யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரனை அந்தப் பதவியிலிருந்து விலக்கியிருப்பதாக ஜனாதிபதி அறிவிப்பொன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 30 ஆம் திகதியிலிருந்து அமலுக்கு வரும் வகையில், 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்துக்கு அமைவாக ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்களைப் பாவித்து, பேராசிரியர் இ. விக்னேஸ்வரன் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் துணைவேந்தர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார். எனினும் பேராசிரியர் இ. விக்னேஸ்வரனைப் பதவியில் இருந்து நீக்கியமைக்கான ...
Read More »குமரன்
மட்டக்களப்பு காட்டுப்பகுதியில் சஹ்ரானின் குண்டு தயாரிக்கும் முகாம் கண்டுபிடிப்பு !
மட்டக்களப்பு காட்டுப்பகுதியில் இருந்து தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் தலைவரான சஹ்ரானின் முக்கிய முகாமொன்றை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்துள்ளனர். மட்டக்களப்பு ரிதிதென்ன ஓமடியாமடுவிலுள்ள காட்டுப்பகுதியிலேயே குண்டுகள் தயாரிக்கும் முக்கிய முகாமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மகாவலி வலயத்திற்குட்பட்ட அரச காணியொன்றை வேறொருவரின் பெயரில் குத்தகைக்கு எடுத்து குறித்த பகுதியில் முகாம் அமைக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இந்நிலையில் தற்கொலைத் தாக்குதலுக்குப் பயன்படுத்திய குண்டுகளை அவ்விடத்தில் தான் தயாரித்து அனுப்பப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படையினர் சந்தேகிக்கின்றனர். இதேளை, குறித்த காட்டுப்பகுதியலுள்ள வீட்டில் திருத்த வேலைகள் அண்மையில் இடம் பெற்றமைக்கான ஆதாரங்களும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், ...
Read More »முப்படையினருடன் 10, 247 மேலதிக சிவில் பாதுகாப்பு படையினர் இணைப்பு!
தேசிய பாதுகாப்பிற்காக முப்படையினர் மற்றும் பொலிஸ் பிரிவினர் முன்னெடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக 10,247 சிவில் பாதுகாப்பு பிரிவினர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக சிவில் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, கத்தோலிக்க தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், அரச திணைக்களங்கள், பாடசாலைகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டன. 23 பாதுகாப்பு பிரிவில் 10,247 பாதுகாப்பு தரப்பினர் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். கொழும்பு உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகளிலும் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அநுராதபுரம், மஹா ஓயா,வெலி ஓயா, கெபிதிகொல்லாவ, மெதிரிகிரிய, மொனராகல, கொமரன்கடவல,புத்தளம் மற்றும் ...
Read More »மேலும் நான்கு இஸ்லாமிய அமைப்புகளுக்குத் தடை?
அரசாங்கம் அடுத்தவாரம் மேலும் நான்கு இஸ்லாமிய அமைப்புகளுக்குத் தடை விதிக்கவுள்ளதாக, மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். அவசரகாலச் சட்ட விதிமுறைகளின் கீழ், மேலும் 4 இஸ்லாமிய அமைப்புகளைத் தடை செய்யும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவை எனக் கண்டறியப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத் மற்றும் ஜமியத்து மில்லாது இப்ராகிம் ஆகிய அமைப்புகள் கடந்த வாரம் அரசாங்கத்தினால் அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் தடை செய்யப்பட்டன. இந்த அமைப்புகள் தீவிரவாத அமைப்புகளாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளன. இந்த அமைப்புகளுடன் தொடர்புகளை ...
Read More »ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் – முகநூலும் இலங்கைத்தீவும் -நிலாந்தன்
சமூக வலைத்தளங்களை ‘பலவீனமானவர்களின் ஆயுதம்’ என்று மானுடவியலாளர் ஜேம்ஸ் ஸ்கொட்(James Scott ) கூறியிருக்கிறார். 1985இல் மலேசிய கிராமங்களில் ஏற்பட்ட விவசாயிகளின் பிரச்சினை பற்றி அவர் எழுதிய நூலில் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார் இந்து மகா சமுத்திரத்தில் தமிழ் நாட்டை வர்தா புயல் தாக்கிய போதும் இலங்கையை கஜா புயல் தாக்கிய போதும் முகநூலும் ஏனைய சமூக வலைத் தளங்களும்; கைபேசிச் செயலிகளும் ஆக்கபூர்வமான பங்களிப்பை நல்கின. தேவைகளையும் உதவிகளையும் இணைப்பதில் பாரம்பரிய தொடர்பு சாதனங்களை விடவும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொடர்பு சாதனங்களை விடவும் ...
Read More »ரஷ்யாவில் விமானம் தீப்பற்றி எரிந்து விபத்து – 41 பேர் பலி!
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி அதில் பயணம் செய்த 41 பயணிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து முர்மன்ஸ்க் கிளம்பிய சுகோய் சூப்பர்ஜெட் 100 விமானம் அவசரமாக தரையிறங்கும் போது ஏற்பட்ட தீவிபத்தில் அந்த விமானத்தில் பயணம் செய்த 41 பேர் பலியாகினர். இந்திய நேரப்படி காலை 3 மணியளவில் கிளம்பிய சூப்பர்ஜெட் விமானத்தில் 78 பயணிகள் மற்றும் 5 விமான பணியாளர்கள் இடம்பெற்றிருந்தனர். மாஸ்கோவின் ஷெர்மெட்யெவோ விமான ...
Read More »மதூஷிடம் 4 ஆம் மாடியில் விசாரணை ஆரம்பம் !
தனது மகனின் பிறந்த நாள் களியாட்ட நிகழ்வின் போது ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி 6 நட்சத்திர ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டு டுபாயில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரபல பாதாள உலகத் தலைவனும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னனுமான மாக்கந்துரே மதூஷ் என அழைக்கப்படும் சமரசிங்க ஆராச்சிலாகே மதூஷ் லக்ஷித டுபாயிலிருந்து நேற்று நாடு கடத்தப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை 5 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த யூ.எல்.226 எனும் விமானத்தில் மாக்கந்துரே மதூஷ் நாடுகடத்தப்பட்டிருந்தார். விமான நிலையத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினர் அவரைப் ...
Read More »ஐரோப்பா செல்லும் கீர்த்தி சுரேஷ்!
நடிகையர் திலகம், சர்கார் படத்திற்குப் பிறகு புதிய படத்தில் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், படப்பிடிப்புக்காக ஐரோப்பா செல்ல இருக்கிறார். சர்கார் படத்தை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வேறு எந்த படமும் தமிழில் வெளியாகவில்லை. தெலுங்கில் பெரும் கவனம் பெற்றுத்தந்த நடிகையர் திலகம் படத்திற்குப் பின் அடுத்த படம் என்ன என்று தெலுங்கு ரசிகர்களும் காத்திருக்க, அவர் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்கில் நாகேஷ் குக்கனூர் இயக்கும் புதிய படத்தில் ...
Read More »இந்திய சுற்றுலாவாசியை வெளியேற்றிய ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்ற 45 வயது இந்தியர் ஒருவரின் செல்போனில் வெறுக்கத்தக்க காணொலி இருந்ததால், அவரை ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்க அந்நாட்டு அதிகாரிகள் மறுத்துள்ளனர். கடந்த மே 2ம் திகதி மலேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவின் பெர்த் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த அவரிடம் பரிசோதனை நடத்திய போது இக்காணொலி கண்டெடுக்கப்பட்டதாக இன்று (மே 05) ஆஸ்திரேலிய எல்லைப்படை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனையை தொடர்ந்து அவரின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு, அவரின் சுற்றுலா விசாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த மே 2ம் திகதி முதல் பெர்த் குடிவரவு ...
Read More »தற்கொலை தாக்குதலின் போது உயிரிழந்த டென்மார்க் கோடீஸ்வரரின் 3 பிள்ளைகளது இறுதி கிரியைகள்!
கொழும்பு – ஷங்கிரி-லா ஹோட்டலில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் போது உயிரிழந்த, டென்மார்க்கைச் சேர்ந்த அன்டர்ஸ் பொவ்ல்சன் எனும் கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகளதும் இறுதிக் கிரியைகள், நேற்று முன்தினம் சனிக்கிழமை (04), டென்மார்க்கின் ஆருஷ் (Aarhus) மாகாணத்தில் இடம்பெற்றது. குறித்த குண்டுத் தாக்குதலின் போது, மேற்படி கோடீஸ்வரரின் மூத்த இரு பெண் பிள்ளைகளும் நான்காவது மகனுமே உயிரிழந்தனர். சம்பவத்தில், கோடீஸ்வரரும் அவரது மனைவியும், மூன்றாவது மகளும் உயிர்த் தப்பினர். குண்டுத் தாக்குதலில் உயிரிந்த கோடீஸ்வரரது இரு பெண் பிள்ளைகளதும் உடல்கள், அடையாளம் காணப்படும் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal