குமரன்

இன்னும் 10 ஆண்டுகளில் இலங்கையில் தமிழர்கள் இருப்பது சந்தேகமே.!

2035 ஆம் ஆண்டளவில் தமிழர் பற்றி பேச முடியாத நிலைமைக் கூட வந்துவிடுவதற்கு வாய்ப்பு உள்ளதென தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சிவாஜிலிங்கம் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தன்னிச்சையான போக்குதான் மாற்று அணிகள் உருவாகுவதற்கு காரணம். இதேவேளை புதிய கூட்டணிக்கு தலைமைத்துவ சபை ஒன்றை உருவாக்குது தொடர்பாக உத்தேசிக்கப்பட்டு வருகின்றது. அதாவது  விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, சுரேஷ் பிரேமசந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசியக் ...

Read More »

கீழடி என்பதே எங்கும் பேச்சு!

தேனீக்களின் இயல்பு தேனைச் சேகரிப்பதுதான். ஆனால், சேகரிக்கப்பட்ட தேனின் பயனாளிகள் தேனீக்கள் இல்லை என்றாலும், தொடர்ந்து தேனீக்கள் தேனைச் சேகரித்துக்கொண்டே இருக்கும். தொல்லியல் ஆய்வாளர்கள் தேனீக்களைப் போன்றவர்கள். கல்வெட்டு, சிற்பம், அகழாய்வு, சுவடியியல், நாணயவியல், அருங்காட்சியகவியல் போன்றவை தொல்லியல் எழுத்துலகத்தின் பிரிவுகள். வரலாற்று மன்றங்கள், தொல்லியல் கழகங்கள், மரபுநடைக் குழுக்கள் எனப் பல அமைப்புகள் ஓசையின்றி இயங்கிக்கொண்டிருக்கின்றன. ‘கீழடி: வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்’ எனும் நூலைத் தமிழக அரசின் தொல்லியல் துறை வெளியிட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியோர் வரை தொல்லியல் ...

Read More »

அகதிகளை சிறை வைக்கும் ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியா அருகே உள்ள பப்பு நியூ கினியா மற்றும் நவுரு ஆகிய தீவு நாடுகளில் அகதிகளை சிறைவைக்கும் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், பப்பு நியூ கினியாவில் உள்ள பொமனா சிறை வளாகத்தில் அமைந்துள்ள குடிவரவுத் தடுப்பு மையத்தில் தஞ்சக்கோரிக்கையாளர்கள் தூக்கமின்மையால் சித்ரவதைப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின் நிதியுதவினால் கட்டப்பட்ட பொமனா சிறை வளாகத்தில் கட்டப்பட்ட குடிவரவுத் தடுப்பு மையத்தில், ஏழு ஆண்டுகளாக மனுஸ்தீவில் வைக்கப்பட்டிருந்த தஞ்சக்கோரிக்கையாளர்களில் 18 பேர் முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு தடுத்து ...

Read More »

மீடூ-வில் சிக்காதது எனது அதிர்ஷ்டம் – தமன்னா!

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் தமன்னா, மீடூ-வில் சிக்காதது தனது அதிர்ஷ்டம் என கூறியுள்ளார். தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார் தமன்னா. இந்தி படங்களிலும் நடிக்கிறார். சினிமா வாழ்க்கை குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:- “எனக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளதாக சொல்வதில் உண்மை இல்லை. கடந்த ஆண்டில் கைநிறைய படம் வைத்து இருந்தேன். எனது படங்களுக்கு நல்ல வியாபாரமும் இருந்தது. முக்கியத்துவம் இல்லாத படங்களில் நடிக்க அவசியம் இல்லை. எனது படங்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். அதை வைத்து படங்கள் ...

Read More »

ரஜினிகாந்த் சிறிலங்கா வர எந்த தடையும் இல்லை!

கடந்த வாரம் நடிகர் ரஜினிகாந்தை  சிறிலங்கா  வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சென்னையில் சந்தித்து பேசினார். அப்போது விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று யாழ்ப்பாணம் வருகை தர ரஜினி முடிவு செய்ததாகவும், ஆனால் அவருக்கு விசா வழங்க சிறிலங்கா அரசு மறுத்து விட்டதாக செய்திகள் வெளியாகின. அரசியல் நடவடிக்கைக்காக சிறிலங்கா  வரும் அவருக்கு விசா வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.  ஆனால் இதனை நாமல் ராஜபக்ஷ மறுத்துள்ளார். “நடிகர் ரஜினிகாந்த் சிறிலங்கா  வருவதில் எந்த தடையும் இல்லை. மேலும் அதுபற்றிய வதந்திகளில் ...

Read More »

2023 வரை GSP+ வரிச் சலுகை தொடரும்!

GSP+ வரிச் சலுகையை எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு வரை இலங்கைக்கு பெற்றுக் கொடுப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. தொழில்துறை ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு, சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அதன் கண்காணிப்பு செயற்பாடுகளில் எவ்வித மாற்றமும் இடம்பெறாது என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மாலத்தீவு தூதுக்குழுவின் துணைத் தலைவர் தோர்ஸ்டன் பார்க்பார்ட் (Thorsten bargfarde) தெரிவித்துள்ளார். அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் ஐரோப்பிய ...

Read More »

எம்ஜிஆர் ஆகும் அரவிந்த்சாமி!

ஏஎல் விஜய் இயக்கும் தலைவி படத்தில் நடித்து வரும் அரவிந்த்சாமியின் எம்.ஜி.ஆர். லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை ‘தலைவி’ என்ற பெயரில் படமாகிறது. தமிழில் ‘தாம்தூம்’ படத்தில் கதாநாயகியாக நடித்த பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத், ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார். கதாபாத்திரத்துக்காக பரதநாட்டியம் கற்று நடித்து வருகிறார். விஜய் டைரக்டு செய்கிறார். தலைவி படத்தை விஷ்ணுவர்தன் இந்தூரி, சாய்லேஷ் சிங் ஆகியோர் தயாரிக்கின்றனர். பாகுபலி படத்துக்கு திரைக்கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் இப்படத்தும் எழுதி உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ...

Read More »

ரஜனி கோத்தாரி: இந்திய அரசியலின் குறுக்குவெட்டு ஆய்வாளர்

அரசியலோடு நெருங்கிப் பிணைந்தது பொருளியல். உலகளவில் பொருளியல் கொள்கைகளே அரசியலின் அடிப்படையாகவும் இருக்கின்றன. ஒருசில இனக்குழுக்களை மட்டுமே கொண்டிருக்கும் நாடுகளில் பொருளியல் வாதங்களே அரசியலின் திசைவழியைத் தீர்மானிக்கலாம். ஆனால், பல்வேறு இனக்குழுக்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு மதங்களைக் கொண்ட இந்தியாவில் அரசியலைத் தீர்மானிப்பதில் பொருளியலைக் காட்டிலும் சமூகவியலே முக்கியப் பங்காற்றுகிறது. அதை அறிவியல்பூர்வமான ஆய்வுக்கு உட்படுத்தியவர் ரஜனி கோத்தாரி. அரசியல்-சமூகவியல் என்ற புதியதொரு ஆய்வுத் துறையைத் தொடங்கிவைத்தவர் அவரே. இந்திய அரசியலைப் பற்றிய விவாதங்களில் ரஜனி கோத்தாரி அளவுக்குத் தாக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் ஆய்வாளர்கள் வேறு ...

Read More »

பிரித்தானிய மகாராணியின் கௌரவ விருதை பெற்றுக்கொண்ட ஈழப் பெண்!

ஈழத்தை  பூர்வீகமாக கொண்ட பிரபல ஆங்கில பாடகி மாதங்கி அருள்பிரகாஷ் என்பவருக்கு  பிரித்தானிய மகாராணியின் கௌரவ விருது கிடைத்துள்ளது மேற்படி விருது, பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத்தின் பிறந்த தினத்தையொட்டி இசைத்துறையில் அதிக பங்களிப்பு செய்தமைக்காக கௌரவ விருதாக பக்கிங்ஹாம் அரண்மனையில் வைத்து மாதங்கிக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இவ்விழாவிற்கு மாதங்கி தனது தாயாருடன் சென்று விருதை பெற்றுக்கொண்டுள்ளார். இக்கௌரவ விருதை இளவரசர் வில்லியம்ஸ் கடந்த செவ்வாய்க்கிழமை(14.01.2020) மாதங்கிக்கு அணிவித்துள்ளார். இது குறித்து மாதங்கி கூறுகையில், சுமார் ; 30 வருட காலங்கள் தனது தாய், வாழ்வில் ...

Read More »

மத்திய வங்கி கொள்ளையர்களையும் உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகளையும் சிறையிலடையுங்கள்!

மத்திய வங்கி கொள்ளையர்களையும் உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகளையும் சிறையிலடையுங்கள் எனப் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். இன்று சனிக்கிழமை காலை கிண்ணியால் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். நாம் ஆட்சிக்கு வந்து மறு நாளே மத்திய வங்கி கொள்ளையர் களையும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகளையும் ; சிறையிலடைப்போம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்தால் ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் இது பற்றி விசாரணை கூட நடத்த முடியவில்லை. மக்களுக்கு வழங்குவதாகக் கூறிய நிவாரணங்களை ...

Read More »