குமரன்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா முதலிடம்!

அவுஸ்ரேலியா அணியுடனான ஒருநாள் தொடரில் 2-0 என்று முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது. அவுஸ்ரேலியா அணியுடனான ஒருநாள் தொடரில் 2-0 என்று முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள அவுஸ்ரேலியா அணி ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. சென்னையில் நடந்த முதல் போட்டியை இந்தியா வென்ற நிலையில், நேற்று (21) கொல்கத்தாவில் இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. குல்தீப் யாதவின் ஹாட்ரிக் ...

Read More »

எதிர்வரும் மார்ச் 30க்குள்ளேயே மாகாண, உள்ளூராட்சித் தேர்தல்கள்!

எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள்ளேயே மூன்று மாகாணசபைத் தேர்தல்களும் உள்ளூராட்சித் தேர்தல்களும் நடைபெறும் என சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் மாகாணசபைத் தேர்தல் திருத்தச்சட்டம் தொடர்பாக உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் உரையாற்றுகையில், ‘சிலர் குறைகூறுவதைப் போன்று சட்டங்கள், பிரேரணைகள் மூலம் தேர்தலைப் பிற்போடமுடியாது. மூன்று மாகாணசபைகளின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகின்றது. அவற்றுக்கான தேர்தல்களும், உள்ளூராட்சித் தேர்தல்களும் எதிர்வரும் மார்ச் 30இற்குள் நடைபெறும். மாகாணசபைகள் அனைத்துக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். ...

Read More »

குடியுரிமைச் சட்டத்தை மாற்றியமைக்கும் முனைப்பில் அவுஸ்திரேலிய அரசு!

Permanent residency எனப்படும் நிரந்தர வதிவிட உரிமை பெற்றபின்னர், ஒரு ஆண்டு நாட்டில் வாழ்ந்தால் அவர்கள் குடியுரிமை பெற தகுதி பெறுவர் என்ற தற்போதைய நிபந்தனையை மாற்றி அமைக்கப்படவுள்ளது. ஒருவர் வதிவிட உரிமையுடன் நான்கு ஆண்டுகள் நாட்டில் வாழ்ந்திருந்தால் மட்டுமே குடியுரிமை பெற முடியும். அத்துடன், ஆங்கிலப்புலமையை நிரூபித்தல் போன்ற பல புதிய நிபந்தனைகள் தற்போது அரசு முன்வைக்கும் குடியுரிமைச் சட்ட முன்வடிவில் இடம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

Read More »

ஸ்மார்ட்போனின் போனில் தனிப்பட்ட விஷயங்களை பாதுகாப்பது எப்படி?

ஸ்மார்ட்போன் உங்கள் பாதுகாப்பை மனதில் கொண்டு பலவித பாதுகாப்பு அம்சங்களை போனுக்கு பொருத்திக் கொடுக்கிறது. அதை பயன்படுத்தி உங்கள் தனிப்பட்ட விஷயங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். உங்கள் ஸ்மார்ட்போனின் மூலம் நீங்கள் பல விஷயங்களை செய்வீர்கள். வங்கி கணக்கு முதல் சமூக வலைதளம் வரை பல செயல்களை செய்கின்றோம். ஆனால் இவை அனைத்தும் பாதுகாப்பாக நடைபெறுகிறதா என்பதை சரி பார்க்க வேண்டியது அனைவரின் கடமையாகும். மற்றவர்கள் உங்கள் விவரங்களை பகிராமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். ஸ்மார்ட்போனை பயன்படுத்திய பின் ஒவ்வொரு முறையும் அதை ...

Read More »

ஒன்பிளஸ் 5 லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் வெளியானது

ஒன்பிளஸ் நிறுவனம் பிரான்ஸ் வடிவமைப்பாளரான ஜீன்-சார்லஸ் டீ கேசல்பெஜக் உடன் இணைந்து ஒன்பிளஸ் 5 லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனினை வெளியிட்டுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் மற்றும் பிரான்ஸ் வடிவமைப்பாளர் ஜீன்-சார்லஸ் டி கேசல்பெஜக் இணைந்து லிமிட்டெட் எடிஷன் ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனினை வெளியிட்டுள்ளன. ஒன்பிளஸ் 5 JCC+ என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் கலெக்ஷன் டிசைனர் ரகத்தை சார்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் பாரிஸ் நகரில் நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஸ்மார்ட்போனின் விலை 559 யூரோ ...

Read More »

நான்கு வயது குழந்தைக்கு அம்மாவான சாய் பல்லவி

பிரேமம் படம் மூலம் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களை கவர்ந்த சாய் பல்லவி, தற்போது நான்கு வயது குழந்தைக்கு அம்மாவாக நடித்து கவர இருக்கிறார். ‘பிரேமம்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறியவர் சாய் பல்லவி. அப்படத்தில் மலர் டீச்சராக நடித்திருந்த அவரது வேடம் அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்டது. இப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் மட்டுமின்றி, தமிழ் திரையுலக ரசிகர்களையும் தனது அழகாலும், நடிப்பாலும் மிகவும் கவர்ந்தார். இவரை தமிழில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. மணிரத்தினம் இயக்கத்தில் ‘காற்று ...

Read More »

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அழைப்பு!

இந்தியாவிடம் 5 அம்ச கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து மரணித்த தியாகி திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நிகழ்வுகளை பொது அமைப்புக்கள் மற்றும் கட்சிகளுடன் இணைந்து பெரும் எழுச்சியுடன் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எதிர்வரும் 26.09-2017 அன்று முற்பகல் 10.30 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகும். இந்நிகழ்வில் பொது மக்கள், அனைத்து அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொது அமைப்புக்களையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 1987 செப்டெம்பர் 15ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 1987ஆம் ஆண்டு ...

Read More »

விஜய்க்காக மீண்டும்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் `மெர்சல்’ படத்தில் ஒரு பாடலை பாடியிருக்கும் ஜி.வி.பிரகாஷ் விஜய்க்காக மற்றொன்றையும் செய்யவிருக்கிறார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்-ன் 100-வது படமாக பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `மெர்சல்’. முதல்முறையாக விஜய் மூன்று கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்த படத்தை அட்லி இயக்குகிறார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் இப்படத்தில் விஜய் ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடிக்கின்றனர். சமீபத்தில் மெர்சல் படத்தில் தனது காட்சிகளை முடித்த நடிகர் விஜய் சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டு ...

Read More »

16 எம்பி செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்!

ஜியோணி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. X1s என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த X1 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாகும். சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஜியோணி இந்தியவில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. ஜியோணி X1s என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் ஏற்கனவே வெளியிட்ட X1 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஆகும். இந்தியாவில் புதிய ஜியோணி X1s ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிளாக் மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கும் ஜியோணி X1s ...

Read More »

ஸ்மித்தின் கப்டன் பதவி தற்போது சவாலாக உள்ளது!

அவுஸ்ரேலிய அணியின் கேப்டன் ஸ்மித்தின் கப்டன் பதவி தற்போது சவாலுக்குள்ளாகியுள்ளது என முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார். அவுஸ்ரேலிய அணியின் தலைசிறந்த கேப்டனாக திகழ்ந்தவர் ரிக்கி பாண்டிங். அதன்பிறகு மைக்கேல் கிளார்க் அந்த அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். முதுகு வலி பிரச்சினை காரணமாக அவரால் நீண்ட காலம் அவுஸ்ரேலிய  அணியில் நீடிக்க முடியவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை இழந்த பின்னர் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் 2015-ம் ஆண்டு அவுஸ்ரேலியா – நியூசிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின்போது சர்வதேச ...

Read More »