குமரன்

தமிழ்க்கட்சிகள் இந்தியாவை நோக்கி முன்வைக்கும் ஒரு கோரிக்கை?

வரும் செவ்வாய்க்கிழமை இரண்டாம் திகதி தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட ஐந்து கட்சிகள் யாழ்ப்பாணத்தில் கூடிக் கதைக்கவிருக்கின்றன.விக்னேஸ்வரனின் தமிழ்மக்கள் தேசியக் கூட்டணி;ஈபிஆர்எல்எப்;டெலோ;புளட் இவற்றோடு ஸ்ரீகாந்தா தலைமையிலான கட்சி ஆகிய ஐந்து கட்சிகளுமே அவ்வாறு கூடிக்கதைக்க இருக்கின்றன.இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் தமிழரசுக் கட்சி இச்சந்திப்பில் பங்குபெற்றுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே அறியமுடிகிறது.பெரியதும் மூத்ததுமாகிய தமிழரசுக் கட்சி டெலோ இயக்கத்தின் முன்முயற்சி ஒன்றின் பின் இழுபட்டு செல்ல விரும்பவில்லை என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இச்சந்திப்புக்கு கூட்டமைப்பின் தலைவராகிய சம்பந்தரின் ஆதரவு உண்டா என்பதையும் இக்கட்டுரை எழுதப்படும் ...

Read More »

தமிழர்களின் பிரதிநிதித்துவம் அவசியமில்லை என்கிறார் ஞானசார தேரர்

ஒரேநாடு ஒரேசட்டம் செயலணியில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் அவசியமில்லை என பொதுபலசேனாவின் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் இன்று கருத்து தெரிவிக்கையில்அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மூன்று முஸ்லீம் உறுப்பினர்கள் கூட அவசியமில்லை என நான் கருதுகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். என்ன நடந்தாலும் இந்த நாட்டில் தமிழர்கள் இருக்கின்றார்களா முஸ்லீம்கள்இருக்கின்றாhகளா என கேட்கின்றார்கள் என தெரிவித்துள்ள அவர் ஏன் அப்படி கேட்கின்றார்கள் திறமையே முக்கியமானது திறமைக்கு வாய்ப்பளிக்கும்போது தமிழர் முஸ்லீம் சிங்களவர்கள் அவசியமில்லை என தெரிவித்துள்ளார். கண்டி தமிழர்கள் தெரிவு செய்யப்பட்டால் அதனை யாழ்ப்பாண தமிழர்கள் ...

Read More »

குற்றங்களைப் புரிந்தவர்களும் குற்றங்களுக்குப் பங்கானவர்களும் குற்றவாளியைத் தேடுகிறார்களா?

இலங்கை அரசு போர்க்குற்றம் புரிந்தவேளை அதில் பங்காளியானவர்கள் இன்று மனித உரிமை மீறல்களையும், மனிதகுல விரோத செயற்பாடுகளையும் விசாரிக்க முன்னிற்கின்றனர். இத்தகைய நாடுகள் பற்றி அமெரிக்க வெளியுறவு முன்னாள் செயலாளர் தெரிவித்த கருத்து, ‘நாடுகள் நல்லுறவை நாடுபவை அன்று, அவை தம்நலன் மட்டுமே நாடுபவை” என்பது. முக்காலமும் பொருந்தும் இவ்வாசகம் தமிழர் மனதில் எக்காலமும் கல்வெட்டாக இருக்க வேண்டியது.  தமிழர் தேசத்தையும் தமிழ்த் தேசியத்தையும் முன்னிறுத்தி இடம்பெறும் பல செயற்பாடுகள் இக்காலத்தில் ஒப்பேற்றப்பட்டு வருகின்றன. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களே சில விடயங்களில் முக்கிய வகிபாகத்தை ...

Read More »

5 முதல் 11 வயதினருக்கு பைசர் தடுப்பூசி

பைசர் தடுப்பூசி 90 சதவீதம் செயல்திறன் கொண்டுள்ளதாகவும், ஆபத்தான பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் 5 முதல் 11 வயதுடைய 2 ஆயிரம் சிறுவர், சிறுமிகளிடம் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பரிசோதனை சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்டது. இந்த சோதனையின் முடிவுகளின் மூலம் இந்த தடுப்பூசி 90 சதவீதம் செயல்திறன் கொண்டுள்ளதாகவும், ஆபத்தான பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து 5 முதல் 11 வயதுடைய சிறுவர், சிறுமிகளுக்கு பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை செலுத்த ...

Read More »

பெற்றோர்களுக்கு அட்வைஸ் சொன்ன சமந்தா

தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை சமந்தா, பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார். சமீபத்தில் கணவரை பிரிவதாக அறிவித்த சமந்தா, தற்போது வெளிநாட்டுக்கு சுற்றுப் பயணம் செய்து இருக்கிறார். தான் செல்லும் இடங்களில் இருந்து புகைப்படங்களை செய்து வரும் சமந்தா, சமூக வலைத்தளத்தில் நாக சைதன்யாவோடு இருந்த புகைப்படங்களை எல்லாம் நீக்கியுள்ளார். அதோடு பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு அறிவுரையும் சொல்லியிருக்கிறார். அதில் உங்கள் மகள் யாரைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்பதைப் பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு, உங்கள் ...

Read More »

பூமியை நோக்கி வரும் புவி காந்த புயல்

புவி காந்த புயல் காரணமாக மின் கட்டமைப்பில் பாதிப்புகள் ஏற்படலாம். மின்சாரத்தில் நிலையற்ற தன்மை, பாதுகாப்பு கருவிகளில் தவறான எச்சரிக்கை ஒலி எழவும் வாய்ப்பு உள்ளது. பூமியை இன்று புவி காந்த புயல் தாக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் கூறியதாவது:- வலுவான புவி காந்த புயல் இன்று பூமியை நோக்கி வருகிறது. இது குறிப்பிட்ட பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. 50 டிகிரி புவி காந்த அட்சரேகையின் துருவமுனையில் அதன் தாக்கம் உணரப்பட ...

Read More »

மக்கள் வங்கியின் நிதி வழங்கல் தொடர்பில் ஆராயுமாறு நிதியமைச்சருக்கு கோரிக்கை

சீன உரக் கொடுக்கல் வாங்கல்களின் நிதி தொடர்பில் ஆராயுமாறு இலங்கை வங்கி ஊழியர் சங்கம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை வங்கி ஊழியர் சங்கம் அனுப்பிய கடிதத்தின் மூலம் நிதியமைச்சருக்கு இது தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அது பற்றிய விவரங்கள் ஊடக அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளன. கடனை சரியான நேரத்தில் செலுத்தாவிட்டால், சீன உர நிறுவனத்தால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, விரும்பத்தகாத மற்றும் ஆரோக்கியமற்ற சூழ்நிலை ஏற்படலாம் என்பதை அறிக்கை குறிக்கிறது.   மேலும், மக்கள் வங்கியுடன் ஏற்கனவே கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டுள்ள ...

Read More »

மனதை ரணமாக்கும் ஆஸ்திரேலிய தடுப்பு மையத்தின் நிலை

“அவர்கள் இதனை ஹோட்டல் என்கிறார்கள், ஆனால் இது ஒரு சிறை. தனியார் கையில் உள்ள சிறை. இந்த அகதிகளின் துயரத்தை வைத்து மில்லியன் கணக்கான டாலர்கள் சம்பாதிக்கிறார்கள். மெல்பேர்ன் நகரின் நடுவே உள்ள கறை இது. இதில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்,” எனக் கூறியிருக்கிறார் தமிழ் அகதிகள் கவுன்சிலின் அரண் மயில்வாகனம்.

Read More »

குறைவாக சாப்பிடுங்கள் என மக்களுக்கு உத்தரவு பிறப்பித்த கிம் ஜாங் அன்

1994-1998 ஆண்டுகளில் நிலவியது போன்று உணவு தட்டுப்பாடு வரும் என வடகொரிய அதிகாரிகள் ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதமே எச்சரிக்கை விடுத்தனர். அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனைகளால் ஐ.நா. சபையும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் பொருளாதார தடை விதித்துள்ளதால் வடகொரியா பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வந்தது. இந்த நிலையில், உலகளாவிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று தோன்றியது. இதன்காரணமாக தனது எல்லைகளை வடகொரியா மூடி உள்ளது. மேலும் சீனாவில் இருந்து உணவுப்பொருட்கள் இறக்குமதி செய்வதை கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே வடகொரியா நிறுத்தி விட்டது. இதனால் ...

Read More »