Tag Archives: ஆசிரியர்தெரிவு

அமெரிக்காவில் பூஸ்டர் தடுப்பூசிக்கு அனுமதி

அமெரிக்காவில் பல்லாயிரக்கணக்கானோர் 2-வது டோஸ் செலுத்திக் கொண்டு 6 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இதையடுத்து அவர்களில் தகுதியானவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஒருசில தடுப்பு மருந்துகளை தவிர பெரும்பாலான தடுப்பு மருந்துகள் இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட்டு வருகின்றன. இவை குறிப்பிட்ட கால இடைவெளியில் போடப்பட்டு வருகிறது. இதற்கிடையே கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது. முன்பைவிட வேகமாக பரவும் தன்மையுடன் உருமாறிய கொரோனா இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து ...

Read More »

கடுமையான கொவிட் -19 மயக்கநிலைக்கு வழிவகுக்கும் – அமெரிக்க ஆய்வு

அமெரிக்காவில் கொவிட் -19 தொற்று நோயின் போது வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட 150 நோயாளர்களிடம் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் அதில் 73% ஆனவர்களுக்கு மயக்க நிலை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது ஒரு நபர் குழப்பம், கலக்கம் மற்றும் தெளிவாக சிந்திக்க முடியாத மன நிலையில் ஒரு தீவிர இடையூறு ஆகும். BMJ Open இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், மனச்சோர்வு உள்ள நோயாளிகள் அதிக இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களுடன், கடுமையான கொவிட் தொடர்பான நோய்களைக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை நீடிக்கும் மற்றும் மீட்பை ...

Read More »

ஜனாதிபதி பிரதமருக்கு எதிராக மக்கள் கோசமெழுப்புவதற்கு காரணம் என்ன ?

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ இத்தாலிக்கு விஜயம் செய்திருந்த போது, மக்கள் அவருக்கு எதிர்ப்பினை தெரிவித்து கோசங்களை எழுப்பியிருந்தனர். இந்தநிலையில் அமெரிக்காவிற்கு சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்ப மக்கள் தயாராகிக் கொண்டிருப்பதாக நாங்கள் அறிகின்றோம். என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நாடாளுமன்றில் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது நாங்கள் பார்த்தோம் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ இத்தாலிக்கு விஜயம் செய்திருந்த போது, மக்கள் அவருக்கு எதிர்ப்பினை தெரிவித்து கோசங்களை எழுப்பியிருந்தனர். இந்தநிலையில் அமெரிக்காவிற்கு சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராகவும் ...

Read More »

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களிற்கு நீதியை வழங்காமல் மரணசான்றிதழ் வழங்குவதை ஐநா ஆதரித்தால் அது வரலாற்று தவறு

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களிற்கு நீதியை வழங்காமல் மரணசான்றிதழ் வழங்குவதை ஐநா ஆதரித்தால் அது வரலாற்று தவறு- என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார் இலங்கை நாடாளுமன்றத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது இராணுவத்தால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு( எதுவித நீதி பொறுப்புக்கூறலும் இன்றி ) மரண சான்றிதழ் வழங்க போவதாக ஐநா பொது செயலாளரை சந்தித்த பின்னர் ஜனாதிபதி கோத்தாபாய தெரிவித்திருக்கிறார். ஐநாவின் அடிப்படை நியாயப்பாடுகளையே கேலிக்குள்ளாக்கும் இந்த செயல்பாடுகளை ஐநா ஆதரிக்குமானால், அது ஒரு வரலாற்று தவறாகவே பதியப்படும். பாதிக்கப்பட்ட மக்களின் ...

Read More »

லொகான் ரத்வத்தையை நாடாளுமன்றத்திலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுக்குமா?

லொகான் ரத்வத்தையின் குற்றவியல் நடத்தை காரணமாக அவர் தொடர்ந்தும் சிறைச்சாலைகள் விவகார அமைச்சராக பணியாற்ற முடியாது என்பதுடன் அவர் அரசாங்கத்தில் எந்த அமைச்சர் பதவியையும் வகிக்க முடியாது. அவர் அமைச்சரவையில் எந்த பதவியையும் வகிக்காத நிலையை அரசாங்கம் உறுதி செய்யுமா? அவரை நாடாளுமன்றத்திலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கையை எடுக்குமா என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி கேள்வி எழுப்பியுள்ளார் 22-09-2021 கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்ற நிலையியல் கட்டளை 27(2) இன் கீழ் முன்வைத்த பிரேரணை / கேள்வி பொது முக்கியத்துவம் ...

Read More »

ரத்வத்த சம்பவம்: அடுத்தடுத்த நிகழ்வுகள் குறித்து கவலை எழுப்புகிறார் அம்பிகா

சிறைச்சாலை முகாமைத்துவம், கைதிகளின் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறை வளாகங்களுக்குள் போதையில் வலுக் கட்டாயமாக பிரவேசித்ததாகக் கூறப்படும் சம்பவங்களுக்குப் பின்னரான நிகழ்வுகள் தொடர்பாக , இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் ட்விட்டரில் பல கவலைகளையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளார். ரத்வத்தயின் நடத்தையால் பாதிக்கப்பட்ட கைதிகள் எவ்வாறு துரிதமாக அமைச்சர் ராஜபக்ஷவின் வருகை தொடர்பாக அழைப்பு விடுக்கும் செய்தியை அனுப்பக்கூடியதாக இருந்தது என்று அனுராதபுரம் சிறைச்சாலைக்கு அமைச்சர் நாமல் ராஜபக்ச வின் வருகை குறித்து ...

Read More »

ஐ.நா.வுக்கான ஆப்கானிஸ்தான் தூதரை அறிவித்த தலிபான்கள்

ஐ.நா. சபையில் உலக தலைவர்கள் பங்கேற்கும் பொது விவாதம் நேற்று முதல் தொடங்கி உள்ளது. இதில் ஆப்கானிஸ்தான் சார்பில் தாங்கள் பங்கேற்று பேச அனுமதி அளிக்கும்படி தலிபான்கள் வலியுறுத்தி உள்ளனர். ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைத்துள்ள தலிபான்கள் தங்களது அரசை மற்ற நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தலிபான்கள் அரசில் ஒரு பெண் கூட இடம் பெறவில்லை. மேலும் அமைச்சரவையில் சில பயங்கரவாதிகளும் இடம் பெற்றுள்ளனர். இதனால் தலிபான்கள் அரசை உலக நாடுகள் ஏற்க மறுத்து அங்கீகாரம் அளிக்கவில்லை. ஆனாலும் சர்வதேச ...

Read More »

காணாமல் போனோரை கொன்று விட்டனரா?

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு மரணச்சான்றிதழை வழங்க இலங்கை ஜனாதிபதி முன்வந்திருப்பதன் மூலம் அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனரென்பதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளாராவென கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிறேமசந்திரன். யாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துவெளியிட்ட அவர் இலங்கை ஜனாதிபதி ஜநா பொதுச் செயலர் உடனான சந்திப்பின் போது காணாமல் ஆக்கப்பட்டோருக்கு மரணச்சான்றிதழை வழங்க நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்துள்ளதாக ஊடக அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.. முதலில் அவர் இலங்கை திரும்பியதும் இத்தகைய அறிவிப்பினை முதலில் திட்டவட்டமாக பகிரங்கமாக அறிவிக்கவேண்டும். இலங்கை அரசின் தகவல்படி ...

Read More »

ஆஸ்திரேலியாவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவு

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். ஆஸ்திரேலியாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. மெல்போர்ன் நகரில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மன்ஸ்பீல்டு பகுதியில் 5.8 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. கட்டிடங்கள் குலுங்கியதால் பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். அங்குள்ள சேப்பல் தெருவில் உள்ள ஒரு கட்டிடம் சேதம் ...

Read More »

கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு தீர்வாகாது!-ஆஸ்திரேலிய மாநிலம்

ஆஸ்திரேலியாவில் கொரோனா பெருந்தொற்று தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், அங்குள்ள மாநிலங்கள், பிரதேசங்கள் ஊரடங்கினால் தொற்றினை ஒழிக்க முடியாது எனும் எண்ணத்திற்கு வந்துள்ளன. இதனை தொற்று பரவலுக்கு இடையில் வாழ்க்கையை நடத்துவது குறித்து ஆஸ்திரேலிய மாநில அரசுகள் சிந்திக்கத் தொடங்கியுள்ளன. ஆஸ்திரேலியாவின் 25 மில்லியன் மக்கள் தொகையில் 25 சதவீதமானோரை கொண்டுள்ள விக்டோரியா மாநிலம், 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 70 சதவீதமானோர் முழுமையான தடுப்பூசி செலுத்திய பின்னர், ஊரடங்கினை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. வரும் அக்டோபர் 26ம் தேதிக்குள் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா ...

Read More »