குமரன்

சமுத்திரக்கனியின் ஆண் தேவதை!

சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள ஆண் தேவதை வரும் ஆகஸ்டு மாதம் வெளியாகவுள்ளது. இயக்குனர் தாமிரா இயக்கத்தில், சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், அறங்காங்கி நிஷா, சுஜா வருணி ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆண் தேவதை. உலகயமாக்கல், திருமண உறவுகள் மற்றும் நவீன உலகத்தில் குழந்தையை வளர்க்கும் சவால்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பை பார்த்தாலே தெரியும். இன்றைய சமுதாயத்தில், கணவன் இல்லாமல் வாழும் திருமணமான பெண்கள் சந்திக்கும் விளைவுகள் தான் இப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இப்படம் அடுத்த ...

Read More »

காலாவதியான கண் மையை பயன்படுத்தியதால் பார்வை இழந்த பெண்!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் காலாவதியான கண் மையை பயன்படுத்தியதால் பார்வை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஷெர்லி பாட்டார். இவர் தனது கண் இமைகளுக்கு கண்மை பூசி அலங்காரம் செய்தார். ஆனால் சில நாட்களிலேயே கண் எரிச்சல் தொடங்கியது. இதனால் அவதிப்பட்ட அவர் டாக்டர்களிடம் சென்று சிகிச்சை பெற்றார். கண்ணை பரிசோதித்த டாக்டர் ஷெர்லி காலாவதியான கண் மையை பயன்படுத்தி இருப்பதாக கூறினார். இது 20 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டது. எனவே கண்ணில் தொற்று ஏற்பட்டு பார்வை பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக ...

Read More »

65 ஆண்டு கால கொரிய போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் – தென்கொரியாவை வலியுறுத்தும் வடகொரியா!

கொரிய போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான உடன்படிக்கையை தீவிரமாக செயல்படுத்தும்படி தென்கொரியாவை வடகொரியா அரசு வலியுறுத்தி உள்ளது. எலியும் பூனையுமாக இருந்த வடகொரியா, தென் கொரியா நாடுகளிடையே இருந்த போர்ப்பதற்றம் கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு தணியத் தொடங்கியது. போரை முடிவுக்கு கொண்டு வந்து, இணக்கமாக செல்வற்கு வடகொரிய அதிபர் முன்வந்ததையடுத்து, ஏப்ரல் மாதம் 27-ம் தேதி இரு நாட்டு தலைவர்களிடையே வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு நடைபெற்றது. வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், தென்கொரிய அதிபர் முன் ஜே இன் ...

Read More »

செம்­மணி புதை­குழி விவ­கா­ரம்- காவல் துறை ஒத்­துழைப்பில்லை!

செம்­ம­ணி­யில் எலும்­புக்­கூட்டு எச்­சங்­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட பிர­தே­சத்­தில் பரி­சோ­த­னை­கள் மேற்­கொள்­வ­தற்­காக யாழ்ப்­பா­ணம் போதனா மருத்துவ மனை­யின் சட்ட மருத்துவ அதி­காரி நேற்­றுப் பிர­சன்­ன­மா­னார். காவல் துறை குற்­றத் தடுப்­புப் பிரி­வின் பொறுப்ப­தி­காரி சம்­பவ இடத்துக்கு வருகை தர­வில்லை. மேல­திகஅகழ்­வுப் பணி­க­ளும் பரி­சோ­த­னை­க­ளும் ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளன. நீர்த்­தாங்கி அமைப்­ப­தற்­காக செம்­ம­ணி­யில் கடந்த வெள்­ளிக் கிழமை நிலம் அக­ழப்­பட்­டது. மனித எலும்­புக்­கூட்டு எச்­சங்­கள் வெளித்­தெ­ரிந்­தன. அகழ்­வுப் பணி­கள் உட­ன­டி­யாக நிறுத்­தப்­பட்­டது. யாழ்ப்­பா­ணம்காவல் துறையினரக்கு அறி­விக்­கப்­பட்­டது. சம்­பவ இடத்தை யாழ்ப்­பாண மாவட்ட நீதி­வான் சதீஸ்­க­ரன் நேற்­று­முன்­தி­னம் மாலை நேரில் சென்று பார்­வை­யிட்­டார். ...

Read More »

திட்டமிடப்படாத கிரவல் அகழ்வும் திட்டமிட்டே அழிக்கப்படும் வன்னிக் காடுகளும்!

எவனொருவன் திட்டமிடாமல் செயற்படுகின்றானோ அவன் திட்டமிட்டே தோல்வியை தழுவிக்கொள்கிறான் என்பது ஒரு பழமொழி. இது அனைத்து வகையான செயற்பாடுகளுக்கும் பொருந்தும். மிக முக்கியமாக அபிவிருத்தி பணிகளின் போது சிறந்த திட்டமிடல் அவசியம் நிலைத்து நிற்கும் அபிவிருத்தியில் இது கட்டாயம் வலியுறுத்தப்படுகிறது. ஆனால் வன்னியின் பல இடங்களிலும் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி பணிகளின் போது இந்த திட்டமிடலுக்கு என்ன நடந்தது என்ற கேள்வி எழும்பும் வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக அபிவிருத்திக்கான கிரவல் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றபோது பல ஆயிரக்கணக்கான காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இச் செயற்பாடுகள் ...

Read More »

புதின் கொடுத்த கால்பந்தில் ஒட்டுக் கேட்கும் கருவிகள்?

ரஷிய அதிபர் புதின் டிரம்புக்கு பரிசாக கொடுத்த கால்பந்தை அதிகாரிகள் சோதனைக்கு உள்படுத்தியுள்ள நிலையில், அதில் ஒட்டுக்கேட்கும் கருவிகள் இருக்கலாம் என குடியரசு கட்சி செனட்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் – ரஷிய அதிபர் புதின் ஆகிய இருவரும் கடந்த 12-ம் திகதி பின்லாந்து நாட்டில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின் போது, புதின் டிரம்புக்கு கால்பந்து ஒன்றை பரிசளித்தார். பொதுவாக அமெரிக்க அதிபருக்கு வரும் எல்லா பரிசுப்பொருட்களும் சோதனைக்கு உள்படுத்தப்படுவது வழக்கம். தற்போதும் அதேபோல, அந்த கால்பந்தை பாதுகாப்பு ...

Read More »

நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தினால் வட மாகாண சபையில் குழப்பம் எழாது!-

நீதிமன்ற தீர்ப்பை உரிய முறையில் பின்பற்றினால் வட மாகாண சபையில் எவ்வித குழப்பங்களும் இடம்பெற மாட்டாது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறினார். நேற்று(21) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். நீதிமன்றம் பிறப்பித்துள்ள கட்டளையில் எவ்வித குழப்பமும் இல்லை என்று அவர் கூறியுள்ளார். நீதிமன்ற கட்டளையை சரியாக அமுல்படுத்தினால் எவ்வித குழப்பமும் இன்றி சுமுகமாக மாகாண ஆட்சி நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த தீர்ப்பில் தௌிவின்றி இருப்பதாக வேண்டுமென்றே பாசாங்கு காட்டிக் கொண்டு ...

Read More »

யாழ்ப்பாணத்தில் 93 கடற்படை முகாம்கள், 54 இராணுவ முகாம்கள்!

யாழ்ப்பாணக் குடாநாட்டில் தற்போது 93 கடற்படை முகாம்களும் 54 இராணுவ முகாம்கள் , ஒரு விமானப்படை தளம் என்பன இயங்குவதோடு 18 காவல் துறை  நிலையம் உட்பட 30 காவல் துறை அலுவலகம் இயங்குவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது வாழும் சுமார் 5 லட்சம் மக்கள் வாழும் குடாநாட்டில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மீன்பிடியை நம்பியே வாழும் நிலையில் கடற்படையினரே அதிக இடங்களை அபகரித்து நிலைகொண்டுள்ளமையினால் மீனவர்களின் வாழ்வாதாரம் இன்றும் பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது. இதிலும் குறிப்பாகக் குடாநாட்டைச் சூழ 93 முகாம்களில் ...

Read More »

மூடி மறைக்க முயலும் செயற்பாடு!

தமிழ் மக்­க­ளையும் உல­கத்­தையும் ஏமாற்றும் நோக்கில் இலங்கை அர­சாங்­கத்தால் அமைக்­கப்­பட்­டி­ருக்கும் காணாமல் ஆக்­கப்பட்டோர் அலு­வ­ல­கத்தை எதிர்த்தும் அமர்வைப் புறக்­க­ணித்தும் கடந்த 14 ஆம் திகதி சனிக்­கி­ழமை யாழில் காணாமல் ஆக்­கப்­ப­ட்­டோரின் உற­வுகள் பலர் மாபெரும் போராட்­டத்தை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர். அர­சாங்­கத்தால் அமைக்­கப்­பட்­டி­ருக்கும் காணாமல் ஆக்­கப்­ப­ட்டோர் தொடர்­பான அலு­வ­லகம் மாவட்டம் தோறும் காணாமல் போனோரின் உற­வு­களை சந்­தித்து உரை­யா­டி­வரும் நிகழ்ச்­சித்­திட்­டத்­துக்கு ஏற்ப யாழ். வீர­சிங்கம் மண்­ட­பத்தில் நடத்­தப்­பட்ட கலந்­து­ரை­யா­டலை உற­வி­னர்கள் முற்­றாக புறக்­க­ணித்­தது மாத்­தி­ர­மன்றி எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டத்­தையும் நடத்­தினர். காணாமல் போன தமது உற­வு­க­ளைத்­தேடி மாதக்­க­ணக்­காக, வரு­டக்­க­ணக்­காக ...

Read More »

இன்ஸ்டாகிராமில் கேள்வி-பதில் வசதி!

ஒளிப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராம் தளம் தொடர்ந்து புதிய அம்சங்களை அறிமுகம் செய்துவருகிறது. அந்த வரிசையில் அண்மையில், இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் இசையைச் சேர்க்கும் வசதியை அறிமுகம் செய்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது, கேள்வி பதில் வசதியை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ளது. இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் ஸ்டிக்கர் மூலம் கேள்வி கேட்க அழைப்பு விடுத்து அதற்கான பதிலை அளிக்கலாம். இன்ஸ்டாகிராம் நண்பர்களுடன் உரையாடுவதற்கான சுவாரசியமான வழியாக இது அமையும் என இன்ஸ்டாகிராம் குறிப்பிட்டுள்ளது. இந்த வசதியின் மூலம் நண்பர்களிடமும் கேள்வி கேட்டு விவாதத்தையும் தொடங்கலாம்.

Read More »