குமரன்

ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய மாணவன் 9A சித்தி பெற்று முதலிடம்

2019 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (சா/தர) பரீட்சையில் மட்டக்களப்பு கல்வி வலையத்திற்குட்பட்ட ஏறாவூர் கல்விக் கோட்டத்தில் ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயம் முதலிடம் பெற்றுள்ளது. அப் பாடசாலையைச் சேர்ந்த   ராதாகிருஸ்ணன் கேமதருண் எனும் மாணவன் 9A சித்தி பெற்று  பாடசாலைக்கும் அப்பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். ஏறாவூர் தமிழ் மகாவித்தியாலய பாடசாலை வரலாற்றில் முதற்தடவையாக க.பொ.த. (சா/தர) பரீட்சையில் 9A சித்தி பெற்ற சந்தர்ப்பமும் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது. 9A சித்தி பெற்று பாடாசாலைக்கும் பாடாசாலைச் சமூகத்திற்கும் பெருமை சேர்த்த இம் மாணவனை பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், ...

Read More »

கிம் ஜொங் – உன் எங்கே ?

வட கொரியா கிம் ஜொங் – உன்னின் ; உடல்நலம் குறித்து இணையத்தில் ஊகங்கள் ஏராளம்.தனது பாட்டனாரான கொரிய ஜனநாயக மக்கள் குடியரசின் தாபகர் கிம் இல் – சுங்கின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஏப்ரில் 15 நடத்தப்பட்ட சூரியதினக் கொண்டாட்டங்களில் (Day ; of the Sun celebrations) அவர் காணப்படாததையடுத்து வதந்திகள் கிளம்ப ஆரம்பித்தன. ( இல் — சுங் என்பதற்கு கொரிய மொழியில் – சூரியனாக வருவது(Becoming the Sun) ; என்று அர்த்தம் என்பதால் தாபகரின் தினம் சூரிய ...

Read More »

கொவிட் -19 கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறலாம் !- எச்சரிக்கை!

கொவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் சமூகத்திலான பரவலாக பரிமாணமடைய அதிக வாய்ப்புகள் உள்ள நிலையில் ஊரடங்கை அரசாங்கம் தளர்த்தி நாட்டினை வழமைக்கு கொண்டுவர நினைப்பது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவிக்கின்றது. வைரஸ் பரவலானது அதன் மூன்றாம் கட்டத்தில் இருப்பதால் அடுத்தது சமூக பரவலாக மாறலாம் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். கொவிட் -19 கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் தற்போது எவ்வாறான நிலைமையில் உள்ளது என்பது குறித்து தொற்றுநோய் தடுப்பு பிரிவின் உடற்கூற்று மருத்துவ நிபுணர் ...

Read More »

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் – திவ்யா சத்யராஜ்

கொரோனாவில் இருந்து வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று திவ்யா சத்யராஜ் கூறியுள்ளார். பிரபல நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், கொரோனா பீதி காரணமாக பள்ளிகள் இயங்காததால், வறுமையில் வாடும் குடும்பங்களில் வசித்து வரும் குழந்தைகளுக்கு சத்தான சாப்பாடு கிடைக்காமல் அவர்கள் ரத்தசோகை மற்றும் இரும்பு  சத்து குறைபாடுகளால் பாதிக்கப்படுவார்கள் என்பதை தெரிவிக்கும் விதமாக முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது…  ” கடந்த சில மாதங்களுக்கு முன்பு நான் அரசு பள்ளி ...

Read More »

பிரியா நடேசன் – 2 இலட்சம் டொலர்கள் வழக்கு செலவு செலுத்த அரசுக்கு உத்தரவு!!

அவுஸ்திரேலியா அரசின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பத்திற்கு 2 இலட்சம் டொலர்களை  வழக்கு செலவாக செலுத்தவேண்டும் என, அந்நாட்டு அரசுக்கு, நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. பிரியா மற்றும் நடேசன் முருகப்பன் ஆகியவர்கள் சிறீலங்காவில் இடம்பெற்ற இனப்போரில் இருந்து பாதுகாப்புத் தேடி அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியிருந்தனர். அங்கு அவர்களுக்கு கோபிகா மற்றும் தருணிகா ஆகிய இரு குழந்தைகளும் பிறந்திருந்தன. எனினும் அவர்களின் புகலிடத் தஞ்சத்தை நிராகரித்த அவுஸ்திரேலியா அரசு அவர்களை தடுப்பு முகாமுக்கு அனுப்பி நாடுகடத்த திட்டமிட்டிந்தது. இந்த நிலையில் அவர்களின் வழக்கை விசாரித்த நீதிமன்றம் ...

Read More »

வெளியே அமைதி…. உள்ளே அழுகை – ஏ.ஆர்.ரகுமான் வேதனை

மக்கள் வெளியே பார்க்கும்போது அமைதியாக இருப்பதுபோல் தெரியலாம், ஆனால் லட்சக்கணக்கானோர் அழுதுகொண்டு இருக்கிறார்கள் என ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கில் பிரபலங்களிடம் நடிகை குல் பனாக் வீடியோவில் பேட்டிகள் எடுத்து வெளியிட்டு வருகிறார். இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது: நான் அறிவுரைகள் சொல்வது இல்லை. அவற்றை கேட்பேன். தற்போதைய சூழ்நிலையில் எல்லோருக்கும் இரக்க குணம் தேவை. பின்தங்கிய மக்களுக்கு உதவ வேண்டும். வெளியே பார்க்கும்போது அமைதியாக இருப்பதுபோல் தெரியலாம். ஆனால் லட்சக்கணக்கானோர் அழுதுகொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு உணவு, மருத்துவ உதவிகள் ...

Read More »

கொரோனா வைரஸ்: இறந்ததாகக் கூறப்பட்டவர் மூன்று வாரம் கழித்து உயிருடன் திரும்பினார்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்ததாக அறிவிக்கப்பட்ட 74 வயதான பெண் ஒருவர் உயிருடன் இருப்பது தெரிய வந்துள்ளது . ஆல்பா மரூரி என்னும் பெண்ணின் குடும்பத்திற்குக் கடந்த மாதம் அவர் இறந்து விட்டார் என மருத்துவமனையிலிருந்து தெரிவிக்கப்பட்டது. அவரது சாம்பல் எனக் கூறி ஒரு சாம்பல் பெட்டியையும் அவருக்கு வழங்கினர். ஆனால் மூன்று வாரமாக மருத்துவமனையில் கோமாவில் இருந்த மரூரி வியாழக்கிழமையன்று கோமாவிலிருந்து மீண்டு சுய நினைவுக்குத் திரும்பியுள்ளார். மருத்துவர்களிடம் தன்னுடைய சகோதரிக்கு அழைக்குமாறு கேட்டுள்ளார். இந்த செய்தி கேள்விப்பட்டு அவர் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ...

Read More »

முருகனின் தந்தை காலமானார்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் எனும் ஸ்ரீஹரனின் தந்தை வெற்றிவேல் (75-வயது) இன்று (27) அதிகாலை யாழ் போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் இன்று மரணமடைந்துள்ளார். தனது தந்தை இறப்பதற்கு முன்னர் வீடியோ கோலில் தந்தையின் முகத்தை பார்க்க சட்டத்தரணி ஊடாக முருகன் விடுத்த கோரிக்கை தமிழக அரசு மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தந்தையின் உடலையாவது இறுதியாக பார்க்க அனுமதிக்குமாறு முருகன் மற்றும் யாழ்ப்பாணத்தில் ...

Read More »

வடகொரியா அதிபரின் மரண மர்மம்…….!

ஏவுகணை சோதனை, அணுஆயுத சோதனைகன் நடத்தி பங்காளி தென் கொரியா முதல் வல்லரசான அமெரிக்கா வரை எரிச்சலடைய வைத்த நாடு. வட கொரிய அதிபர் கிம் ஜாங், சர்வதேச அரசியலில் விளையாட்டுப் பிள்ளையாக பார்க்கப்படுபவர். உலகின் உண்மையான இரும்புத்திரை நாடு இப்போது மட்டு மல்ல, எப்போதுமே வடகொரியாதான். சீனாவிலிருந்து, கூட ரகசியங்களை கறந்துவிடலாம். ஆனால், வடகொரியாவில் காளை மாட்டிலிருந்து பால் கறந்த கதைதான்! இந்தக் குட்டி நாட்டில் என்ன நடக்கிறது என்பதை உலக மக்களால் அறிந்துகொள்ளவே முடியாது. கொரோனா அங்கே பரவியிருக்கிறதா ; இல்லையா ...

Read More »

இன வன்முறைக்கு ஆஸ்திரேலியாவில் இடமில்லை!

மலேசியா, சிங்கப்பூரைச் சேர்ந்த இரு மாணவியர்களுக்கு எதிராக இனரீதியாக தூண்டப்பட்ட தாக்குதலில் ஈடுபட்ட ஆஸ்திரேலியப்பெண்களுக்கு எதிராக விரைவான நடவடிக்கை எடுத்ததற்காக ஆஸ்திரேலிய அதிகாரிகளை மலேசிய சீனர் சங்கம் பாராட்டியது. ம.சீ.ச. பொதுச்செயலாளர் டத்தோ சோங் சின் வூன், அதிகாரிகள் விரைவில் பெரிய குற்றவாளியைக் கண்டுபிடித்து கைது செய்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். ஆஸ்திரேலியாவில் கோவிட் -19 ஐ பரப்புவதற்கு ஆசியர்கள்தான் காரணம் என்ற தவ்றான புரிதலில் இனவெறி தாக்குதல் ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தவறான புரிதலால் ,மலேசிய, சிங்கப்பூர் இளங்கலை பட்டதாரிகள் இருவரை ...

Read More »