குமரன்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! 63 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌபீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 63பேரின் விளக்கமறியல் டிசெம்பர்  மாதம் 05ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. நுவரெலியாவில் உள்ள தேசிய தௌபீக் ஜமாத் தலைமைகத்தில் ஆயுத பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.   இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது டிசெம்பர் மாதம் ...

Read More »

ஓமந்தையில் வெடிபொருட்கள்!

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதர் பனிக்கர் மகிழங்குளம் பகுதியில் இருந்து பழுதடைந்த நிலையில் வெடிபொருட்களை மீட்டுள்ளதாக ஓமந்தை காவல் துறையினர்  தெரிவித்தனர். நேற்றையதினம் குறித்த பகுதியில் உள்ள தனியார் காணியினை துப்பரவாக்கிய காணியின் உரிமையாளர்கள் மண்ணில் புதையுண்ட நிலையில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்தனர். குறித்த விடயம் தொடர்பாக ஓமந்தை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த காவல் துறை  பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் நீதி மன்ற உத்தரவினை பெற்று இன்றையதினம் அவற்றை அகற்றவுள்ளதாக தெரிவித்தனர். குறித்த ...

Read More »

ஜெய் படத்தில் 100 நிமிட கிராபிக்ஸ் காட்சிகள்!

ஜெய் சூப்பர் ஹீரோவாக நடித்து வரும் ‘பிரேக்கிங் நியூஸ்’ படத்தில் 100 நிமிட கிராபிக்ஸ் காட்சிகள் இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் படம் ‘பிரேக்கிங் நியூஸ்’. திருக்கடல் உதயம் தயாரிப்பில் உருவாகும் இப்படம் விஷுவல் எபக்ட்ஸ் மேற்பார்வையாளராக ஏராளமான அனுபவம் பெற்ற ஆன்ட்ரூ பாண்டியன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இயக்கம் மட்டுமின்றி கதை, திரைக்கதை மற்றும் வசனம் ஆகிய பொறுப்புகளையும் இவரே ஏற்றிருக்கிறார். ‘பிரேக்கிங் நியூஸ்’ வழக்கமான கிராபிக்ஸ் காட்சிகள் கொண்ட படமல்ல. நிஜமான தளங்களில் படப்பிடிப்பை நடத்தி, அவற்றுடன் பிரம்மாண்டமான ...

Read More »

பல தஞ்சக்கோரிக்கையாளர்கள் உயிரிழிக்கக்கூடும்!

அண்மையில், பப்பு நியூ கினியாவில் ஆஸ்திரேலியாவின் நித உதவியுடன் உருவாக்கப்பட்ட Bomana குடிவரவுத்தடுப்பு முகாமில் சிறைப்படுத்தப்பட்டுள்ள சுமார் 50 தஞ்சக்கோரிக்கையாளர்கள், தொடர்ந்து சிறைப்படுத்தப்பட்டிருந்தால் மேலும் பல தஞ்சக்கோரிக்கையாளர்கள் உயிரிழிக்கக்கூடும் என எச்சரித்துள்ளார் குர்து அகதியும் பத்திரிகையாளருமான பெஹ்ரூஸ் பூச்சானி. ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமிலிருந்து சமீபத்தில் வெளியேறிய இவர், கடந்த 6 ஆண்டுகளாக மனுஸ்தீவில் சிறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது நியூசிலாந்துக்கு சென்றடைந்திருக்கிறார். “தஞ்சக்கோரிக்கையாளர்கள் கடுமையான அழுத்தத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பப்பு நியூ கினியாவில் தஞ்சம் கோர மறுப்பதால் அவர்கள் தண்டிக்கப்படுகின்றனர். ...

Read More »

ஜெனரல் குணரட்ணவின் நியமனம்! -பாதுகாப்பு குறித்து கோத்தாபய உறுதியாகவுள்ளார்!

இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கமால் குணரட்ண நியமிக்கப்பட்டுள்ளமை , இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ச இலங்கையின் பாதுகாப்பை உறுதிசெய்வது குறித்து மிகவும் உறுதியாகவுள்ளார் என்பதை புலப்படுத்தியுள்ளது. நவம்பர் 16 ம் திகதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவை முழுமையாக ஆதரித்த பெரும்பான்மை சிங்களவர்கள் இலங்கை ஜிகாத் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலின்கீழ் உள்ளது என்ற அச்சத்தின் கீழ் வாழ்ந்து வந்துள்ளனர். தமிழ் தீவிரவாதம் மீண்டும் எழுச்சியடைவது குறித்தஅச்சத்தின் கீழ் பெரும்பான்மை சமூகத்தின் ஒரு பகுதியினர் வாழ்ந்து வருவதும்,  ...

Read More »

சிறிலங்கா பிரதமராகிறார் மஹிந்த ராஜபக்ஷ!

மஹிந்த ராஜபக்ஷ சிறிலங்காவின் பிரதமராக நாளை பிற்பகல் 1.00 மணியளவில்  சிறிலங்கா ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்கவுள்ளார்.   அத்துடன் பிரதமராக பதவியேற்றதும் மாலை 3.30 மணியளவில் பிரதமர் அலுவலகத்தில் தனது கடமைகளையும் உத்தியோகபூர்வமாக பெறுப்பேற்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் 15 பேர் கொண்ட இடைக்கால அரசாங்கத்திற்கான அமைச்சர்களின் நியமனமும் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Read More »

காவேரி கூக்குரல் இயக்கம்- ஐ.நா அதிகாரிகளுடன் சத்குரு ஜக்கி வாசுதேவ் கலந்துரையாடல்!

காவேரி கூக்குரல் இயக்கத்தின் திட்டங்கள் மற்றும் உலகின் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் தொடர்பாக ஐ.நா சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கலந்துரையாடினார். சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக ஈஷா அறக்கட்டளை மேற்கொண்டு வரும் பணிகளை அங்கீகரிக்கும் வகையில், நிலம் பாலைவனமாதலை தடுக்கும் ஐக்கிய நாடுகளின் அமைப்பு(யுஎன்சிசிடி), ஈஷா அறக்கட்டளைக்கு சர்வதேச அங்கீகாரத்தை சமீபத்தில் வழங்கியது. இதன் தொடர்ச்சியாக, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ், ஜெர்மனி நாட்டின் பான் நகரில் உள்ள யுஎன்சிசிடி தலைமையகத்துக்கு நவம்பர் 18ம் திகதி சென்றார். அவருக்கு ஐ.நா. ...

Read More »

ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் நாளை தொடக்கம்!

ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நாளை தொடங்குகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்த பாகிஸ்தான் அணி அடுத்ததாக 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்த தொடர் உலக சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் ஒவ்வொரு வெற்றிக்கும் தலா 60 புள்ளிகள் வழங்கப்படும். இந்த தொடரில் இருந்து ...

Read More »

சகல தரப்­பையும் அர­வ­ணைக்கும் போக்கு இல்­லாமை விச­னத்­துக்­கு­ரி­யது!

சிறிலங்காவின்  ஜனா­தி­பதித் தேர்தல் பெரு­ம­ள­விற்கு அமை­தி­யா­ன­தா­கவும், நம்­ப­கத்­தன்மை மிகுந்­த­தா­கவும் இருந்த அதே­வேளை இலங்கை சமூ­கத்தில் ஒன்­றி­ணைவும், சகல தரப்­பி­ன­ரையும் அர­வ­ணைக்கும் போக்கும் இல்­லாமை விச­னத்­துக்கு­ரி­ய­தாக இருக்­கின்­றது என்று ஜனா­தி­பதித் தேர்­தலைக் கண்­கா­ணிப்­ப­தற்கு வந்­தி­ருந்த பொது­ந­ல­வாய கண்­கா­ணிப்­பாளர் குழுவின் தலைவர் புரொஸ்பர் பாணி தெரி­வித்­தி­ருக்­கிறார். கானா நாட்டின் முன்னாள் உள்­துறை அமைச்­ச­ரான பாணி தலை­மை­யி­லான கண்­கா­ணிப்புக் குழுவின் உறுப்­பி­னர்கள் நேற்று செவ்­வாய்­க்கி­ழமை கொழும்பு தாஜ்­ச­முத்ரா ஹோட்­டலில் செய்­தி­யாளர் மாநா­டொன்றை நடத்தி, தங்­க­ளது பூர்­வாங்க அறிக்­கையை வெளி­யிட்டனர். இறு­தி­ய­றிக்கை பொது­ந­ல­வாய செய­லாளர் நாய­கத்­திடம் சமர்ப்­பிக்­கப்­படும் என்றும், இலங்கை ...

Read More »

பாணின் விலை அதிகரிப்பு!

இன்று நள்ளிரவு முதல் பாண் உட்பட பேக்கரி உற்பத்தி உணவுப் பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி 450 கிராம் பாண் ஒன்றின் விலையானது 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. இன்று காலை இடம்பெற்ற அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் பேச்சுவார்த்தையின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 16 ஆம் திகதி ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 8 ரூபாவினால் அதிகரித்தமையின் காரணமாக தாம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் ...

Read More »