Tag Archives: ஆசிரியர்தெரிவு

கொரோனா வைரஸ் தொடர்ந்தும் எச்சரிக்கையுடன் இருக்கவும்!

கொரோனா வைரஸ் குறித்து மக்களை தொடர்ந்தும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இராணுவதளபதி சவேந்திரசில்வா கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா வைரஸ் ஆபத்து முற்றாக நீங்கிவிட்டது என கருதி மக்கள் கொரோனா வைரஸ் தொடர்பான தங்கள் எச்சரிக்கையை தளர்த்தக்கூடாது என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையில் சமூகத்தில் கொரோனா வைரஸ் பரவவில்லை என்ற போதிலும் அது இடம்பெறும் ஆபத்தினை நிராகரிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ்நோயாளிகள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்படுபவர்களில் சிலர் கொரோனா ...

Read More »

மாகாண சபைத் தேர்தலில் சுதந்திரக் கட்சி தனித்து களமிறங்கத் திட்டம்?

மாகாண சபைத் தேர்தலில் தனித்து களமிறங்குவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆராய்ந்து வருவதாக அந்தக் கட்சி வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது. இலங்கையில் வடக்கு, கிழக்கு உட்பட 9 மாகாணசபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ள அரசு, அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இதன்படி இடைக்கால கணக்கறிக்கையில் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்வதற்காக பிரதான அரசியல் கட்சிகள் தயாராகிவருகின்றன. இந்நிலையிலேயே தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ...

Read More »

139 ஆண்டுகள் பழமையான மசூதியில் பாரிய தீப்பரவல்

தென்னாப்பிரிக்க நகரமான டர்பனில் 139 ஆண்டுகள் பழமையான மசூதியில் பாரிய தீப் பரவல் இடம்பெற்றுள்ளது. தென்னாபிரிக்காவின் மிகப்பெரிய மசூதிகளில் ஒன்றான கிரே ஸ்ட்ரீடில் திங்களன்று ஏற்பட்ட இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. எனினும் மசூதிக்கு மேலே அமைந்துள்ள ஏழு ஊழியர்களின் குடியிருப்புகளில் ஏற்பட்ட மின்சாரக் கோளாறு காரணமாக இந்த தீப் பரவல் ஏற்பட்டிருக்கலாம் என தென்னாபிரக்க முஸ்லிம் வலையமைப்பின் தலைவர் பைசல் சுலிமான் தெரிவித்துள்ளார். சுமார் இரண்டு மணி நேர போராட்டத்தின் பின்னர் தீயணைப்பு வீரர்கள் தீயிணை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். ...

Read More »

கோமாவில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் – ஆட்சி அதிகாரத்தில் சகோதரி

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் கோமா நிலையில் இருப்பதால், அவரது சகோதரியான கிம் யோ ஜாங்கிடம் அனைத்து பொறுப்புகளும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. தென் கொரியாவின் மறைந்த ஜனாதிபதி கிம் டே-ஜங்கின் முன்னாள் உதவியாளரான சாங் சாங்-மின், வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் உடல்நிலை மோசமடைந்து வருவது குறித்த ஊடகங்களுக்கு எரிபொருளைச் சேர்த்துள்ளார். வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மன அழுத்தம் காரணமாக தமது சகோதரியிடம் பொறுப்புகள் சிலவற்றை ஒப்படைத்துள்ளதாக வெளியான தகவலை அடுத்து தற்போது அவர் ...

Read More »

கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய காட்சி

ஆறு இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சி எடுத்த அதிசயக் காட்சி வெளியாகி உள்ளது.அமெரிக்கா கடலில் ஒரே நேரத்தில் ஆறு இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சி எடுத்த அதிசய காட்சி வெளியாகி உள்ளது. லூசியானா, மிசிசிப்பி, அலபாமா மற்றும் மேற்கு புளோரிடா பகுதிகளில் புயல் சின்னம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் லூசியானா மாகாணத்தின் கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றிருந்தவர்கள் கடலில் பேரதிசயத்தைக் கண்டனர். ஒரே நேரத்தில் அருகருகே 6 இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சி எடுத்துக் கொண்டிருந்தது. ஹாலிவுட் படங்களில் வருவது போன்று ...

Read More »

அம்பாறை மாவட்டத்தின் இரு வேறு பகுதிகளில் வெடிபொருட்கள் மீட்பு

திருக்கோவில் காவல் துறை  பிரிவிற்குட்பட்ட பாவட்டாய் என்னும் பிரதேசத்தில் கடந்த ஆகஸ்ட் 20 ஆம் திகதி அன்று காணியொன்றில் புதையுண்டிருந்த ரி-81 மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டு விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் செயலிழக்கசெய்யப்பட்டுள்ளது. இதே வேளை கடந்த காலங்களில் தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமாக இருந்த கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(23) பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினை அடுத்து விமானப்படையினரினால் யுத்த காலங்களில் உபயோகிக்கப்பட்ட வெடிபொருள் ஒன்றின் பகுதி மீட்கப்பட்டுள்ளது. குறித்த வெடிபொருளை ஆராய்ந்து உரிய அனுமதியை பெற்று செயழிலக்கம் செய்ய ...

Read More »

கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு

இலங்கை  மற்றுமொரு கொரோனா வைரஸ் தொற்றாளர் இனங்காணப்பட்டுள்ளார். இதனையடுத்து, நாட்டில் பதிவான கொரோனா வைரஸ் தொற்றாளர்  எண்ணிக்கை 2954ஆக உயர்ந்துள்ளது.

Read More »

இந்தோனேஷியாவில் குமுறத் தொடங்கியுள்ள சினாபுங் எரிமலை

மேற்கு இந்தோனேஷியாவில் உள்ள ஒரு எரிமலையானது ஞாயிற்றுக்கிழமை குமுறத் தொடங்கியுள்ளது. இந்தோனேசியாவின் முக்கிய தீவுகளில் ஒன்றான சுமத்ராவில் உள்ள சினாபுங் என்ற எரிமலையே இவ்வாறு குமுறத் தொடங்கியுள்ளதாகவும், அதன் நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை காலை 1,000 மீட்டர் (3,280 அடி) க்கும் அதிகமான புகை மற்றும் சாம்பலை காற்றில் இந்த எரிமலை வெளியேற்றியுள்ளது, மேலும் சூடான சாம்பல் மேகங்கள் தென்கிழக்கில் ஒரு கிலோமீட்டர் (0.6 மைல்) தொலைவு பயணித்ததாகவும் இந்தோனேசியாவின் எரிமலை மற்றும் புவியியல் தீங்கு குறைப்பு நிலையம் ...

Read More »

சந்திரிகாவின் புதிய முயற்சி

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அணி ஒன்றைத் தனியாக ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய நடவடிக்கைகளில் விரக்திய டைந்தவர்களுக்காக அவர் இவ்வாறு ஒருங்கிணைத்து வருகிறார். இவ்வாறு ஒருங்கிணைக்கப்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பின் வரிசை அரசியல்வாதிகள் எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்களுடன் இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் ...

Read More »

இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி……?

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை மீண்டும் நாடாளுமன்றத்திற்கு கொண்டு சென்று முக்கிய அமைச்சு பதவியை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்றம் செல்வதற்கு 20வது திருத்தம் வழிவகுக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகிப்பதை தடுக்கும் வகையில் 19வது திருத்தத்தில் காணப்படும் கட்டுப்பாடுகளை 20வது திருத்தம் நீக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 20வது திருத்தம் நடைமுறைக்கு வந்து இரண்டு மூன்று மாதங்களில் ஜயந்த ஹெட்டாகொட என்ற அரசதரப்பு நடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகி ...

Read More »