கற்பித்துக்கொண்டிருந்த ஆசிரியர் திடீர் மரணம்!

மாணவர்களுக்கு கல்வி கற்பித்துக்கொண்டிருந்த ஆசிரியர் ஒருவர் தீடீரென்று ஏற்பட்ட மாரடைப்பினால் அந்த இடத்திலேயே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் Berwick College பாடசாலையில் கடந்த வியாழக்கிழமை மாணவர்களுக்கு கல்வி கற்பித்துக் கொண்டிருக்கும் போது ஆசிரியர் ஒருவர் அந்த இடத்திலேயே விழுந்து உயிரிழந்துள்ளார்.

தீடீரென்று ஏற்பட்ட மாரடைப்பினால் பீஜி நாட்டை பூர்வீகமாக கொண்ட சத்யா நாதன் (வயது 60) என்ற ஆசிரியரின் திடீர் உயிரிழப்புக்குக் காரணம் என கூறப்படுகிறது.

இதேவேளை இவர் கடந்த 1990 ஆம் ஆண்டு பீஜியிலிருந்து மெல்போர்னுக்கு வந்து குடியேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.