குமரன்

மூன்று வேடங்களில் ராய் லட்சுமி!

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் பிரபலமான ராய் லட்சுமி, தற்போது புதிய படத்தில் மூன்று வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் ராய் லட்சுமி. இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளியான திரைப்படம் நீயா 2. இந்த படத்தில் இவருடன் ஜெய், வரல‌ட்சுமி சரத்குமார், கேத்தரின் தெரசா ஆகியோர் நடித்திருந்தனர். ஆனாலும் இந்த படம் ரசிகர்களிடம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. தற்போது ராய் லட்சுமி கதை நாயகியாக சிண்ட்ரெல்லா என்ற ...

Read More »

ஆஸ்திரேலிய பெண் சுட்டுக்கொலை – அதிகாரிக்கு 12½ ஆண்டு சிறை!

ஆஸ்திரேலிய பெண்ணை சுட்டுக்கொன்றது தொடர்பாக அமெரிக்க காவல் துறை அதிகாரிக்கு 12½ ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அமெரிக்காவில் காவல் துறை அதிகாரியாக பணியாற்றி வந்தவர், முகமது நூர். இவர் மினியா போலிஸ் நகரில் 2017-ம் ஆண்டு, ஜூலை மாதம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரது வாகனத்தை நோக்கி வந்த ஜஸ்டின் ரூஸ்சைக் டாமண்ட் என்ற ஆஸ்திரேலிய பெண்ணை அவர் சுட்டுக்கொன்று விட்டார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜஸ்டின் ரூஸ்சைக் டாமண்ட், தனது வீட்டின் பின்புறம் நடந்த ...

Read More »

முஸ்லிம் தலைவர்களுக்கு இணக்க அரசியலை விட்டால் வேறு தெரிவு உண்டா?

யாழ்ப்பாணத்தில் புடவைக் கடையில் வேலை செய்யும் ஒரு பெண் உள்ளாடைகள் வாங்குவதற்கு வந்த ஒரு பெண் வாடிக்கையாளரிடம் பின்வருமாறு கூறியிருக்கிறார். ;நீங்கள் கேட்கும் உள்ளாடைகள் நமது கடையில் இல்லை அவற்றை மின்சார நிலைய வீதியில் உள்ள ஒரு கடையில் வாங்கலாம் ஆனால் அங்கே நீங்கள் போக வேண்டாம் ஏனென்றால் அந்தக் கடையில் விற்கப்படும் உள்ளாடைகளில் ஒரு வித ரசாயனம் விசிறப்பட்டு இருப்பதாகவும் அது உடலுக்குத் தீங்கானது என்றும் ஒரு தகவல் உண்டு ; என்று. அவர் அவ்வாறு குறிப்பிட்ட அந்தக் கடை ஒரு முஸ்லீம் ...

Read More »

சிங்கள தலைவர்கள் அந்த ஒப்பந்தகளை மதித்து செயற்படவில்லை!

ஐக்கிய நாடுகள் சபையின் உதவி செயலாளர் நாயகமும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் பயங்கரவாத ஒழிப்பு நிறைவேற்று சபையின் நிறைவேற்று அதிகாரியுமான மிஷேல் கோனின்சஸ் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப்பேரவையின் பிரேரணையின் அமுலாக்கதின் முக்கியத்துவம் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா சம்பந்தன்  இந்த பிரேரணைகளின் கூட்டு பங்காளிகள் என்பதனை மறந்தவர்களாக அரசாங்கம் செயற்படுகின்றது என்றும் பிரேரணைகளின் முன் மொழிவுகளை அமுலாக்குவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என்பதனையும் சுட்டிக்காட்டினார். இந்த நிலைமை தொடர்பில் ...

Read More »

மல்லையா: இந்தியா – ஆஸ்திரேலியா போட்டியை கண்டுகளித்தார்!

ரூ. 9,000 கோடி கடன் பெற்று இங்கிலாந்து தப்பிச்சென்ற விஜய் மல்லையா இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதும், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை காண வந்துள்ளார். இந்திய வங்கிகளிடம் இருந்து ரூ. 9,000 கோடி கடன் பெற்று தப்பிச்சென்ற விஜய் மல்லையா, தற்போது இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார். விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டுவர அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. விஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து உள்துறை செயலாளர் அனுமதி வழங்கினார். இதனை எதிர்த்து விஜய் மல்லையா மேல் முறையீடு செய்துள்ளார். இந்த ...

Read More »

தமிழர்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட மணலாறு ஆமையன் குளம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் பூர்வீக நிலமான மணலாறு பகுதி  வெலிஒயா என பெயர் சூட்டப்பட்டு தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள் அனைத்தும் பறிக்ப்பட்டு பெரும்பான்மையின மக்களுக்கு வழங்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்கள மயமாக்கலின் செயற்பாடுகள் பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன .   1984 ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் திருகோணமலை எல்லைப்பகுதிகளிலிருந்து தமிழ்மக்கள் பெரும்பான்மையினத்திவர்களால் விரட்டியடிக்கப்பட்டு அங்கு பெரும்பான்மையினத்தவர்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள். இதனை தொடர்ந்து தமிழ் மக்களின்  பூர்வீக வயல் நிலங்களும் காணிகளும் பெரும்பான்மையினத்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வெலிஓயா எனும் புதிய பிரதேச செயலாளர் பிரிவு உருவாக்கப்பட்டு ...

Read More »

என்.ஜி.கே.: அரசியல் கட்சியில் சேர்ந்த சாதாரண இளைஞன் சந்திக்கும் பிரச்சினைகள்!

நடிகர்: சூர்யா  நடிகை: சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங்  டைரக்ஷன்: செல்வராகவன்  இசை : யுவன் ஷங்கர் ராஜா ஒளிப்பதிவு : சிவகுமார் விஜயன் கதாநாயகன் சூர்யா, கதாநாயகி சாய்பல்லவி, டைரக்‌ஷன் செல்வராகவன். அரசியல் கட்சியில் சேர்ந்து மக்களுக்கு நன்மை செய்ய விரும்பும் சாதாரண இளைஞன் சந்திக்கும் பிரச்சினைகள். செல்வராகவன் இயக்கியுள்ள படத்தின் விமர்சனம்.  கதையின் கரு:  ஸ்ரீவில்லிபுத்தூரில் வசிக்கும் சூர்யாவுக்கு சமூக நலப்பணிகளில் ஆர்வம். இளைஞர்களை ஒன்று சேர்த்து இயற்கை விவசாயம் செய்து பொருட்களை நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்கிறார். இதில் பாதிக்கப்படும் பூச்சி மருந்து கடைக்காரர்களும், கந்து ...

Read More »

சஹ்ரான் குழு குறித்த முழு பொறுப்பையும் அரசே ஏற்க வேண்டும்!

திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­பட்ட முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களை  தடுப்­பதில் அர­சாங்கம் தோல்­வி­ய­டைந்­துள்­ளது. பயங்­க­ர­வாதி குண்டு வெடிக்­க­ வைத்த தற்­காக சாதா­ரண முஸ்லிம் மக்கள் மீது தாக்­குதல் நடத்­தி­யது எவ்­வி­தத்தில் நியா­ய­மாகும். முஸ்லிம் மக்­களை தாக்கி  அவர்­க­ளது சொத்­துக்­களை அழித்­த­வர்­களை கைது செய்து உட­ன­டி­யாக விடு­வித்­துள்ள போது அர­சாங்­கத்தின் மீது எவ்­வாறு நம்­பிக்கை வைக்க முடியும். எனவே சமூ­கத்தை பாது­காப்­ப­தற்­காக போராட வேண்­டிய நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்ளோம். அர­சாங்கம் செவி­சாய்க்கா விடின் சர்­வ­தேச ஒத்­து­ழைப்பை பெற்­றுக்­கொண்டு செயற்­ப­டுவோம்  என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்­புல்லா தெரி­வித்தார். ...

Read More »

அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு அச்சுறுத்தல்?

அவுஸ்திரேலியாவில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய கல்வித்திணைக்களத்திடம் கல்வி அமைச்சர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். அவுஸ்திரேலியாவிலுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்களை இலக்கு வைத்து பல குற்றச்செயல்கள் இடம்பெறுவதாக அண்மையில் வெளிவந்த தகவல்களை அடுத்து இந்தக்கோரிக்கை அமைச்சு மட்டத்திலிருந்து எழுந்திருக்கிறது. குறிப்பாக மெல்பேர்ன் Monash பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்களை இலக்கு வைத்து கடந்த மூன்று வாரங்களில் 12 ற்கும் மேற்பட்ட திருட்டுச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் இந்தவாரம் ...

Read More »

தீவிரவாதத்தை இல்லாதொழிக்க சட்டங்களை மறுசீரமைப்பு செய்ய வேண்டும்!

சர்வதேச தீவிரவாதத்தை முழுமையா துடைத்தெறிய வேண்டுமாயின் சட்டங்களை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் எனத் தெரிவித்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க, அரசியல் காரணிகளை மைய்யப்படுத்தி ஒரு போதும் அடிப்படைவாத தீவிரவாதத்தை இல்லாதொழிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார். பௌத்த பிக்குமார்களை ஒன்றுப்படுத்தி இன்று கொழும்பில் ‘ஜாதிக மக’ என்ற தொனிப்பொருளில் தீவிரவாத  தாக்குதல் தொடர்பில் தெளிவுப்படுத்தல் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். ஈஸ்டர் குண்டு தாக்குதலை நடத்திய சஹ்ரான் உள்ளிட்ட குழுவினர் அழிவடைந்திருந்தாலும் இன்றும் இவர்களின் நோக்கம் மக்களோடு மக்களாக ...

Read More »