குமரன்

என்னுடைய உருவப் பொம்மையை ஒருமுறையல்ல ஆயிரம் முறை எரியுங்கள்

“என்னுடைய உருவப் பொம்மையை ஒருமுறையல்ல ஆயிரம் முறை எரியுங்கள் அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன். ஆனால் தமிழ் மக்களின் நீண்ட கால கொள்கைகளை நீங்கள் சார்ந்த கட்சியுடன் சேர்த்து எரித்துவிடாதீர்கள் என்று தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்” என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பல்துறை சேவையாளர்கள் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். முதலமைச்சரின் வவுனியா வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் அரசுக் கட்சியினரால் தமிழ் ...

Read More »

பிரான்ஸில் பதற்ற நிலை!

பிரான்ஸில் பல இடங்களில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   முகமூடி அணிந்த குழுவொன்று பல இடங்களில் கலவரங்களில் ஈடுபட்டு வருகின்றனர் இதனை கருத்திற் கொண்டே அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படவுள்ளது. அதன்படி பாரீஸ் நகரில் நேற்று பல இடங்களில் கலவரம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து அரசு தரப்பு, கலவர சம்பவங்களில் ஈடுபட்டவர்களை அமைதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.

Read More »

மன்னார் மனிதப் புதைகுழியில் பல எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன!

மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து தற்போது வரை 239 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதோடு, மேலும் பல எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று திங்கட்கிழமை (3) 109 ஆவது நாளாக -மன்னார் நீதவான் ரி.சரவணராஜாவின் மேற்பார்வையில்,சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் இடம் பெற்று வருகின்றது. இந்தநிலையில் தற்போது வரை 239 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதோடு மேலும் பல மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அகழ்வு பணிகள் இடம் பெற்று வரும் ...

Read More »

என்ன நடக்குமோ அது நடக்கட்டும்! – எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

இளையராஜா பாடல் காப்புரிமை விவகாரம் குறித்த கேள்விக்கு என்ன நடக்குமோ அது நடக்கட்டும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். கச்சேரிகளில் அனுமதி இல்லாமல் தனது பாடல்களை பாடுவதற்கு இசையமைப்பாளர் இளையராஜா ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்தார். பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வெளிநாடுகளில் நடந்த கச்சேரிகளில் தனது இசையில் உருவான பாடல்களை பாடுவதை எதிர்த்து அவருக்கு நோட்டீசும் அனுப்பினார். இதனால் இளையராஜாவின் பாடல்களை அவர் பாடவில்லை. ஆனாலும் ஐதராபாத்தில் சமீபத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அளித்த பேட்டியில் கச்சேரிகளில் மீண்டும் இளையராஜா பாடல்களை பாடுவேன் என்றும் இதற்காக அவர் சட்ட நடவடிக்கைகள் எடுத்தாலும் ...

Read More »

பெற்றோர்களற்ற குழந்தைகளை கடத்துவது என்பது நவீனகால அடிமைத்தனம்!

பெற்றோர்களற்ற குழந்தைகளை கடத்துவது என்பது நவீனகால அடிமைத்தனம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா இந்த விடயத்தை நேற்று அறிவித்துள்ளது. இந்த அறிவித்தலை விடுக்கும் உலகின் முதல் நாடு என்ற பெயரையும் அவுஸ்திரேலியா பெற்றுள்ளது. இந்தச் சட்டம், அவுஸ்திரேலியர்களை “தன்னார்வலர்” திட்டங்களில் பங்கு கொள்வதை தடுப்பதற்கான ஒரு பரந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. ஏனெனில், இது குழந்தைகளுக்கு உதவுவதற்கு மாறாக தீங்கு விளைவிப்பதே அதிகளவில் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஆதரவற்றோர் இல்லங்களில் வாழும் 80 சதவீத குழந்தைகளுக்கு தாய் அல்லது தந்தை என எவரோ ...

Read More »

மாவீரர் நாள் – 2018

கொழும்பில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களால் இம்முறை மாவீரர் நாளுக்கு இடைஞ்சல் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. கோப்பாயிலும் ஊர்காவற்துறையிலும் மாவீரர் நாள் ஏற்பாடுகளுக்கு எதிராக பொலீசார் நீதி மன்றத்தில் இரண்டு முறைப்பாடுகளைச் செய்தார்கள். பருத்தித்துறையில் பொலீசார் வணக்க நிகழ்வுகளைத் தடுக்க முற்பட்டார்கள். கிழக்கில் நடப்பட்ட நினைவுக்கற்களைப் பிடுங்கினார்கள். ராஜபக்சக்கள் மறுபடியும் ஆட்சிக்கு வரலாம் வெள்ளை வான்கள் மறுபடியும் வீதிக்கு வரலாம் என்றவாறாக ஊடகங்கள் மேலெழுந்த ஒருவித அச்ச சூழலில் மாவீரர் நாள் முன்னைய ஆண்டை போல இவ்வாண்டும் அனுஷ்டிக்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்தன. நாட்டின் முழுக்கவனமும் ...

Read More »

பொட்டு அம்மான் உயிருடன் இல்லையாம்!- மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன

விடுதலைப்புலிகளின் புலனாய்வுத் துறையின் பொறுப்பாளர் பொட்டு அம்மான் உயிருடன் இல்லை என்று மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை பொட்டம்மான் உயிருடன் உள்ளார் என்றும் அவர் தற்போது நோர்வே நாட்டில் இருப்பதாகவும்   விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இதுகுறித்து மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன கூறிய தகவல் இதோ; இந்த நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கையின் இறுதிப் போர் இறுதிக்கட்டத்திற்கு வந்தது. இதன்போது புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். ...

Read More »

ரணிலுடன் இணைந்து பணியாற்ற மாட்டேன்! – மைத்திரிபால சிறிசேன

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள அரசியல் நெருக்கடிகளிற்கு டிசம்பர் 31 ம் திகதிக்குள்  தீர்வை காணமுடியாவிட்டால் பொதுத்தேர்தலிற்கு செல்வதே ஒரே வழி என சிறிலங்கா  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிலோன் டுடேயிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் பொதுத்தேர்தலிற்கு செல்வதே உரிய தீர்வாக அமையமுடியும் என அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் இடம்பெற்றால் மக்கள் கடந்தகாலங்களில் இடம்பெற்றவைகள் மீள இடம்பெறாத நிலையை ஏற்படுத்த முடியும் என குறிப்பிட்டுள்ள சிறிசேன மக்கள் தங்கள் வாக்களி;ப்பின் மூலம் ஊழல்வாதிகள் மீண்டும் தெரிவு செய்யப்படாத நிலையை உறுதி செய்ய ...

Read More »

வட ஆப்பிரிக்காவில் மனிதர்கள் தோன்றியிருக்க வாய்ப்பு – விஞ்ஞானிகள் தகவல்

6 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வட ஆப்பிரிக்காவில் மனிதர்கள் தோன்றியிருக்க வாய்ப்பு என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியில் மனிதர்கள் தோன்றியது எங்கு? எப்போது? என்பது குறித்த பல்வேறு சர்ச்சைகளும், ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் வட ஆப்பிரிக்காவில் உள்ள அல்ஜீரியா நாட்டில் தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டது. அதில் அல்ஜீரியா உள்பட சர்வதேச நாடுகளின் நிபுணர்கள் பங்கேற்றனர். அதில் அல்ஜியர்ஸ் நகரில் இருந்து கிழக்கே 300 கி.மீ. தொலைவில் உள்ள செடிப் என்ற இடத்தில் கற்களால் ஆன கூர்மையான ஆயுதங்கள் கிடைத்தன. இவை ...

Read More »

இராஜினாமா செய்யப்போவதில்லை! -மகிந்த ராஜபக்ச

தனது பதவியை இராஜினாமா செய்யப்போவதில்லை என சிறிலங்கா ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை அமைக்கும் எண்ணத்தை கைவிடப்போவதுமில்லை  எனது பதவியை இராஜினாமா செய்யப்போவதுமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.   நாடாளுமன்றத்தை கலைத்தமை தொடர்பாக நீதிமன்றம் வெளியிடும் அறிவிப்பை பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆராயப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More »