குமரன்

ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

மாலியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கருவில் ஏழு குழந்தைகள் உள்ளன என்று டாக்டர்கள் கூறிய நிலையில், 9 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். பொதுவாக ஒரு கருவில் இரண்டு குழந்தைகள் உருவாவதுண்டு. அதையும் மீறி சில நேரங்களில் மூன்று, நான்கு கூட உண்டாகும். அப்படி உண்டாகும்போது அனைத்து குழந்தைகளும் உயிர் பிழைப்பதில்லை. அபூர்வமாக நான்கு குழந்தைகளுக்கு மேலும் உருவாகும் நிகழ்வும் நடந்துள்ளது. இதையெல்லாம் மீறி ஆப்பிரிக்க நாடான மாலியைச் சேர்ந்த பெண்ணிற்கு ஒரு கருவில் 9 குழந்தைகள் உருவாகி, தற்போது அறுவை சிகிச்சை மூலம் 9 குழந்தைகளையும் ...

Read More »

நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா

நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கும் நிலையில், தற்போது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா. நடிகை மட்டுமல்லாமல் இவர் சிறந்த பாடகியும் ஆவர். நடிகை ஆண்ட்ரியா ‘வடசென்னை’ ‘தரமணி’ போன்ற படங்களில் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றார். இவர் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் ‘பிசாசு 2’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ஆண்ட்ரியா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது ...

Read More »

பெ.சு.மணி: தமிழ்த் திறனாய்வுலகின் பொக்கிஷம்

பல்கலைக்கழகப் பாடத்திட்டத்துக்கு வெளியே அறிவு மரபே கிடையாது என்று உலவிவந்த மாயையை உடைத்த பெரியார், ம.பொ.சிவஞானம், ஜீவா, மயிலை சீனி. வேங்கடசாமி, மு.கருணாநிதி வரிசையில் வருபவர் பெ.சு.மணி (1933-2021). எஸ்எஸ்எல்சி வரை மட்டுமே படித்த பெ.சு.மணியின் நூல்களெல்லாம் பல்கலைக்கழக மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு உயர் படிக்கட்டுகளாக இருக்கின்றன. தனது ஆய்வுப் பணிக்காக மீனம்பாக்கம் அஞ்சலகத் துறையில் அஞ்சல் பிரிப்பகத்தில் இரவு வேலையை மாற்றிக்கொண்டு, தனது சைக்கிளில் பகற்பொழுது முழுவதும் சென்னை நூலகங்களில் கிடையாகக் கிடந்து தேனீபோலச் சேகரித்த நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டவர். இன்றுபோல் எந்த ...

Read More »

‘ஆஸி. பிரதமரே! உங்கள் கரங்களில் ரத்தக்கறை படிந்துள்ளது’

ஐபிஎல் டி20 தொடரில் வர்ணனையாளராகப் பணிபுரிந்து வந்த ஆஸி. முன்னாள் வீரர் மைக்கேல் ஸ்லாடர், இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பைப் பார்த்து, பயோ-பபுளில் இருந்து விலகி மாலத்தீவு சென்றார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவிலிருந்து வரும் ஆஸ்திரேலிய குடிமகன்கள் யாரும் மே 15-ம் தேதிவரை ஆஸ்திரேலியாவுக்குள் வரக்கூடாது என பிரதமர் ஸ்காட் மோரிஸன் தடை விதித்துள்ளார். விமானச் சேவையும் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவிலிருந்துதானே விமானங்கள் வரக்கூடாது, ஆஸ்திரேலியர்கள் வரக்கூடாது, மாலத்தீவிலிருந்து வரலாமே என்பதால், மைக்கேல் ஸ்லாடர் மாலத்தீவு சென்றதாக ஆஸ்திேரலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ...

Read More »

அமேசான் நில சீர்திருத்த சட்டமூலம் குறித்து இங்கிலாந்து பிரேஸிலுக்கு எச்சரிக்கை

முன்மொழியப்பட்டுள்ள நில சீர்திருத்த சட்டமூலம் தொடர்பில் 40 இங்கிலாந்து உணவு வணிகங்கள் பிரேஸிலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. குழுவின் ஒரு திறந்த கடிதம், பொது நிலத்தின் தனியார் ஆக்கிரமிப்பை சட்டப்பூர்வமாக்கக்கூடிய ஒரு சட்டமூலத்தை நிராகரிக்க பிரேஸிலின் சட்டமன்றத்தை அழைப்பு விடுத்துள்ளது. இந்த சட்டமூலம் அமேசானில் காடழிப்பை துரிதப்படுத்தக்கூடும் என்று கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சட்டவிரோத காடழிப்புகளை முடிவுக்கு கொண்டுவருவதாக பிரேஸில் உறுதியளித்த சில மாதங்களிலேயே இந்த சட்டமூலம் அங்கு பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு செனட்டில் புதன் அல்லது வியாழக்கிழமைக்கு பின்னர் நடத்தப்படும் என்று ...

Read More »

ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைகளை விசாரித்து குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்துங்கள்

ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைகளை விசாரித்து குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்துங்கள் – சர்வதேச மன்னிப்புச்சபை ஊடகங்களின் கருத்துச்சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்தி, குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது. சர்வதேச பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கை தொடர்பில் சர்வதேச மன்னிப்புச்சபை அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது. மக்களின் கருத்துச்சுதந்திரத்தை, குறிப்பாக ஊடகங்களின் கருத்துச்சுதந்திரத்தை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் ...

Read More »

கொடிகாமம் பகுதியில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள் முடக்கப்பட்டன

யாழ்ப்பாணத்தில், கொடிகாமம் வர்த்தகத் தொகுதியில் வர்த்தகர்கள், பணியாளர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 21 பேருக்கு வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் அப்பகுதிகளில் கடந்த மூன்று நாட்களில் 30 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.இதேவேளை கொடிகாமம் வடக்கு மற்றும் கொடிகாமம் மத்தி ஆகிய இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளுமே நேற்றிரவு முதல் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளது.அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதனையடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளையும் சேர்ந்த மக்கள் வெளியில் செல்வதற்கோ அல்லது வெளியில் உள்ளவர்கள் அந்தக் கிராமங்களுக்குச் செல்வதற்கோ ...

Read More »

காதல் விவகாரத்தில் மௌனம் காப்பது ஏன்?

நடிகை ரகுல் பிரீத் சிங், தற்போது கமலுடன் இந்தியன் 2, சிவகார்த்திகேயனுடன் அயலான் போன்ற படங்களில் நடித்து வருகிறார். தமிழில் கார்த்தி ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், சூர்யாவுடன் என்.ஜி.கே ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் ரகுல் பிரீத் சிங். இவர் தற்போது கமலுடன் இந்தியன் 2, சிவகார்த்திகேயனுடன் அயலான் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் அடிக்கடி காதல் கிசுகிசுக்களில் சிக்குவதும் உண்டு. இந்நிலையில் சமீபத்திய பேட்டியில், தன்னைப்பற்றி காதல் கிசுகிசுக்கள் தற்போது வராததால் நிம்மதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் ...

Read More »

மம்தா: வங்க மகளின் வெற்றி

வங்கத்தில் மிகப் பெரும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைத்திருக்கிறார் மம்தா. எப்படியாவது வங்கத்தைக் கைப்பற்றிவிடும் நோக்கத்தில் மோடி, அமித் ஷா, ஜே.பி.நட்டா, ராஜ்நாத் சிங், யோகி ஆதித்யநாத் என்று பாஜகவின் பெருந்தலைகளெல்லாம் வங்கத்தில் வந்து குவிந்தனர். இன்னொரு புறம், இடதுசாரிகளும் காங்கிரஸும் ஐஎஸ்எஃபும் அமைத்த கூட்டணியின் வாக்குப் பிரிப்பானது மம்தாவையே பாதிக்கும் என்று கூறப்பட்டது. இவர்களுக்கெல்லாம் எதிர்முனையில் இருந்தவர் ஒரே ஒரு பெண். அதுவும் சக்கர நாற்காலியில் பிரச்சாரம் செய்யும் பெண்! வங்கத் தேர்தல் வரலாறு சுதந்திரத்துக்குப் பிறகு நடைபெற்ற முதல் தேர்தலில் ...

Read More »

இணையத்தை கலக்கும் ஏ.ஆர்.ரகுமானின் செல்பி

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர்.ரகுமான் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. புகழ்பெற்ற இசை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சமீபத்தில் ’99’ பாடல்களுடன்ஒரு தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும் மாறிய பின்னர் ‘மூப்பிலா தமிழ் தாயே’ என்ற பாடலை உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அதிகம் இளைஞர்களுடன் பணியாற்றுவதில் வல்லவர், தற்பொழுது சூப்பர் சிங்கர் புகழ் பூவையார் மற்றும் கேப்ரியெல்லா ஆகியோரை ‘மூப்பிலா தமிழ் தாயே” பாடலுக்காக அவர்களுடன் பணியாற்றி இருக்கிறார். கேப்ரியெல்லா மற்றும் பாடகர் பூவையார் ஆகியோருடன் ஏ.ஆர்.ரகுமான் எடுத்துக்கொண்ட ...

Read More »