இணையத்தை கலக்கும் ஏ.ஆர்.ரகுமானின் செல்பி

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர்.ரகுமான் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

புகழ்பெற்ற இசை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சமீபத்தில் ’99’ பாடல்களுடன்ஒரு தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும் மாறிய பின்னர் ‘மூப்பிலா தமிழ் தாயே’ என்ற பாடலை உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அதிகம் இளைஞர்களுடன் பணியாற்றுவதில் வல்லவர், தற்பொழுது சூப்பர் சிங்கர் புகழ் பூவையார் மற்றும் கேப்ரியெல்லா ஆகியோரை ‘மூப்பிலா தமிழ் தாயே” பாடலுக்காக அவர்களுடன் பணியாற்றி இருக்கிறார்.
ஏ ஆர் ரகுமான் பூவையார்
கேப்ரியெல்லா மற்றும் பாடகர் பூவையார் ஆகியோருடன் ஏ.ஆர்.ரகுமான் எடுத்துக்கொண்ட செல்பியை வெளியிட்டுள்ளார். இந்த செல்பி புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.