இறந்ததாக கருதப்பட்ட அல்-கொய்தா தலைவர் காணொளியில் தோன்றினார்

அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்த்த நாளன்று காணொளியில் தோன்றி அதிர்ச்சி அளித்துள்ளார் அல்-கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி.

அமெரிக்காவில் இரட்டை கோபுரம், பென்டகன் உள்ளிட்ட இடங்களை விமானத்தை மோதவிட்டு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந்தேதி நடைபெற்றது. இந்த தாக்குதல் 9/11 எனக் குறிப்பிடப்படுகிறது.

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் அமெரிக்கா ராணுவம் ஈடுபட்டது. தலிபான் தலைவர் பின்லேடன் உள்பட முக்கிய பயங்கரவாத தலைவர்கள் கொலை செய்யப்பட்டனர்.

அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கடந்த ஆண்டு உடல்நலம் குன்றி உயிரிழந்ததாக தகவல் வெளியானது. அதன்பின் அவர் வீடியோவில் தோன்றவில்லை.

இந்த நிலையில் நேற்று வீடியோவில் தோன்றி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. 9/11 தாக்குதல் சம்பவம் அனுசரிக்கப்படும் நாளில் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஜெருசலேம் ஒருபோதும் யூதமயமாக்கப்படாது. சிரியாவில் ரஷிய ராணுவம் மீது அல்-கொய்தா ராணுவம் நடத்திய தாக்குதலை பாராட்டியுள்ளார்.

எஸ்.ஐ.டி.இ. உளவுக்குழு இந்த வீடியோவை ஆராய்ந்து நேற்று வெளியிடப்பட்டதை உறுதி செய்துள்ளது. இந்த வீடியோவில் தலிபான் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியது குறித்து அல்-ஜவாஹிரி ஏதும் கூறவில்லை.