குமரன்

ஆஸி. வீரர்கள் மாலத்தீவு சென்றடைந்தனர்

இந்தியாவில் இருந்து நேரடியாக ஆஸ்திரேலியா செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு வீரர்கள் மாலத்தீவில் இருந்து சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளனர். ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது கொல்கத்தா மற்றும் டெல்லி அணி வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனால் உடனடியாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டது. வெளிநாட்டு வீரர்கள் சொந்த நாடு திரும்பி கொண்டிருக்கின்றனர். உள்நாட்டு வீரர்கள் அவர்களுடைய வீட்டிற்கு சென்றுள்ளனர். தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வீரர்கள், சொந்த நாடு திரும்புவதில் சிக்கல் ...

Read More »

கிறிஸ்மஸ்தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் குடும்பத்தினரை சமூகத்திற்குள் நடமாட அனுமதிப்பது குறித்து ஆராய்கின்றேன்

கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் குடும்பத்தினரை கிறிஸ்மஸ் தீவுவிற்குள்ளேயே சமூகத்திற்குள் தங்கியிருப்பதற்கு அனுமதிப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக உள்துறை அமைச்சர் கரென் அன்றூஸ் தெரிவித்துள்ளார். தமிழ்குடும்பத்தின் நலன்கள்குறித்து ஆராய்ந்துவருவதாகதெரிவித்துள்ள அவர் அவர்களிற்கானதங்குமிடம் குறித்து ஆராய்;ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். தமிழ் குடும்பத்தினரின் நலன்கள் குறித்து தனது மனதை திருப்பியுள்ளதாக ஏபிசிக்கு தெரிவித்துள்ள அமைச்சர் கிறிஸ்மஸ் தீவிற்குள் அவர்களிற்கான வேறு இடம் குறித்து ஆலோசனைகளை பெறுவதாக தெரிவித்துள்ளார். நடேஸ் முருகப்பனையும் அவரது மனைவி பிரியா மற்றும் அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது பிள்ளைகளான கோபிகா தருணிகாவையும் அதிகாரிகள் குயின்ஸ்லாந்தின் ...

Read More »

யாழில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21; வடக்கில் 27

.யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் குடாநாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண் ணிக்கை 21 ஆகவும் வடக்கு மாகாணத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆகவும் அதிகரித்துள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் வீதி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 77 வயதுடைய முதியவர் ஒருவரும் இளவாலையைச் சேர்ந்த 75 வயதுடைய மூதாட்டி ஒருவரும் நேற்று முன்தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தனர். இதனால் யாழ்.மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 21 என்றும் வடக்கு ...

Read More »

ரஞ்சன்ராமநாயக்க சிறையில் தற்கொலைக்கு முயற்சித்தாரா?

ரஞ்சன் ராமநாயக்க தான் சிறையில் தற்கொலைக்கு முயற்சித்தார் என வெளியான தகவல்களை நிராகரித்துள்ளார்.   சிறைத்தண்டனை அனுபவித்துவரும் ரஞ்சன்ராமநாயக்க சிறையில் தற்கொலைக்கு முயற்சித்தார் என ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன எனினும் முகநூல் பதிவொன்றில் அவர் இதனை நிராகரித்துள்ளார்.

Read More »

நடிக்கும் எண்ணம் இதுவரைக்கும் இல்லை… பிரபல நடிகையின் மகள்

பிரபல நடிகையின் மகள் சமூக வலைத்தளத்தில் ரசிகர் கேட்ட கேள்விக்கு நடிக்கும் எண்ணம் இதுவரை இல்லை என்று கூறியிருக்கிறாராம். இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, நடிகை ரோஜா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு அன்சுமாலிகா என்ற மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள். மகள் அன்சுமாலிகா சினிமாவில் நடிக்கப் போவதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தன. அவருடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் சினிமாவில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு அவர் பதில் ...

Read More »

இந்து கடவுளை சித்தரித்து அவுஸ்திரேலியாவில் வெளியான கேலிச்சித்திரம்

அவுஸ்திரேலியாவில் நாளிதழொன்றில் வெளியான கேலிச்சித்திரமொன்று இந்துக் கடவுள்களில் ஒருவரான விநாயகரை இழிவுபடுத்தும் வகையில் அமைந்திருந்ததாகவும், இது தொடர்பில் குறித்த ஊடகம் மன்னிப்புக்கோர வேண்டும் எனவும் இந்நாட்டிலுள்ள இந்து அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன. இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியா வருவதற்கு விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை தொடர்பில் The Daily Telegraph-இல் மே மாதம் 4ம் திகதி வெளியான செய்திக்கட்டுரையிலேயே குறித்த கேலிச்சித்திரம் இடம்பெற்றுள்ளது. இந்துக் கடவுள்களில் ஒருவரான விநாயகரை இழிவுபடுத்தும் வகையில் கேலிச்சித்திரம் அமைந்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதுடன்,கேலிச்சித்திரம் தொடர்பில் மன்னிப்புக்கோர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பல்கலாச்சார சமூகங்கள் வாழும் அவுஸ்திரேலியாவில் எந்தவொரு நம்பிக்கையையும், ...

Read More »

இனவழிப்புக்கு உள்ளான ஆர்மேனியர்கள் – அமெரிக்காவின் அங்கீகாரம்

சரியாக 106 வருடங்களுக்கு பின்பு ஆர்மேனிய மக்களுக்கு எதிராக 1915 ஆம் ஆண்டு ஓட்டோமான் பேரரசினால் இடம் பெற்ற தாக்குதல்கள் ‘இனப்படுகொலை’ தான் என்று முதன் முதலாக அமெரிக்க ஜனாதிபதி  ஜோ பைடன் அறிவித்துள்ளார்.  அமெரிக்க ஜனாதிபதியொருவர் இந்த விடயத்தினை இனப்படுகொலை என்று ஏற்றுக்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பமும் இதுதான். அமெரிக்கா வழங்கியுள்ள இந்த இனஅழிப்பு அங்கீகாரம் துருக்கியின் உள்நாட்டு அரசியலை ஒரு உலுக்கு உலுக்கி விடும் நோக்கம் கொண்டதே தவிர ஆர்மேனிய மக்களின்  நலன் குறித்த எந்த விவகாரத்திற்கும் பெரிதாக பயன்படாது என்கின்றனர் ஆய்வாளர்கள். ...

Read More »

அவுஸ்திரேலிய வீரர்களை இலங்கை அழைத்து வர திட்டம்?

இந்தியாவில் IPL கிரிக்கெட் தொடர் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், அதில் கலந்துகொண்டிருந்த அவுஸ்திரேலிய வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் உள்ளிட்டவர்களை இலங்கை அல்லது மாலைத்தீவிற்கு அனுப்பி வைக்கும் திட்டம் தொடர்பில் இன்று தகவல் வௌியானது. அவுஸ்திரேலியா ஏற்கனவே இந்தியாவில் இருந்து தமது நாட்டுக்குள் பிரவேசிக்க 15 ஆம் திகதி வரை தடை விதித்துள்ளது. IPL கிரிக்கெட் தொடரில் 23 அவுஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்றிருந்தனர். அவர்களில் ஏற்கனவே மைக் ஹசீயிற்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தொடர்பில் கலந்துகொண்ட வேறு நாடுகளின் வீரர்கள் உள்ளிட்ட 10 பேருக்கு ...

Read More »

கறிச்சட்டிக்குள் விழுந்து ஒருவர் பலி

உணவகம் ஒன்றில் சமையல் செய்து கொண்டிருந்தவர் வலிப்பு நோய் காரணமாக கறிச்சட்டிக்குள் விழுந்து மரணமான சம்பவம் ஒன்று யாழ்.வடமராட்சியில் பதிவாகியுள்ளது. அல்வாய் வடக்கைச் சேர்ந்த இராசையா தீபன்குமார் (வயது 41) என்பவரே இவ்வாறு மரணமானார். வடமராட்சி பருத்தித்துறை- மந்திகை – சாவகச்சேரி வீதியிலுள்ள உணவகம் ஒன்றிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் அறிய வருவதாவது; உயிரிழந்த நபர் கடந்த ஞாயிற்றுக் கிழமை சமையல் பணியில் ஈடுபட்டிருந்தார். திடீரென வலிப்பு வந்ததால் அவர் கொதித்துக் கொண்டிருந்த கறிச் சட்டிக்குள் மயங்கி விழுந்துள்ளார். சக ...

Read More »

சரணடைந்த 12 ஆயிரம் விடுதலைப் புலி உறுப்பினர்களை கொன்றிருக்க வேண்டுமா?

சரணடைந்த 12 ஆயிரம் விடுதலைப் புலி உறுப்பினர்களை மஹிந்த அரசாங்கம் விடுவிக்கும் போது ஏன் அதனை சரத் பொன்சேகா எதிர்க்கவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கேள்வியெழுப்பிய நிலையில், அப்படியாயின் அவர்கள் அனைவரையும் கொன்றிருக்க வேண்டும் என்பதா? சரத் வீரசேகரவின் நிலைப்பாடு என்று சரத் பொன்சேகா பதில் கேள்வியெழுப்பினார். நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற நாட்டின் கொவிட் நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாம் நாள் விவாதத்தின் போது, மிருசுவில் கொலைச் சம்பவம் தொடர்பாக தண்டனை வழங்கப்பட்டிருந்த சுனில் ரத்நாயக்கவின் ...

Read More »