Tag Archives: ஆசிரியர்தெரிவு

ஒதுக்கிவிட முடியாத காதல் ‘ஒபிஸீட்’!

மனித இனம் ‘குடும்பம்’ என்ற செயற்கை சட்டத்திற்குள் என்று அடைக்கப்பட்டதோ, அன்றே மனிதன் இயற்கைக்கு முரணாக வாழத் தொடங்கி விட்டான். ஆணும் பெண்ணும், கணவன் மனைவியாக ஒரே வீட்டில் ஒன்றாக வசிக்கிறார்கள்; ஆனால் சிலரே வாழ்கிறார்கள். வீட்டுக்கு வெளியே முகமூடி அணிந்து நடக்கும் மனித கூட்டமானது, தனது ரகசிய பக்கங்களில் கிறுக்கி வைத்திருப்பதே அவரவர் நிஜ முகங்கள். கள்ளக்காதல் என்ற சொல் இந்த நூற்றாண்டில் தான் உருவாகியிருக்க வேண்டும். உண்மையில் காதல் எப்படி கள்ளத்தனமாகும்? திருமணம் என்ற பெயரில் பொருந்தாத இரு உடல்களை, ஊர் ...

Read More »

தமிழிலும் இன்டர்நெட் டொமைன் அறிமுகம்!

இந்தியாவில் இனி தமிழிலும் இன்டர்நெட் டொமைன் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வசதி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. உலகில் இணையம் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையில் தமிழர்களும் கணிசமாக இருக்கிறார்கள். அதேபோல், தமிழ்நாட்டு மக்கள் இணையத்தில் அதிக அளவில் தமிழை பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலான ஆங்கில பக்கங்கள் எல்லாம் தற்போது தமிழில் வந்துள்ளது. இந்த நிலையில் இந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. டொமைன் என்றால் என்ன? இணையத்தில் பொதுவாக கூகுளில் எல்லா மொழியிலும் சர்ச் செய்ய முடியும். ஆனால் டொமைன் எனப்படும், இணையதள பக்கங்களின் லிங்குகள் மட்டும் ...

Read More »

புலம் பெயர்ந்த மக்களுக்கு பிறப்பு, குடியுரிமைச் சான்றிதழ் வழங்கும் நடமாடும் சேவை!

புலம் பெயர்ந்து நாடு திரும்பிய மக்களுக்கான தூதரக பிறப்புச் சான்றிதழ் மற்றும் குடியுரிமைச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளுவதற்கான நடமாடும் சேவை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் மன்னார் நகர கலாச்சார மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது. மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் ஒபர் சிலோன் அமைப்பின் அனுசரணையுடன் குறித்த நடமாடும் சேவை ஆரம்பமாகியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையும்,நாளை திங்கட்கிழமை காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரையும் குறித்த சேவைகள் இடம் பெறும இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, ...

Read More »

எளிய மனிதர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் சீமத்துரை!

கீதன், வர்ஷா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சீமத்துரை’ எளிய மனிதர்களின் வாழ்வியலை இயல்பு சிதையாமல் பிரதிபலிக்கும் என்று இயக்குனர் கூறியிருக்கிறார். புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் இ.சுஜய் கிருஷ்ணா தயாரிப்பில், சந்தோஷ் தியாகராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம், “சீமத்துரை”. கீதன், வர்ஷா பொல்லம்மா கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடிக்க விஜி சந்திரசேகர், கயல் வின்செண்ட், மகேந்திரன், ‘சுந்தர பாண்டியன்’ காசி மற்றும் பலர் நடித்துள்ளனர். “ஒவ்வொரு மனிதனுடைய வாழ்வியலில் சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் ஏதாவது ஒரு தருணத்தில், புரட்டிப் போடும்படியான ...

Read More »

எழுத்தாளர் வி.எஸ் நைபால் காலமானார்!

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற இந்தோ-கரீபியன் எழுத்தாளர் வி.எஸ் நைபால் லண்டனில் வயோதிகம் காரணமாக காலமானார். கரீபியன் தீவில் ஒன்றான டிரினாட் நகரில் 1932-ம் ஆண்டு பிறந்த வி.எஸ் நைபாலின் முழுப்பெயர் சர் விதியாதர் சுராஜ்பிரசாத் நைபால் என்பதாகும். இவரது தந்தை சீபிரசாத் நைபாலின் பெற்றோர் இந்தியாவில் இருந்து அங்கு குடியேறியவர்கள் ஆவார். பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்துள்ள நைபால், 30-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். 1971-ம் ஆண்டு ‘இன் ஏ ப்ரீ ஸ்டேட்’ என்ற புத்தகத்துக்கான அவருக்கு புக்கர் ...

Read More »

தலைவர் பிரபாகரனுக்கு மகிந்த ராஜபக்ச கடிதம் எழுதினாராம்!

சமாதான தீர்வை காண்பதற்காக விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் நான் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள முன்வந்தேன் ஆனால் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை இதன் காரணமாக அவரை கொல்லவேண்டியநிலையேற்பட்டது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஐலன்டின் விசேட செய்தியாளர் எஸ் வெங்கட் நாரயணனிற்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். நாங்கள் தீர்வை காண்பதற்காக நேரடி சந்திப்பொன்றில் ஈடுபடுவோம் நான் கிளிநொச்சி வருகின்றேன் அல்லது நீங்கள் கொழும்பு வரலாம் என தெரிவித்து பிரபாகரனிற்கு கடிதம் எழுதினேன் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 2006 இல் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் ஐந்து பேரின் குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளது!

5 அவுஸ்திரேலியர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த ஐந்து பேரும் இனி அவுஸ்திரேலியா திரும்ப முடியாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியக் குடியுரிமை உட்பட இரட்டைக் குடியுரிமை கொண்ட குறித்த ஐவரும் மத்திய கிழக்கில் தீவிரவாதச் செயற்பாட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் குறித்த ஐந்து பேரும் ஐஎஸ் அமைப்புடன் சேர்ந்து இயங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் விழுமியங்களுக்கு எதிராக செயற்பட்டமையினாலேயே இம்முடிவு எடுக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் (Peter Dutton) தெரிவித்துள்ளார். 20 – 30 வயதுகளில் இருக்கும் ஐந்து பேருடைய குடியுரிமையே இவ்வாறு ...

Read More »

போலி சான்றிதழ் மூலம் அவுஸ்திரேலியா சென்ற 22 பேருக்கு நேர்ந்த கதி!

அவுஸ்திரேலிய அரசிடம் போலி சான்றிதழ்கள் சமர்பித்தது தொடர்பாக தமிழம், கேரளாவை சேர்ந்த 22 மாணவர்களின் விசா ரத்து செய்யப்பட்டது. தமிழ்நாடு, கேரளாவை சேர்ந்த மாணவர்கள் சிலர் அவுஸ்திரேலியாவில் கல்வி கற்று வருகின்றனர். ஒரு சிலர் அங்குள்ள தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் 22 பேர் அவுஸ்திரேலிய அரசிடம் சமர்பித்திருந்த சான்றிதழ்கள் போலியானவை என கண்டறியப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து குறித்த 22 பேரின் விசாவை ரத்து செய்து அதற்கான நோட்டீசை மாணவர்களிடம் அவுஸ்திரேலிய அதிகாரிகள் வழங்கி உள்ளனர்.

Read More »

டானாக டானில்லை தாயே!

டான் என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு அறிஞர், பண்டிதர் ஆகிய அர்த்தங்களையும் அகராதிகள் தருகின்றன. அதன் லத்தீன் வேர்ச்சொல்  ‘டாமினோஸ்’. அது குரு, தலைவர் ஆகிய அர்த்தங்களைப் பட்டியலிடுகிறது. ஆங்கிலப் படங்களின் வழியாகவே வெவ்வேறு தொழில் செய்பவர்கள், அவர்களது தொழில்முறை ஆடையலங்காரம், பாத்திரப் படைப்புகள் ஆகியவற்றுக்கான தாக்கத்தை தமிழ்சினிமா பெற்றுக்கொண்டு வளர்ந்திருக்கிறது. உதாரணமாக 40-களில் வெளியான ‘சபாபதி’, ‘நல்ல தம்பி’ ஆகிய படங்களில் கோட்டும் சூட்டும் வர, பிற்காலங்களில் சிஐடி கதாபாத்திரங்களில் வருபவருக்கும் இதேபோல பிரத்தியேக கோட், சூட் மற்றும் தொப்பி என சர்வசாதாரணமாகத் தமிழ்நாட்டின் ...

Read More »

வாள்வெட்டு சம்பவங்கள், இரண்டு குழுக்களுக்கு இடையிலான மோதல் சம்பவங்களே!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் வாள்வெட்டு சம்பவங்கள், இரண்டு குழுக்களுக்கு இடையிலான மோதல் சம்பவங்களே என பொலிஸார் தன்னிடம் தெரிவித்துள்ளதாக, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வன்முறை சம்பவங்கள் தொடர்பில், பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைள் குறித்து, வாராந்தம் அறிக்கையை தன்னிடம் சமர்பிக்க வேண்டும் எனவும் பொலிஸாரிடம் கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். முதலமைச்சர் இல்லத்தில் நேற்று (10) நடைபெற்ற பொலிஸாருக்கும் முதலமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழில் இயங்கும் ஆவா மற்றும் ...

Read More »