emurasu

Chief Minister Wigneswaran rejects domestic investigation in new NPC resolution

Questioning the legal possibilities of conducting a credible investigation within the domestic sphere of the Sri Lankan Constitution and pointing out other hurdles within the SL State system, C.V. Wigneswaran, the Chief Minister of Northern Provincial Council (NPC) on Tuesday passed a resolution rejecting the domestic process being proposed by the USA and other powers. In ithe new resolution, the ...

Read More »

தமிழரசுக் கட்சியின் செயல் நியாயமானதா….?

பாராளுமன்றத் தேர்தலில் கிடைத்த இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கான நியமனங்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் மீண்டும் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்களில் ஒன்று திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு- தோல்வியுற்ற துரைரட்ணசிங்கத்துக்கும், மற்றொன்று வன்னி மாவட்டத்தில் வெற்றிவாய்ப்பை இழந்த சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாவுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு பேருமே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டவர்கள். இதனால், இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்களையும் தமிழரசுக் கட்சி தமதாக்கிக் கொண்டு, ஏனைய பங்காளிக் கட்சிகளுக்கு அநீதி ...

Read More »

தெற்கில் இனவாதம் தோற்கடிக்கப்பட்டு விட்டதா? – நிலாந்தன்

தேர்தல் நடந்த அதே கிழமை கொழும்பில் வத்தளையில் ஒரு நட்சத்திர விடுதியில் ஒரு பயிலரங்கு நடத்தப்பட்டது. தேசியத்தைப் புரிந்து கொள்ளல் என்ற தலைப்பின் கீழான இப்பயிலரங்கில் மூவினத்தைச் சேர்ந்தவர்களும் பங்குபற்றினார்கள். இப்பயிலரங்கில் ஒரு நாள் ஒரு நாடகம் நிகழ்த்திக் காட்டப்பட்டது. அந்நாடகத்தின் பெயர் ‘ஒரு நாடு இரு தேசம்’. அதில் இச்சிறு தீவில் உள்ள எல்லா அரசியல் போக்குளையும் பிரதிபலிக்கும் விதத்தில் பாத்திரங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. ஒரு நிகழ்ச்சித் தயாரிப்பாளர் அரசியல் கட்சி பிரமுகர்களை ஒரு நாடு இரு தேசம் என்ற கருத்துத் தொடர்பாக பேச ...

Read More »

தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு மாற்றான அணி அவசியம் – பேராசிரியர் கீதபொன்கலன்

அண்மையில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு சவால்விடும் வகையில் மாற்று அணியாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னனி களம் இறங்கியிருப்பது காலத்தின் தேவை என பேராசியர் கீதபொன்கலன் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். அவரது நேர்காணலின் முழுவடிவம்

Read More »

சமகால அரசியல் நிலை குறித்து உரையும் கேள்வி பதிலும் – வடக்கு முதல்வர் விக்கி (காணொளி)

தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான மனிதாபிமான உதவியை வழங்குதலை குறுங்கால இலக்காகவும், நிகழ்த்தப்பட்ட இனஅழிப்புக்கு நீதி பெறுவதை மத்திம கால இலக்காகவும், திம்புக் கோட்பாடுகளின் அடிப்படையில் நிலையான அரசியல் தீர்வைக் காணுதல் எமது நீண்டகால இலக்காகவுங் கொண்டு அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று வட மாகாண முதலமைச்சர் நீதிபதி விக்னேஸ்வரன் உலகத் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். சர்வதேச தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் லண்டனில் நேற்று நடத்திய “சிறப்புரையும் கலாச்சார மாலையும்” நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றியபோதே விக்னேஸ்வரன் இந்த வேண்டுகோளை விடுத்தார். ...

Read More »

ஜேர்மன் உதைபந்தாட்ட அணியும் தமிழ் தேசிய கூட்டமைப்பும்- பா.நிர்மானுசன்

சரியாக ஒரு வருடத்திற்கு முன்னர் இருபதாவது உலக கிண்ண உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் ஆர்ஜென்ரீனாவுக்கு எதிராக ஜேர்மனி மோதியது. ஜேர்மன் அணியின் முன்கள வீரர்கள் ஆர்ஜென்ரீனாவின் தடுப்புகளை தகர்த்துக் கொண்டு முன்நகர முயற்சிக்க, ஜேர்மன் அணியின் பின்கள வீரர்கள் ஆர்ஜென்ரீனாவின் முன்கள வீரர்களின் ஊடுருவல்களை தடுக்கும் முயற்சியில் தடுப்பு உத்திகளை அமைத்திருந்தார்கள். இதன் ஒரு அங்கமாக, ஆர்ஜென்ரீனாவின் நட்சத்திர வீரரும் கோல்களை போடக்கூடியவர் எனவும் எதிர்பார்க்கப்பட்ட லயனல் மெசியை ஒரு கட்டத்தில் ஜேர்மன் அணியின் மூன்று வீரர்கள் முற்றுகையிட்டிருந்தனர். அதேவேளை, ஜேர்மன் அணியின் ஏனைய ...

Read More »

கூட்டமைப்பிடம் சில கேள்விகள் – நிலாந்தன்

2009 மே மாதத்துக்குப் பின்னரான  இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தல்  நடைபெற இருக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் வரும் இரண்டாவது பொதுத் தேர்தல் இது. 2009 இற்கு முன்பு வரை ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக புலிகள் இயக்கமே  தமிழ் மக்களின்  பிரதான அரசியல் போக்கைத் தீர்மானித்தது.2009 இற்குப் பின் அப்பொறுப்பை கூட்டமைப்பு வகிக்கத் தொடங்கியது.  இப்படிப் பார்த்தால் தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம் கூட்டமைப்பிடம் கைமாறிய பின்வரும் இரண்டாவது பொதுத் தேர்தல் இது. எனவே  கடந்த ஐந்து ஆண்டுகளில்  கூட்டமைப்பின் நாடாளுமன்ற ...

Read More »

இனி பொறுமை இல்லை! வெளிநாட்டு நிதிகளை பெற்றுக்கொள்ள அதிகாரம் வேண்டும் – சம்பந்தர்

அதிகாரங்களை முழுமையாக பயன்படுத்துவதற்கு மத்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் நன்கொடைகளுக்கு மேலாக வளங்கல் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அத்துடன் உள்நாட்டு வெளிநாட்டு கடன்களை பெறும் வாய்ப்பும் உருவாக்கிக் கொடுக்கப்பட வேண்டும். இவையெல்லாம் உள்ளடங்கிய நல்லதொரு அரசியல் தீர்வின் மூலமே நாட்டில் நல்லாட்சியை உருவாக்க முடியும்  என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரான இரா. சம்­பந்தன் தெரி­வித்தார். தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு குறித்து தேசிய கட்­சிகள் தமது நிலைப்­பாட்டினை தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் தெரி­விக்க வேண் டும். இனி­மேலும் காலத்தை கடத்தமுடி­யாது. புதிய பாரா­ளு­மன்றம் அமைக்­கப்­பட்ட பின் விரை ...

Read More »

போர்க்குற்ற விசாரணையை பலவீனப்படுத்துகிறதா அமெரிக்கா? – ஹரிகரன்

இலங்­கையில் புதிய அர­சாங்கம் பத­வி­யேற்று ஆறு மாதங்கள் கழித்து, இலங்கைக் கடற்­ப­டை­யுடன் கூட்டு இரா­ணுவப் பயிற்­சி­களை ஆரம்­பித்­தி­ருக்­கி­றது அமெ­ரிக்கா. கடந்த அர­சாங்­கத்தின் பதவிக் காலத்தில் இடை­நி­றுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த, இலங்கைப் படை­யி­ன­ரு­ட­னான கூட்டுப் பயிற்­சி­களே இப்­போது மீண்டும் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. திரு­கோ­ண­மலைக் கடலில், அமெ­ரிக்க கடற்­ப­டையின் சீல் என்று அழைக்­கப்­படும் சிறப்பு கொமாண்டோ அணி­யினர், இலங்கை கடற்­ப­டை­யி­ன­ருடன், பயிற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். ஜூன் 19 ஆம் திகதி தொடங்­கப்­பட்ட இந்த கூட்டுப் பயிற்சி அடுத்த மாதம், 02 ஆம் திகதி வரை தொடரும் என்று தக­வல்கள் கூறு­கின்­றன. ...

Read More »

“ஒற்றையாட்சி” பற்றி சுமந்திரன் சொல்வது உண்மையா?? – குமாரவடிவேல் குருபரன்

15 மே 2015 அன்று யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு. எம். ஏ. சுமந்திரனுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரமான திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுக்கும் இடையே நடந்த விவாதத்தில் திரு. சுமந்திரன் அவர்கள் முன்னர் பகிரங்கமாக அறியப்படாத செய்தி ஒன்றை வெளியிட்டார். மைத்ரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது அதில் ஒற்றையாட்சி அரசை மைத்ரிபால விட்டுக்கொடுக்க மாட்டார் என்ற வாசகம் சேர்க்கப்பட இருந்ததாகவும், தான் கேட்டுக் கொண்டதற்கிணங்க அந்த வார்த்தைப் பிரயோகம் ...

Read More »