மனதை ரணமாக்கும் ஆஸ்திரேலிய தடுப்பு மையத்தின் நிலை

“அவர்கள் இதனை ஹோட்டல் என்கிறார்கள், ஆனால் இது ஒரு சிறை. தனியார் கையில் உள்ள சிறை. இந்த அகதிகளின் துயரத்தை வைத்து மில்லியன் கணக்கான டாலர்கள் சம்பாதிக்கிறார்கள். மெல்பேர்ன் நகரின் நடுவே உள்ள கறை இது. இதில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்,” எனக் கூறியிருக்கிறார் தமிழ் அகதிகள் கவுன்சிலின் அரண் மயில்வாகனம்.