குமரன்

அவுஸ்ரேலியாவில் சிறிலங்கா இளைஞன் விபத்தில் மரணம்!

அவுஸ்ரேலியா மெல்பேர்ண் நகரத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் சிறிலங்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரத்தில் பணிபுரிந்து வந்த இந்த நபர் சிறிலங்காவைச் சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது. களுத்துறை மாவட்டம் அளுத்கம என்ற இடத்தைச் சேர்ந்த தரிந்து குரே என்ற 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனது மோட்டார் வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனமையினால் ஏற்பட்ட விபத்து காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

Read More »

அவுஸ்தரேலிய விமான வெடிகுண்டு தாக்குதல் திட்டம் குறித்த விசராணை!

எதிஹாட் ஏர்வேஸ் (Etihad Airways) விமானத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த போடப்பட்ட சதித் திட்டம் குறித்து விசாரணை மேற்கொள்ள, துருக்கிய காவல் துறையினர், அவுஸ்ரேலிய அதிகாரிகளுடன் பணியாற்றி வருகின்றனர். அந்த வெடிப்பொருட்கள் துருக்கியில் இருந்து வரவழைக்கப்பட்டவை என அவுஸ்ரேலியா கூறுகிறது. அந்தச் சதித் திட்டத்துக்கும், ஐ. எஸ். அமைப்புக்கும் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கடந்த மாதம், சிட்னியில் இருந்து புறப்படவிருந்த விமானத்தில், அவுஸ்ரேலிய ஆடவர் ஒருவர், தனது சகோதரரிடம், வெடிகுண்டைக் கொடுத்து, அனுப்பி வைத்ததாக அவுஸ்ரேலியா காவல் துறையினர் கூறினர். அந்த வெடிகுண்டை, இறைச்சி ...

Read More »

அவுஸ்ரேலியாவில் வீடில்லாதோருக்குத் தனியொரு கிராமம்!

சிட்னி நகரின் மத்தியில், சுற்றிலும் வானளாவிய கட்டடங்கள். வளமும் வாழ்வும் ததும்பும் நகரப்பகுதியில், வீடில்லாதோருக்குத் தனியொரு கிராமமே உருவாகியுள்ளது. நகரின் சொகுசு வட்டாரமான மார்ட்டின் ப்ளேசில் 50க்கும் மேற்பட்ட வீடில்லாதோர் கூடாரம் அமைத்துத் தங்குகின்றனர். வீடில்லாப் பிரச்சினையில் அதிகாரிகள் போதுமான கவனம் செலுத்தாதது இந்நிலைமைக்குக் காரணம் என்று நகர மேயர் க்லோவர் மூர் கருதுகிறார். வீடில்லாதோரை வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்த நகர அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை என்று கூறிய திருவாட்டி மூர், கட்டுப்படியாகும் விலையில் வீடு வாங்க அரசாங்கம் உதவலாம் எனக் கூறினார். சிட்டியில் ...

Read More »

அவுஸ்ரேலியா நாட்டில் தமிழ் மொழிக்கு அங்கீகாரம்!

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் அயல்நாட்டுத் தமிழர்கள் குறித்த சிறப்பு சொற் பொழிவு தமிழியல் புலத்தில் 01 ஆம் திகதி நடைபெற்றது. தமிழியல் புல பொறுப்புத் தலைவர் வை. ராமராச பாண்டியன் தலைமை வகித்தார். தமிழ்துறை தலைவர் (பொறுப்பு) போ.சத்தியமூர்த்தி வரவேற்றார். இதில் பங்கேற்ற அவுஸ்ரேலிய நாட்டு தமிழறிஞர் சுவாமி சுப்ரமணியன் பேசியது: அவுஸ்ரேலியாவில் வாழும் மக்கள் குடியேறியவர்கள். பூர்வீக குடிகளாக வாழும் அவர்கள் மொழிவளம் இன்றி வசிக்கின்றனர். அங்கு மதிப்பின்றி வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இன்றைக்கும் அங்கு மொழி போர் நடக்கிறது. 600 ...

Read More »

ஃபிளாஷ் பிளேயர் இனி இருக்காதா?

இணையத்தின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் அடோப் ஃபிளாஷ் மென்பொருளுக்கு விடைகொடுக்க இருப்பதாக அடோப் நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருக்கிறது. அடோப் வெளியிட்ட அறிவிப்பில், ‘2020-ம் ஆண்டுவாக்கில் ஃபிளாஷ் பிளேயர் மென்பொருளை வெளியிடுவது மற்றும் அதற்கான அப்டேட்கள் நிறுத்தப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஃபிளாஷ் மென்பொருளின் முடிவு நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டது தான் எனவும் இப்போதாவது அடோப்புக்கு இதை அறிவிக்க மனம் வந்ததே என்பது போலவும் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஃபிளாஷ் பற்றிப் பலவித கருத்துகள் வெளிப்பட்டாலும் ஒரு காலத்தில் அது கொண்டாடப்பட்ட மென்பொருளாக இருந்ததை மறந்துவிடக் கூடாது. ஃபிளாஷ் ...

Read More »

ஆரவ்வை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன்: ஓவியா

நடிகர் ஆரவ்வை நான் உயிருக்கு உயிராக காதலிக்கிறேன். அவரை என்னால் மறக்க முடியாது என்று நடிகை ஓவியா கூறியுள்ளார். பிரபலங்களை வெளியுலக தொடர்பு இல்லாமல் 100 நாட்கள் வீட்டுக்குள் அடைத்து வைத்து ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை தனியார் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் நடத்தி வருகிறார். நடிகர்கள் கணேஷ் வெங்கட்ராம், வையாபுரி, சக்தி, பரணி, கஞ்சா கருப்பு, ஸ்ரீ, ஆரவ், கவிஞர் சினேகன், நடிகைகள் நமீதா, ஓவியா, அனுயா, காயத்ரி ரகுராம், ரைசா, ஆர்த்தி மற்றும் ஜூலி ஆகியோர் இதில் பங்கேற்று வந்தனர். இந்த நிகழ்ச்சியில் இருந்து ...

Read More »

சிட்னி மெல்பேர்ணில் நடைபெற்ற சமகால அரசியல் கலந்துரையாடல்கள்!

தாயக மக்களின் உரிமைக்கான அடிப்படைகளை இல்லாதொழிக்கின்ற அரசியல் செல்நெறிகளை நிராகரித்து, தமிழ் மக்களின் நீடித்த கௌரவமான பாதுகாப்பான அரசியல் செல்நெறிகளுக்கு வெளிப்படையாக புலம்பெயர்ந்த உறவுகளை ஆதரிக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்தார். அவுஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர் மெல்பேர்ண் மற்றும் சிட்னி நகரங்களில் நடைபெற்ற சமகால அரசியல் கலந்துரையாடல்களில் பங்குகொண்டு கருத்துரை வழங்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மெல்பேர்ணில் வேலை நாளாக இருந்தபோதும் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலிலும், சிட்னியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின்போதும் ஆர்வத்துடன் பலர் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் கால்பதிக்கும் அமேசன்: பலருக்கு வேலைவாய்ப்பு!

இணைய விற்பனையில் கொடிகட்டிப்பறக்கும் அமேசன் நிறுவனம் அவுஸ்ரேலியாவில் கால் பதிக்கிறது. அமேசன் நிறுவனத்தின் Warehouse ஒன்று மெல்பேர்னில் திறக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. Dandenong தெற்கில் 24,000 சதுர மீட்டர் அளவில் அமைக்கப்படும் Warehouse-அமைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கு பணிபுரிவதற்கான வாய்ப்பு, நூற்றுக்கணக்கான அவுஸ்திரேலியர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மூன்றாம் தரப்பு வர்த்தக நிறுவனங்கள் பல அமேசன் ஊடாக தமது பொருட்களை விற்பனை செய்துவரும் நிலையில்,அவுஸ்ரேலியாவுக்கான விநியோகங்கள் அனைத்தும் இந்தப் புதிய Warehouse ஊடாக நடைபெறும் என தெரியவருகிறது. இங்குள்ள ஏனைய வர்த்தக நிறுவனங்களுக்கு பாரிய ...

Read More »

இரண்டு வித அளவுகளில் தயாராகும் அப்பிள் ஐபோன் 8!

அப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் புதிய ஐபோன் இரண்டு வித அளவுகளில் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரீமியம் OLED ஐபோன் இரண்டு வித அளவுகளில் வெளியாகும் என்ற தகவல் சாம்சங் டிஸ்ப்ளே தயாரிப்பு பணிகள் நடைபெறும் A3 ஆலையில் இருந்து கசிந்துள்ளது. இதே ஆலையில் ஆப்பிள் நிறுவனத்திற்கான OLED பேனல்கள் தயாரிக்கப்படுகிறது. ஆகஸ்டு மாத இறுதியில் அப்பிள் ஐபோன்களுக்கான OLED-க்கள் முழுவீச்சில் தயாரிக்கப்படும் என தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே ஆலையில் ஐபோன்களுக்கென 5.8 மற்றும் 6.0 இன்ச் அளவுகளில் OLED-க்கள் ...

Read More »

பெங்களூருவில் பிரியாமணி திருமணம்!

நடிகை பிரியாமணி திருமணம் பெங்களூருவில், வருகிற 23-ந்திகதி நடக்கிறது. அவர் தனது காதலரை மணக்கிறார். ‘கண்களால் கைது செய்’ என்ற படத்தின் மூலம் டைரக்டர் பாரதிராஜாவினால் தமிழ் படஉலகுக்கு கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் பிரியாமணி. ‘அது ஒரு கனாக்காலம், தோட்டா, நினைத்தாலே இனிக்கும், மலைக்கோட்டை’ உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார். டைரக்டர் அமீர் இயக்கிய ‘பருத்தி வீரன்’ படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. பிரியாமணிக்கும், தொழில் அதிபர் முஸ்தபா ராஜுக்கும் இடையே நீண்டகாலமாக காதல் இருந்து வந்தது. 3 ...

Read More »