Tag Archives: ஆசிரியர்தெரிவு

போராட்ட வடிவம் மாற்றமடையும்; கேப்பாப்புலவு மக்கள் எச்சரிக்கை!

சொந்தக் காணிகளை தம்மிடம் வழங்குமாறு கோரி இன்று (7) கேப்பாப்புலவு மக்கள் எட்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை முதல் கேப்பாப்புலவு மக்கள் இரவு, பகலாக இராணுவ முகாமுக்கு முன்னால் தகரப் பந்தல் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். போராட்டத்தில் மக்களுடன் அவர்களது பிள்ளைகளும் பாடசாலைக்குச் செல்லாது போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்களது கல்வி நடவடிக்கை தொடர்பாக தாம் உரிய நடவடிக்கை எடுப்பதாக சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளபோதிலும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், நாளைய தினத்திற்குள் தமது போராட்டத்திற்கு எந்தத் தீர்வும் ...

Read More »

அவுஸ்ரேலிய நிதிப்பங்களிப்பு மூலம் புதிதாக கட்டப்பட்ட நெடுந்தாரகைப்படகு பயணத்தை தொடங்கியது

நெடுந்தாரகைக்கு புதிய கப்டன் நியமிக்கப்பட்டதனையடுத்து நேற்று முன்தினம்(2) முதல் அதன் சேவையை ஆரம்பித்துள்ளதாக வட மாகாண பிரதம செயலாளர் அலுவல அதிகாரி தெரிவித்தார். இது தொடர்பில் குறித்த அதிகாரி மேலும் தெரிவிக்கையில், நெடுந்தீவு மக்களின் பயண பயன்பாட்டிற்காக நெல்சிப் திட்டம் மற்றும் அவுஸ்ரேலிய நிதிப்பங்களிப்பு ஆகியவற்றின் மூலம் புதிதாக கட்டப்பட்ட நெடுந்தாரகைப்படகானது கடந்த மாதம் 20ஆம் நாள் தனது முதல் உத்தியோகபூர்வ சேவையை ஆரம்பித்தபோதும் அதற்கான நிரந்தர அனுபவம் வாய்ந்த ஒரு கப்டன் தர அதிகாரி இன்மையால் அனுபவம் அற்ற புதிய பணியாளர்களை மட்டும் ...

Read More »

பாராளுமன்ற நாயகர்கள் அல்ல பங்களா நாயகர்கள்!

ஆயுதப்போராட்ட காலத்திற்கு முன்னதாகத் தமிழ் அரசியல் தலைவர்கள் சொத்து சேர்ப்பதை முழுநேரத் தொழிலாகக் கொண்டிருந்த போதும் போராட்டத்தின் பங்காளர்களான மக்கள் வறுமையில் வாடுவது சொல்லித் தெரியவேண்டியதொன்றல்ல. அண்மைக்காலமாகத் தமிழரசுக்கட்சித் தலைவர்களது சொத்து சேர்ப்பு வேகம் சாதாரண மக்களிடையே அச்சத்துடன் பார்க்கப்படுகின்றது. அண்மையில் விடுவிக்கப்பட்ட மாவிட்டபுரத்தில் மாவை சேனாதிராசா சுமார் மூன்றரை கோடி மதிப்பிலான பங்களா கட்டுமானத்தை வேகமாக மேற்கொண்டுவருகின்றார். ஏற்கனவே தமிழகம் மற்றும் கேரளாவிலுள்ள பங்களாக்களிற்கு மேலாக தற்போது மாவிட்டபுரத்தில் தனது கனவு இல்லத்தினை மாவை வேக வேகமாக கட்டிவருகின்றார். இது பற்றி மற்றொரு ...

Read More »

வடக்கு முதல்வருக்கு இந்திய மத்திய அரசினால் அச்சுறுத்தல்!

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு இந்திய மத்திய அரசினால் பல்வேறு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. வட மாகாண சபை பிரித்தானியாவின் தெற்கு லண்டனில், கிங்ஸ்டன் நகர சபையுடன் (Kingston Borough Council) கடந்த வருட இறுதிப் பகுதியில் இணைந்திருந்தது. இது தொடர்பிலேயே இந்திய அரசாங்கத்தினால் அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு இணைவதற்கு முன்னர் இந்தியாவின் முழுமையான அனுமதியை பெற்றுக் கொள்ளாமை தொடர்பில் முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் தனது வருத்தத்தை வெளியிட்டுள்ளார். ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள நாட்டின் நகர சபையுடன் ...

Read More »

குமார் குணரத்னத்திற்கு இலங்கை பிரஜா உரிமை

முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல்துறை உறுப்பினர் குமார் குணரத்னத்திற்கு இலங்கை பிரஜா உரிமை வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக மக்கள் விடுதலை முன்னணியின் முக்கிய தலைவராக செயற்பட்ட இவர், கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்று அந் நாட்டின் குடியுரிமையையும் பெற்றுக் கொண்டார். இதனையடுத்து, கடந்த ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு மீண்டும் சுற்றுலா விசாவில் வந்த அவர் (இலங்கைப் பிரஜை அல்லாத நிலையில்) அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டு பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். எனினும், கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப் ...

Read More »

தேசிய பாதுகாப்பையும், பிராந்திய பாதுகாப்பையும் பாதுகாப்பேன்! – மைத்திரி

தேசிய பாதுகாப்பையும், பிராந்திய பாதுகாப்பையும் பாதுகாப்பதில் அரசாங்கம் அக்கறையுடனேயே செயற்படுகின்றது என சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அம்பேபுஸ்ஸவில் உள்ள சிறீலங்காவின் இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் உரையாற்றுகையில், 30 ஆண்டுகளாக நீடித்த போரின்போது, சிறீலங்கா இராணுவத்தினரும் காவல்துறையினரும் செய்த தியாகத்தை மறக்கமுடியாது. தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்புக்குத் தேவையான அனைத்தையும் நான் செய்வேன். எதிர்கால தேசிய பாதுகாப்புக்காக ஆற்றல், புலனாய்வு, அனுபவம் என்பன புதிய தொழிநுட்பத்துடன் இணைக்கப்படவேண்டும். எனவே நாட்டின் பாதுகாப்புப் ...

Read More »

வடமாகாண நீர்வள அபிவிருத்தி ஆய்வரங்கு- முதலமைச்சர் விக்னேஸ்வரன் உரை

வடமாகாணத்தின் நீர்வளத்தினை மீட்டெடுத்தல், பாதுகாத்தல், பங்கிடுதல், முகாமை செய்தல் எனும் விடயப்பரப்புக்களை உள்ளடக்கியதாக வடமாகாணத்திற்குப் பொருத்தமான ஒரு நீரியியல் கொள்கையினை வகுப்பதற்கான சர்வதேச மற்றும் உள்ளூர் நிபுணர்கள் கலந்து கொள்ளும் ஆய்வரங்கு.28.01.2017 காலை 09.30 மணிக்கு யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சி. வி . விக்னேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் அங்கு உரையாற்றுகையில், வடமாகாணத்தின் நீர்வளத்தினை மீட்டெடுத்தல், பாதுகாத்தல், பங்கிடுதல், முகாமை செய்தல் எனும் விடயப்பரப்புக்களை உள்ளடக்கியதாக வடமாகாணத்திற்குப் பொருத்தமான ...

Read More »

நாயுடன் படுத்தால் உண்ணிதான் மிஞ்சும் என்ற பழமொழி கூறும் உண்மையே தமிழருக்குக் கிடைக்கும் தீர்வாகும்

சிங்களத் தலைமைகளை நம்பி அவர்களுடன் சேர்ந்திருந்து ஏமாற்றப்படுவதுதான் தேவையென்றால், நாயுடன் படுத்தால் உண்ணிதான் மிஞ்சும் என்ற பழமொழி கூறும் உண்மையே தமிழருக்குக் கிடைக்கும் தீர்வாகும். இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொழும்புப் பத்திரிகை ஒன்றில் வெளியான கட்டுரையொன்றில் தெரிவிக்கப்பட்ட சில விடயங்கள் இன்னமும் என் தலையைக் குடைந்து கொண்டிருக்கிறது. இது ஒரு சிறுகதையாக அல்லது குறுநாவலாக இருந்தால் இதனைக் கற்பனை கலந்தது என்று தள்ளிவிடலாம். ஆனால் இது ஓர் அரசியல் கட்டுரை. அறிய வருவது, தெரிய வருகிறது, கூறப்படுகிறது என்ற மாமூலான ஊடகச் சொல்லாடல்கள் எதுவும் ...

Read More »

நாவற்குழி சிங்கள குடியேற்றத்திற்கு மாவை அனுமதி!

சர்ச்சைக்குரிய நாவற்குழி சிங்கள குடியேற்றத்திட்டத்தில் குடியமர்த்தப்பட்டுள்ள சிங்கள குடும்பங்களிற்கு வீடுகளை ஒதுக்கி வழங்க மாவை சேனாதிராசா சம்மதித்திருந்தமை அம்பலமாகியுள்ளது. தேசிய வீடமைப்பு அதிகாரசபை அதிகாரிகள் இதனை அம்பலப்படுத்தியுள்ளனர். ஏற்கனவே அங்கு குடியமர்ந்துள்ள 200 இற்கும் அதிகமான தமிழ் குடும்பங்கள் வீடுகளோ காணிகளோ இல்லாதுள்ள நிலையில் அவர்களிற்கு வீடு காணி வழங்குவதானால் சிங்கள குடியேற்றவாசிகளிற்கும் அவை வழங்கப்பட வேண்டுமென்ற நிபந்தனை தென்னிலங்கை அரசியல்வாதிகளால் தேசிய வீடமைப்பு அதிகாரசபை அதிகாரிகளிற்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாவை சேனாதிராசா இதற்கு சம்மதித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும் அங்கு குடியமர்த்தப்பட்டுள்ள சிங்கள குடும்பங்களில் ...

Read More »

வவுனியாவில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமலாக்கப்பட்ட ஒருவரின் தாயார் மயக்கம்

வவுனியாவில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமலாக்கப்பட்ட ஒருவரின் தாயார் மயக்கமுற்று விழுந்த நிலையில் வவுனியா மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் 14பேர் இன்றுடன் நான்காவது நாளாகவும் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் உடல்நிலையைப் பரிசோதனை செய்த வைத்தியர் குழு இவர்களின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுவந்த தாயார் ஒருவர் நேற்று மாலை மயக்கமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஏனையோர் நான்காவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களின் உயிர்களைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை ...

Read More »