Tag Archives: ஆசிரியர்தெரிவு

பாதுகாப்பு கவசங்களை சீனா பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்கிறது

சீனா, உலகம் முழுவதும் முக கவசம், பாதுகாப்பு கவசம், கையுறை ஆகியவற்றை வாங்கி பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக வெள்ளை மாளிகை அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி அலுவலகமான வெள்ளை மாளிகையின் வர்த்தகம் மற்றும் உற்பத்தி பிரிவு இயக்குனர் பீட்டர் நவரோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில், சீனா, உலகம் முழுவதும் முக கவசம், பாதுகாப்பு கவசம், கையுறை ஆகியவற்றை வாங்கி குவித்தது. தேவையை விட 18 மடங்கு அதிகமாக வாங்கியது. முக ...

Read More »

சிரேஷ்ட ஊடகவியலாளர் நெடுஞ்செழியன் காலமானார்!

எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்தின் வெளியீடான சூரியகாந்தி பத்திரிகையின் பொறுப்பாசிரியரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான நல்லதம்பி நெடுஞ்செழியன் (65) இன்று செவ்வாய்க்கிழமை காலமானார் தலவாக்கலையை பிறப்பிடமாகக் கொண்ட அவர் அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியின் பழைய மாணவராவார் . தனது ஊடக பயணத்தை தினபதி மற்றும் சிந்தாமணியின் ஊடாக ஆரம்பித்த அவர் பின்னர் சக்தி ஊடக நிறுவனத்தின் செய்தி ஆசிரியராக ஒரு தசாப்த காலத்துக்கு மேல் பணியாற்றினார் பின்பு எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்தின் வீரகேசரி வாரவெளியீட்டுப் பிரிவின் மலையக பகுதிக்கு பொறுப்பாக இருந்தார். அதன் பின்னர் ...

Read More »

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தல் ஜூன் 20

நாடாளுமன்றத் தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி நடத்தும் திகதியிடப்பட்ட தேர்தல் ஆணைக்குழுவின் வர்த்தமானி வெளியானது நாடாளுமன்றத் தேர்தலை எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார். நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதியை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்திருந்த நிலையில் தற்போது இந்த வர்த்தமானி வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலை குறித்து சுகாதார பணிப்பாளர், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் தேர்தல்கள் ஆணைக்குழு நடத்திய பேச்சுவர்த்தையில் ...

Read More »

கொழும்பில் 1010 நபர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை!

கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தையில் வசிக்கும் 242 குடும்பங்களைச் சேர்ந்த 1010 பேர் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இன்றைய தினமும் கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தையில் ஐந்து தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 309 வரை அதிகரித்துள்ளது. முன்னதாக, நேற்று (20) காலையில் 24 நோயாளர்களும், பிற்பகலில் 8 தொற்றாளர்களும் மாலையில் ஒரு தொற்றாளரும் இனங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்றுக்கு உள்ளான 98 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். அத்துடன், இலங்கையில் ...

Read More »

கிம்மின் உடல் நிலை கவலைக்கிடம்?

ஊரடங்கு தளர்வானது பலரது தியாகங்களை பயனற்றதாக்கியுள்ளது என்று யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனோல்ட் நேற்று (20) அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஆதங்கம் தெரிவித்துள்ளார். மேலும் அறிக்கையில், கொரோனா தாக்கத்திலிருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்கும் வகையில் இடைவிடாது தொடரப்பட்ட ஊரடங்கானது இன்று (நேற்று) யாழிலும் விலக்கப்பட்டது. இக்கொடிய வைரஸ் தாக்கத்திலிருந்து நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு சுகாதாரத் துறையினர், வைத்தியர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் வழங்கிக் கொண்டிருக்கும் தியாகங்களும், சேவைகளும் ஊரடங்கு தளர்வினால் தவிடுபொடியாக்கப்பட்டுள்ளது. மக்களின் அன்றாடத் தேவைகளுடன் தொடர்புபடாத பல கடைத் தொகுதிகள் ...

Read More »

வைரசை மனிதனால் உருவாக்க முடியாது – சீன ஆய்வுக்கூடம் சொல்கிறது

உலகையே கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கிற கொரோனா வைரசை மனிதனால் உருவாக்க முடியாது என்று சர்ச்சைக்குரிய சீன ஆய்வுக்கூடம் சொல்கிறது. உலகையே கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கிற கொரோனா வைரஸ், வுகான் நகரில் உள்ள கடல்வாழ் உயிரினங்கள் சந்தையில் தோன்றியதாக கூறப்பட்டு வந்தது. இதில் திடீர் திருப்பமாக, “இந்த வைரஸ் வுகான் நகரில் உள்ள வைராலஜி இன்ஸ்டிடியூட்டின் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டது, அது அங்கிருந்து தப்பித்து வந்துள்ளது” என்று அமெரிக்காவின் ‘பாக்ஸ் நியூஸ்’ டெலிவிஷன் வெளியிட்டுள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உலகையே கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கிற கொரோனா ...

Read More »

ஆஸ்திரேலிய வீரர்கள் சம்பளத்தை இழக்க வாய்ப்புள்ளது: மார்க் டெய்லர்

கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் இருப்பதால் ஆஸ்திரேலிய வீரர்கள் சம்பளத்தை இழக்க வாய்ப்புள்ளதாக முன்னாள் வீரர் மார்க் டெய்லர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் கடந்த மாதத்தில் இருந்து நடைபெறாமல் உள்ளது. ஆஸ்திரேலிய அரசு ஆறுமாத காலத்திற்கு சர்வதேச எல்லையை மூடியுள்ளது. ஆனால் ஜூன் மாதத்திற்குப் பிறகு கிரிக்கெட் போட்டிகள் நடைபெற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. கிரிக்கெட் நடைபெறாமல் இருப்பதால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு மிகப்பெரிய அளவில் இழப்பை சந்தித்துள்ளது. இதனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டில் வேலை செய்யும் ஸ்டாஃப்களுக்கு ஜூன் மாதம் ...

Read More »

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு – வீடு வீடாக சென்று உணவு வழங்கிய ஹாரி-மேகன் தம்பதி

இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த ஹாரி-மேகன் தம்பதி ஊரடங்கால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு – வீடு வீடாக சென்று உணவு வழங்கினர். இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த ஹாரி-மேகன் தம்பதி, தங்களது மகன் ஆர்ச்சியுடன் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் குடியேறினர். இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுக்க தொடங்கியதால், இந்த தம்பதி கடந்த மாத இறுதியில் கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு மாறினர். அங்கு மேகனின் சொந்த ஊரான கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ...

Read More »

தருணிகாவின் பாதுகாப்பு விசா முடிவைப் பொறுத்தே இக்குடும்பத்தின் எதிர்காலம்!

ஆஸ்திரேலியாவிலிருந்து ஈழ தமிழ் அகதி குடும்பத்தை நாடுகடத்தவது தொடர்பான வழக்கில், அக்குடும்பத்திற்கு ஆதரவாக நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது. பிரியா, நடேசலிங்கம் ஆகிய இருவரும் இலங்கையிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய ஈழ தமிழ் அகதிகள். படகு வழியாக தஞ்சமடைந்த இவர்கள், ஆஸ்திரேலியாவில் சந்தித்துக் கொண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர்களுக்கு அங்கு இரு குழந்தைகளும் பிறந்தன. இவர்கள் ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பு விசா கோரி நிலையில், அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களது நாடுகடத்தல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் ...

Read More »

கொரோனா வைரஸ்- சர்வதேச விசாரணைகள் வேண்டும் – அவுஸ்ரேலியா வலியுத்தல்!

சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளிலும் பரவி பாரிய மனித அழிவினை ஏற்படுத்தி வருகின்றது. இந்த வைரஸானது சீனாவின் பிரதான நகரங்களில் ஒன்றான வூகான் நகரத்தில் உள்ள சந்தை பகுதிகளில் காட்டு விலங்குகள் மற்றும் பறவைகள் விற்பனை செய்து அதனை அந்நாட்டு மக்கள் உணவுப்பொருட்களாக பயன்படுத்துவதன் மூலம் பரவியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டு வருகிறது. மேலும் சீனாவின் வூகான் நகரில் உள்ள மருத்துவ ஆய்வு கூடங்களில் இருந்து, சீனாவின் தலையீட்டுடன் குறித்த வைரஸ் பரவியிருப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக ...

Read More »