குமரன்

காஜல் அகர்வால் திருமணப்பந்தத்தில் இணைந்தார்

மும்பையில் நடைபெற்ற நடிகை காஜல் அகர்வாலின் திருமண ஒளிப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. நேற்று (வெள்ளிக்கிழமை) தொழிலதிபர் கெளதம் கிச்லுவும் நடிகை காஜல் அகர்வாலும் திருமணப் பந்தத்தில் இணைந்துள்ளனர். மும்பையிலுள்ள தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டலில் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளார்கள். இந்நிலையில் ஒளிப்படங்களும்  காணொளியும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. தமிழ், தெலுங்கு என  இரு மொழிகளிலும் பிரபல நடிகையாக காஜல் அகர்வால் திகழ்கின்றார்.  தமிழில் கடைசியாக ஜெயம் ரவிக்கு ஜோடியாக கோமாளி திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பதும் ...

Read More »

நியூஸிலாந்தில் கருணைக் கொலையை சட்டபூர்வமாக்க பெருமளவான மக்கள் வாக்களிப்பு!

குணப்படுத்தவோ அல்லது போதுமான சிகிச்சையளிக்கவோ முடியாதவர்களுக்கு கருணைக் கொலையை சட்டபூர்வமானதாக்க பெருமளவான நியூஸிலாந்து மக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். கருணைக்கொலை தொடர்பாக பல ஆண்டுகள் இடம்பெற்ற உணர்ச்சிபூர்வமான விவாதங்களையடுத்து, அதனைச் சட்டபூர்வமாக்குவது குறித்த மக்களின் கருத்தறியும் வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது. இம்மாத நடுப்பகுதியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் ஆரம்பகட்ட முடிவுகள், இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகின. இந்த முடிவுகளில் 65.2 வீதமானமை 2019ஆம் ஆண்டின் வாழ்வை முடித்துக்கொள்வதற்கான தெரிவுச்சட்டத்திற்கு ஆதரவாக அளிக்கப்பட்டுள்ளன. இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் புதிய சட்டமாகி, 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமுலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆறு ...

Read More »

இராணுவ பயிற்சியில் ஆர்மேனியா பிரதமரின் மனைவி அன்னா ஹகோபியான்!

வடமேற்கு ஆசிய நாடுகளான ஆர்மீனியாவுக்கும் (Armenia), அஸர்பைஜானுக்குமிடையே (Azerbaijan)  நாகோர்னோ-காராபாக் பிராந்தியங்கள் தொடர்பாக கடந்த மாதம் முதல் மோதல் இடம்பெற்று வருகின்றது. இந் நிலையில் ஆர்மீனிய பிரதமர் நிகோல் பாஷின்யானின் (Nikol Pashinyan) மனைவி அன்னா ஹகோபியான் (Anna Hakobyan) இராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 13 பெண்கள் கொண்ட படைப்பிரிவு ஒன்றுடன் இராணுவ பயிற்சியை தொடங்கியுள்ள அன்னா, பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும்,  ஆர்மீனியா இராணுவத்திற்கு உதவும் பொருட்டு எல்லையில் பாதுகாப்புப் பணியில் ...

Read More »

கொரோனாவினால் பாதிக்கப்பட்டிந்த பெண் மரணம்

கொரோனாவால் மற்றுமொரு நோயாளி உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 54 வயது பெண் நோயாளியே உயிரிழந்துள்ளார். கொழும்பு 12 சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார். நேற்றிரவு அவர் உயிரிழந்தார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Read More »

திருமணம் நடத்துவது குறித்து அஜித் ரோகண தெரிவித்தது என்ன?

ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்படாத பகுதிகளில் சுகா தார ஆலோசனைப் படி திருமணங்களை நடத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல் படி மேல் மாகாணத்திற்கு வெளியே உள்ள பிரதேசங்களில் திருமண வைபவங்களைச் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனை படி நடத்தலாம் என காவல் துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். திருமண வைபவங்களில் பங்கேற்பாளர்களின் எண் ணிக்கையை ஒவ்வொரு பகுதியிலும் உள்ள சுகாதார அதிகாரிகள் தீர்மானிப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், ஊரடங்கு ...

Read More »

மீண்டும் தமிழ் படத்தில் நாயகியாக களமிறங்கும் சமீரா ரெட்டி?

நடிகை சமீரா ரெட்டி மீண்டும் தமிழ் படத்தில் நாயகியாக களமிறங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஷால், ஆர்யா ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள். பாலா இயக்கிய ‘அவன் இவன்’ படத்தில் இருவரும் இணைந்து நடித்தார்கள். சில வருட இடைவெளிக்குப்பின் இரண்டு பேரும் ஒரு புதிய படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தை ஆனந்த் சங்கர் இயக்குகிறார். இவர் ‘அரிமா நம்பி,’ ‘இருமுகன்,’ ‘நோட்டா’ ஆகிய படங்களை இயக்கியவர். எஸ்.வினோத்குமார் தயாரிக்கிறார். இதில் விஷால் கதாநாயகனாகவும், ஆர்யா வில்லனாகவும் நடிக்கிறார்கள். ...

Read More »

பொம்பியோவின் ஓட்டமும் சீனாவினது சீற்றமும்

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் சில மணி நேரங்கள் மட்டுமே எஞ்சி இருக்கின்றது. நவம்பர் 3ம் திகதி அங்கு தேர்தல். ஜனாநாயக் கட்சியும் குடியாரசுக் கட்சியும் அங்கு மாறி மாறி அதிகாரித்தில் இருந்து வருகின்றது. வரலாற்றில் ஒரு முறை ஜோர்ஜ் வொசிங்டன் மட்டும் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கின்றார். அமெரிக்கா ஜனாதிபதித் தேர்தல் பற்றிய வரலாற்றுச் சுருக்கம் அப்படி இருக்க. ட்ரம்ப் அமெரிக்க வரலாற்றில் ஒரு வித்தியாசமான பாத்திரம் அவரைக் கோமளி என்று அழைப்பதா வம்பன் என்று அழைப்பதா என்று எமக்குத் தெரியாது. ...

Read More »

போராட்டக்காரரை தாக்கிய ஆஸ்திரேலிய அதிகாரி

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் அகதிகள் சிறைவைக்கப்பட்டிருக்கும் ஹோட்டலுக்கு வெளியே அகதிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடந்த நிலையில், ஆஸ்திரேலிய காவல் அதிகாரி ஒருவர் போராட்டக்காரரை தாக்கும் காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய சுமார் நூற்றுக்கணக்கான அகதிகள் தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் கங்காரூ பாய்ண்ட் எனும் ஹோட்டலில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் முன்னதாக கடல் கடந்த தடுப்பில் வைக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவுக்குள் அழைத்து வரப்பட்டவர்களாவர். இந்த சூழலில், அகதிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடந்த பொழுது ஒரே அடியில் வீழ்த்தும் ...

Read More »

படகு தீப்பிடித்து கடலில் மூழ்கியதில் 150 குடியேற்றவாசிகள் பலி

செனெகல் கடற்பகுதியில் அகதிகள் குடியேற்றவாசிகளின் படகொன்று தீப்பிடித்து நீரில் மூழ்கியதில் 150க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் முயற்சியில் ஈடுபட்ட குடியேற்றவாசிகளே கடலில் உயிரிழந்துள்ளனர். படகு தீப்பிடித்ததன் காரணமாக இந்த துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தீப்பிடித்த படகில் 200க்கும் அதிகமானவர்கள் காணப்பட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 60 பேரை மீட்டுள்ளதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். செனெகலின் வடமேற்கு செயின் லூயிஸ் கடற்பகுதியிலிருந்து புறப்பட்ட படகே விபத்தில் சிக்கியுள்ளது. ஸ்பெயின் கனரி தீவுவின் மூலமாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முயன்றவர்களே பலியாகியுள்ளனர். இந்த வருடம் ...

Read More »

கெஹெலிய ஊடகங்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை என்ன?

கொரோனாவின் முதல் அலை நாட்டில் உருவானபோது அதைத் தோற்கடிக்க ஊடகங்கள் அதிக ஆதரவு வழங் கியது அதே போல இம்முறையும் அரசாங்கம் எதிர்பார்ப் பதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக் வெல்ல தெரிவித்துள்ளார். அதற்காக அதிகபட்ச பங்களிப்பை வழங்குமாறு அனை த்து ஊடக நிறுவனங்களிடமும் ஊடகப்பேச்சாளரும், அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ஊடக வியலாளர் சந்திப்பில் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த காலத்தில் கொவிட்- 19 கொரோனா தொற்றின் போது மின்னணு ஊடக நிறுவனங்களுக்கு அரசாங்கம் வழங்கிய சில நிவாரணங்களைச் சங்கத்தின் பிரதிநிதி கள் நினைவு கூர்ந்தனர், மேலும் ...

Read More »