஞர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி வருவது அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது. இதற்கு தமிழ் திரையுலகம் மட்டுமன்றி பல்வேறு திரையுலகினரும் தங்களுடைய ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள். இப்போராட்டத்துக்கு இளையராஜாவும் தன்னுடைய ஆதரவைத் தெரிவித்துள்ளார். இது குறித்து வீடியோ பதிவில் இளையராஜா பேசியிருப்பது: “மாணவர்களே, இளைஞர்களே.. இந்த உலகத்துக்கே வழிகாட்டும் ...

Read More »

அரசியலிலிருந்து ஒதுங்குமாறு மகிந்தவிற்கு அழுத்தம்!

சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவை அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்குமாறு இரண்டு பிரதான நாடுகள் அழுத்தம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாடுகளின் தூதரகங்களினால் இவ்வழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், அயல் நாடுகளின் புலனாய்வாளர்களும் இந்த அழுத்தத்தைப் பிரயோகித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புலனாய்வுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் கூட்டு எதிர்க் கட்சியைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்களைச் சந்தித்து தனித்தனியாக இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளதாகவும் சிங்கள நாளிதள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன், சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவின் செல்வாக்கு நாளுக்குநாள் வீழ்ச்சியடைந்து வருவதாகவும், அவரது கௌரவத்தைக் காக்கும் ...

Read More »

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புது ஆப் வெளியீடு

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க தமிழர்கள் போராடி வரும் நிலையில் இதற்கென புதிய செயலி வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி, இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை வலியுறுத்தி உலக தமிழர்கள் அனைவரும் ஒன்றாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் துவங்கிய இப்போராட்டம் இன்று உலகின் சில நாடுகளில் தமிழர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளிலேயே அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்படும் அளவுக்கு விரிவடைந்துள்ளது. நிரந்தர தீர்வை நோக்கி நடத்தப்படும் இப்போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் நோக்கில் கூகுள் பிளே ஸ்டோரில் ...

Read More »

அவுஸ்ரேலியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்

அவுஸ்ரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் 4-வது ஒருநாள் கிரிக்கெட் சிட்னியில் இன்று நடக்கிறது. அவுஸ்ரேலியா -பாகிஸ்தான் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. காயம் காரணமாக கடந்த இரண்டு போட்டியில் ஆடாத பாகிஸ்தான் அணியின் கேப்டன் அசார் அலி அணிக்கு திரும்புகிறார். 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் அவுஸ்ரேலிய அணி இந்த போட்டியில் வென்றால் தொடரை கைப்பற்றி விடும். எனவே அந்த அணியினர் தொடரை கைப்பற்ற ...

Read More »

இளைஞர்களின் போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி

இளைஞர்களின் போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி என நடிகர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவ- மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரை நகரில் திரும்பிய திசை எல்லாம் ஆங்காங்கே இளைஞர்கள் மற்றும் பெண்கள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை நீக்கி அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. மதுரையில் நான்காம் தமிழ் சங்கம் செந்தமிழ் கல்லூரியில் நடைபெறும் விழாவில் பங்கேற்க நடிகர் பாக்கியராஜ் மதுரை வந்தார். ...

Read More »

உலகம் முழுவதும் டிரம்புக்கு எதிராக பெண்கள் போராட்டம்

அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்புக்கு எதிராக உலகம் முழுவதும் பெண்கள் போராட்டம் நடத்தினர். அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் நேற்று முன்தினம் பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்பதற்கு முன்பே எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்தன. டிரம்ப் பெண்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து இருந்ததாக தேர்தல் பிரசாரத்தின் போது கூறப்பட்டது. அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இந்த நிலையில் அவர் பதவி ஏற்ற பிறகு அமெரிக்கா மற்றும் உலக நாடுகளில் நேற்று பெண்கள் போராட்டம் நடத்தினர். டிரம்ப் ஆட்சியில் பெண்களின் உரிமைகளுக்கு ...

Read More »

எழுக தமிழ் பேரணி! கிழக்கு மாகாணத்தில்! பெப்ரவரி 10ஆம் நாள்!

கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 28ஆம் நாள் நடைபெறவுள்ள எழுக தமிழ் பேரணி நிகழ்வானது பெப்ரவரி மாதம் 10ஆம் நாளுக்கு பிற்போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ் மக்கள் பேரவை அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளையும் அன்றாட ஒடுக்குமுறைகளையும் மக்கள்ஒன்றுதிரண்டு வெளிப்படுத்தும் ஜனநாயக எழுச்சியான எழுகதமிழ் நிகழ்வானது கிழக்கு மாகாணத்தில்ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தினத்தில் இருந்து தவிர்க்க முடியாத காரணங்களால் எதிர்வரும் மாசி மாதம்முழுநிலவு நாளாகிய 10 ம் திகதி, வெள்ளிக்கிழமைக்கு  (10/02/2017) பிற்போடப்பட்டிருக்கின்றது என்பதை தாழ்மையுடன் அறியத்தருகின்றோம். அரசாங்கமானது ...

Read More »