குமரன்

யாழ் கோட்டைப்பகுதியில் 2700 ஆண்டுக்கு முற்பட்ட ஆதி இரும்புகால மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கண்டுபிடிப்பு!

யாழ்ப்பாணம் கோட்டைக்குள் உள்ள சிறைச்சாலைக்கு அண்மையாக நடத்தப்பட்ட அகழ்வு ஆய்வுப் பணிகளில் அங்கு 2 ஆயிரத்து 700 ஆண்டுகளுக்கு முன்னர், ஆதி இரும்புக் கால மக்கள் வாழ்ந்ததற்கான நம்பகரமான உறுதியான சான்று கண்டுபிடிக்கப்பட்டது இவ்வாறு தொல்லியல் பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் தெரிவித்தார். கோட்டைப் பகுதியில் வாழ்ந்த மக்கள், தென்கிழக்கு ஆசியா, மேற்கு ஆசியா மற்றும் ஆபிரிக்கா நாடுகளுடன் வணிக உறவு கொண்டிருந்தமையையும் அதன் முக்கிய நிலையமாக யாழ்ப்பாணம் கோட்டைப் பிரதேசம் அமைந்திருந்தது என்பதையும் உறுதிப்படுத்தும் சான்றுகளும் உள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் ...

Read More »

இனவாத தாக்குதல்கள் தேசிய நலனுக்கு பாதிப்பு!- ரவூப் ஹக்கீம்

சிறுபான்மை மக்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளை, சமயம் சார்ந்து பார்க்காமல் அவை நாட்டின் தேசிய நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் செயற்பாடு என்பதை பெரும்பான்மையின மக்கள் உணர்ந்துகொள்ளும் வகையில் எமது அரசியல் செயற்பாடுகள் அமையவேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தெரிவான உறுப்பினர்களுக்கான இருநாள் வதிவிட செயலமர்வின் முதல் நாள் அமர்வு நேற்று (28) மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் சர்வோதய பயற்சி நிலையத்தில் நடைபெற்றது. இச்செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். ...

Read More »

இந்தோனேசியாவின் லம்போக் தீவை உலுக்கிய நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான லாம்பாக் தீவில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ள நிலநடுக்கதால் சேதம் அதிகளவில் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதிகளவில் நிலநடுக்கம் ஏற்படும் பூமியின் வளையப் பகுதியில் அமைந்துள்ளது இந்தோனேசியா.தீவுக் கூட்டங்களை உள்ளடக்கிய இந்தோனேசியா, சர்வதேச அளவில் முக்கிய சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. இந்நிலையில், இந்தோனேசியாவின் முக்கியச் சுற்றுலாத் தளங்களில் ஒன்றான லாம்பாக் தீவில் இன்று காலை உள்ளூர் நேரப்படி 6.47 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.4 ...

Read More »

தமிழ்த் தலைவர்கள் ஏன் இணக்க அரசியல் செய்ய முடியாது?

‘தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. முஸ்லிம் அரசியல் வாதிகளைப் பாருங்கள். அவர்கள் இந்த நாட்டில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அதோடு இணைந்து தமது பிரதேசங்களுக்கும் தமது மக்களுக்கும் பெரிய அபிவிருத்தியைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் தமிழ் அரசியற் தலைவர்கள் தமக்குள் முரண்பட்டுக்கொண்டு எதிர்ப்பு அரசியலை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்’…… இவ்வாறு கூறியிருப்பவர் வடமாகாண ஆளுநர் குரே. சில நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி முத்துத்தம்பி மகாவித்தியாலயத்தில் நடந்த வருடாந்தப் பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய போது அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார். இதே கருத்துப்பட ...

Read More »

கற்பித்துக்கொண்டிருந்த ஆசிரியர் திடீர் மரணம்!

மாணவர்களுக்கு கல்வி கற்பித்துக்கொண்டிருந்த ஆசிரியர் ஒருவர் தீடீரென்று ஏற்பட்ட மாரடைப்பினால் அந்த இடத்திலேயே வீழ்ந்து உயிரிழந்துள்ளார். அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் Berwick College பாடசாலையில் கடந்த வியாழக்கிழமை மாணவர்களுக்கு கல்வி கற்பித்துக் கொண்டிருக்கும் போது ஆசிரியர் ஒருவர் அந்த இடத்திலேயே விழுந்து உயிரிழந்துள்ளார். தீடீரென்று ஏற்பட்ட மாரடைப்பினால் பீஜி நாட்டை பூர்வீகமாக கொண்ட சத்யா நாதன் (வயது 60) என்ற ஆசிரியரின் திடீர் உயிரிழப்புக்குக் காரணம் என கூறப்படுகிறது. இதேவேளை இவர் கடந்த 1990 ஆம் ஆண்டு பீஜியிலிருந்து மெல்போர்னுக்கு வந்து குடியேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More »

“சினிமா… ஒரு மரணிக்கும் கலை!” -இயக்குநர் வெற்றிமாறன்

‘தமிழகம் இனி’ எனும் தலைப்பில் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், “இப்போது சகிப்புத்தன்மை குறைந்து கொண்டே வருகிறது. அரசை கேள்வி கேட்கும், விமர்சிக்கும் படங்களை வேண்டாம் என்கிறார்கள். இதுபோன்ற பிரச்னைகளை மீறித்தான் படங்கள் எடுக்க வேண்டியுள்ளது. சினிமா மரணிக்கும் ஒரு கலையாக இருக்கிறது. 200 படங்களில் 5 படம் தான் வெற்றி பெறுகிறது. லாபமில்லாத துறையாக சினிமா துறை மாறி வருகிறது. சினிமா மக்களின் ஊடகம். நேரடியாக மக்களிடம் கொண்டு சேரும் ஊடகம். சினிமாவை குறைந்த அளவு பொறுப்புடன் பயன்படுத்தினால் கூட அது நல்லத்தாக்கத்தை ...

Read More »

என்ன அழகு…! இன்ஸ்டாகிராமையே அதிர வைத்த அழகான குழந்தை!

ஜப்பானை சேர்ந்த 7 மாத குழந்தை ஒன்றின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் மிகவும் அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது. ஜப்பானை சேர்ந்த 7 மாத குழந்தை சான்சோ. கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஜப்பானில் பிறந்த இக்குழந்தை பிறக்கும் போதே அதிக தலைமுடியுடன் பிறந்துள்ளார் என அந்நாட்டு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. சான்சோ பிறந்தது முதல் அவரது புகைப்படங்களை @babychanco என்னும் இன்ஸ்டாகிராம் கணக்கின் பெயரில் அவரது குடும்பத்தார் பகிர்ந்து வருகின்றனர். இவரது அழகிய புன்னகைக்கும், அழகிய புகைப்படங்களுக்கு ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இணையத்தில் குவிந்துள்ளனர். ...

Read More »

நல்லாட்சியில் சிங்களக் குடியேற்றங்களும் பௌத்த மதபரம்பலும்!

இலங்கையில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும், வடக்கு – கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் இன்னமும் இலங்கை இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இராணுவத்தால் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளமையால் பல ஆண்டுகளாக அந்த காணிகளை நம்பி தமது வாழ்வாதரத்தை மேற்கொண்டு வந்த விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் சீர்குலைத்து அவர்கள் நிர்கதிக்குள்ளாகியுள்ளனர். இத்தகைய செயற்பாடு நல்லிணக்க முயற்சிகளை வெகுவாகப் பாதித்துள்ளது மட்டுமன்றி, இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான விமர்சனங்களுக்கும் வழிவகுக்குத்துள்ளது. ஆனாலும் இலங்கையின் நிலைமாறுகால நீதி ...

Read More »

சிறிலங்கா காவல்துறையின் செயல்பாடுகளில் எமக்கு நம்பகத் தன்மை கிடையாது! – சத்தியமூர்த்தி

சிறிலங்கா காவல்துறை தனது கடமைகளை ஆற்ற தவறிவருவதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி குற்றஞ்சுமத்தியுள்ளார். காவல்துறையின் செயல்பாடுகளில் எமக்கு நம்பகத் தன்மை கிடையாது. இருப்பினும் சட்டத்தை நடை முறைப்படுத்தும் பொறுப்பு தங்களிடமே உள்ளதனால் நாடுகின்றோம் என காவல்துறை எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கொண்ட காவல்துறையினர் வெறும் பார்வையாளராக இருப்பின் சீரான நிர்வாகத்தை கொண்டு நடாத்த முடியாது. இதற்கு காவல்துறையின்; ஒத்துழைப்புத் தேவை. குடாநாட்டில்இடம்பெறும் வன்முறைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கும் காவல்துறையினர் ...

Read More »

ரணிலின் வருகையை புறக்கணிக்கிறது ஏறாவூர் நகரசபை!

நாளை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரம சிங்கவின் பங்கேற்புடன் நடைபெறவுள்ள மட்டக்களப்பு- ஏறாவூர் பிரதேச செயலகக் கட்டடத் திறப்புவிழா நிகழ்வில் ஏறாவூர் நகர சபையின் முதல்வர் உட்பட ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் கலந்துகொள்ளாது புறக்கணிக்கத் தீர்மானித்தள்ளதாக நகர முதல்வர் ஐ.அப்துல் வாசித் தெரிவித்தார். இதேவேளை பிரதமரின் வருகையினை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் எவ்வித பணிகளிலும் நகர சபை ஊழியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துவதில்லையென்றும் முடிவுசெய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இக்கருத்துத் தெரிவிக்கப்பட்டது. சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க வருகை ...

Read More »