Tag Archives: ஆசிரியர்தெரிவு

தமிழ் அரசியல்கைதிகளின் குடும்பத்தவர்கள்அச்சமடைந்துள்ளனர்!

அனுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற மிக மோசமான அச்சுறுத்தல் குறித்து தமிழ் அரசியல்கைதிகளின் குடும்பத்தவர்கள்அச்சமடைந்துள்ளனர் . அவர்கள் இப்போது என்ன மன நிலையில் உள்ளனரோ என கவலைவெளியிட்டுள்ளதுடன் அவர்களை பார்வையிட அனுமதியை பெற்றுத்தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்களை நேரில் பார்க்க வேண்டும் என அரசியல் கைதிகளின் உறவினர்கள் வேண்;டுகோள் விடுத்துள்ளனர். எனவே அவர்களின் கோரிக்கை தொடர்பில் அரசிடம் உத்தியோகபூர்வமான கோரிக்கையியினைமுன் வைப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்தார். இன்று (15.09.2021) காலை 11 மணிக்கு இடம்பெற்ற இணையவழியிலான ஊடக சந்திப்பின் போதே ...

Read More »

100,000 க்கும் அதிகமான வருமானத்தை பெறுபவர்களிடமிருந்து 5% வரி விதிக்கப்பட வேண்டும் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல!

100,000 க்கும் அதிகமான வருமானத்தை பெறுபவர்களிடமிருந்து 5% வரி விதிக்கப்பட வேண்டும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் முன்மொழிவு அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல என அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இது தொடர்பில் விவாதிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற பொது சேவைகளைத் தொடர்வதற்காக வரி வசூலிக்க அமைச்சர் குணவர்தன முன்வைத்த முன்மொழிவு தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது, இது அமைச்சரின் தனிப்பட்ட கருத்து என்றும், இது தொடர்பில் அரசாங்கம் அவருக்கு அவப்பெயரை ஏற்படுத்தமாட்டாது என்றும் ...

Read More »

எதிர்வரும் திங்கட்கிழமைக்குப் பின்னர் நாடு மீண்டும் திறக்கப்படும்

முடக்கலின் போது கொரோனா தொற்றாளர்கள் மற்றும் இறப்புகள் குறைவடைந்துள்ளதாகவும், எதிர்வரும் திங்கட்கிழமையின் பின்னர் நாட்டை மீண்டும் திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என இராஜாங்க அமைச்சரான சுதர்ஷனி பெர்னாடோபுள்ளே தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். நோய் பரவுவதை கட்டுப்படுத்த நான்கு வார முடக்கல் போதுமானது அத்துடன் இந்த காலகட்டத்தில் கொவிட் இறப்பு மற்றும் நோய்த்தொற்றுகள் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அடுத்த திங்கட்கிழமைக்குப் பின்னர் நாடு முடக்கப்படும் என தான் நினைக்கவில்லை. நாடு படிப்படியாக மீண்டும் திறக்கப்பட வேண்டும், கொவிட் ...

Read More »

ஆஸ்திரேலியா: Australian Capital Territory -யில் மூன்றாவது தடவை முடக்க நிலை நீட்டிப்பு

ஆஸ்திரேலியாவின் New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,127 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் இருவர் இறந்துள்ளார்கள். Covid-19 கட்டுப்பாடுகள் காரணமாக அதிகம் பாதிப்படைந்துள்ள கலாச்சாரம் மற்றும் மொழி ரீதியாக வேறுபட்ட குழுக்கள், சமூகங்கள் மற்றும் தொழிலாளர்கள் என ஆதரவு கொடுப்பனவுகள் பெற தகுதியானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Australian Capital Territory-யில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 22 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. ACTயில் முடக்க நிலை மேலும் நான்கு வாரங்கள் நீட்டிக்கப் பட்டுள்ளது. ஒரே ...

Read More »

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதற்கு உடனடியாக தடைவிதிக்க வேண்டும் – ஐ.நா. மனித உரிமை ஆணையாளர்

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்துவது குறித்து கவலை வெளியிட்டுள்ள மிச்செலே பச்லெட் இந்தச் சட்டத்தை பயன்படுத்துவதற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Read More »

சிவில் நிர்வாகத்தின் மீது இராணுவத்தின் செல்வாக்கை மேலும் அதிகரிக்கின்றன

இலங்கையில் கடந்த மாதம் நடைமுறைக்கு வந்த அவசர கால விதிமுறைகள் பரந்துபட்டவை எனத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர், சிவில் நிர்வாகத்தின் மீது இராணுவத்தின் செல்வாக்கை இது மேலும் அதிகரிக்கின்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Read More »

`கொரோனா சூழல் இல்லாதபோதும் கூட அது வேண்டாமே..!’ – நியூசிலாந்து பிரதமர்

கோவிட் முதல் அலையைத் திறமையாகக் கையாண்டு சாதனைபடைத்தது நியூசிலாந்து. ஆனால், உருமாறிய டெல்டா வைரஸால் நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. இதற்கிடையே நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். பிரதமர் ஆர்டெர்ன், `மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கோவிட் நோயாளிகள், பார்வையாளர் சந்திப்பின்போது உடலுறவில் ஈடுபடக் கூடாது’ எனக் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார். கொரோனா பாதிப்பு குறித்து தினசரி பத்திரிகையாளர்களைச் சந்தித்து, மக்களுக்கு நிலைமையை தெரிவிக்கும் அன்றாட நிகழ்வின்போது பத்திரிகையாளர் ஒருவர் குளிர்காலத்தைச் சுட்டிக்காட்டி, கோவிட் பாதித்த நோயாளிகள், பார்வையாளர் சந்திப்பு நேரத்தில் உடலுறவில் ...

Read More »

இறந்ததாக கருதப்பட்ட அல்-கொய்தா தலைவர் காணொளியில் தோன்றினார்

அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்த்த நாளன்று காணொளியில் தோன்றி அதிர்ச்சி அளித்துள்ளார் அல்-கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி. அமெரிக்காவில் இரட்டை கோபுரம், பென்டகன் உள்ளிட்ட இடங்களை விமானத்தை மோதவிட்டு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந்தேதி நடைபெற்றது. இந்த தாக்குதல் 9/11 எனக் குறிப்பிடப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் அமெரிக்கா ராணுவம் ஈடுபட்டது. தலிபான் தலைவர் பின்லேடன் உள்பட முக்கிய பயங்கரவாத தலைவர்கள் கொலை செய்யப்பட்டனர். அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ...

Read More »

ஒருநாளைக்கு இரண்டுவேளை மாத்திரம் சாப்பிடுங்கள்!

ஒருநாளைக்கு மூன்றுவேளை உண்பவர்கள் இரண்டு நேரமாக அதனை குறைக்கவேண்டும் ; தியாகம் செய்ய வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத்; குமார வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போதைய கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்படும் வரை அடுத்தசில நாட்களிற்கு மக்கள் தியாகங்களை செய்யவேண்டும் மூன்றுவேளையும் உணவுண்பதை தவிர்த்து இரண்டுவேளை சாப்பிடவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் அனேகமான மக்கள் அவலநிலையில் உள்ளனர் என நான் நினைக்கின்றேன்,எவரும் 2000 ரூபாயுடன் வாழமுடியாது என்பதால் நாங்கள் அது குறித்து கவலையடைந்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். 2000 ரூபாய்க்கு ...

Read More »

சிறிலங்கா ஜனாதிபதி இஸ்லாமிய தீவிரவாதத்தையும் அழிக்க வேண்டும்

விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு செயற்பட்டது போன்று செயற்பட்டு ஜனாதிபதி இஸ்லாமிய தீவிரவாதத்தையும் அழிக்கவேண்டும் என பொதுபலசேன வேண்டுகோள் விடுத்துள்ளது. சிறிலங்கா ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இஸ்லாமிய தீவிரவாதம் மீண்டும் தலைதூக்குவதை தடுப்பதற்கான அவசியம் உள்ளது என தெரிவித்துள்ள அவர் புலிகளின் பயங்கரவாதத்தை நாட்டில் இருந்து அழிப்பதற்கு எடுத்தது போன்ற துல்லியமான விரைவான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்துவதற்கான சதிமுயற்சிகள் மற்றும் தீவிரவாதிகளின் செல்வாக்கு குறித்து தனது கடிதத்தில் ...

Read More »