Tag Archives: ஆசிரியர்தெரிவு

2018ம் ஆண்டு வேதியியல் நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு!

018-ம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பெண் விஞ்ஞானி பிரான்சஸ் அர்னால்ட் உட்பட 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அவ்வகையில், 2018-ம் ஆண்டுக்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டது. வேதியியல் துறை வல்லுநர்களான அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் ஸ்மித், பிரான்சஸ் அர்னால்டு, பிரிட்டனின் கிரிகோரி விண்ட்டர் ஆகிய மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மனிதகுலத்துக்கு உதவும் வகையில் ...

Read More »

மனித புதைகுழியில் ஆடைகளுடன் தொடர்புடைய எந்தவொரு தடயப்பொருளும் கிடைக்கவில்லை!

மன்னார் ‘சதொச’ வளாகத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளபட்டு வந்த மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் இன்று புதன் கிழமை 79 ஆவது தடவையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட நீதவான் ரி.சரவண ராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றது. பல்வேறு கேள்விகள் சந்தோகங்களை ஏற்படுத்தக் கூடிய வகையில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்று புதன்கிழமை அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாடல் ஒன்றை மேற்கொண்டார் குறித்த உரையாடலின் போது, இதுவரை ...

Read More »

கொலை வழக்குப் பதிய கோரிக்கை!

அவுஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கி கர்ப்பிணி பெண் கொல்லப்பட்ட வழக்கில், விபத்துக்கு காரணமான சாரதி மீது கொலை வழக்கு பதிய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளியன்று சிட்னி நகரில் நடந்த சாலை விபத்தில் புதுமண தம்பதிகளான் Katherine Hoang மற்றும் அவரது உறவினர் 17 வயது Belinda Hoang ஆகியோர் கொல்லப்பட்டனர்.</p><p>கேத்ரீனின் கணவர் 27 வயதான Bronco Hoang இந்த விபத்தில் படுகாயமடைந்து கோமா நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மட்டுமின்றி விபத்தை ஏற்படுத்திய 29 வயது இளைஞர் ரிச்சார்ட் மொனானு ...

Read More »

ராகுல் காந்தியை விரும்பிய நடிகை கரீனா கபூர்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இந்தி நடிகை கரீனா கபூர் விரும்பியதாக ஒரு பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். பிரபல இந்தி நடிகை கரீனா கபூர், பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகானை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதிக்கு குழந்தையும் உள்ளது. ஆனால், சயீப் அலிகான் மீது காதல்வயப்படுவதற்கு முன்பு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கரீனா கபூர் விரும்பி உள்ளார். இந்த தகவலை ஒரு பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். அவர், சோனியா காந்தி குடும்பத்துக்கும், கரீனா கபூர் குடும்பத்துக்கும் மிகவும் நெருக்கமானவர். இரு குடும்பங்களைப் ...

Read More »

அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் வடகொரிய தலைவரை சந்திக்கிறார்!

அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ, வரும் ஞாயிறு அன்று வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா பலமுறை அணு குண்டுகளையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்ததால் அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாகி பொருளாதார தடைகளை சந்தித்தது. இதையடுத்து, தென்கொரியா எடுத்த முயற்சியின் பலனாகவே அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் சந்தித்துப் பேசினர். அப்போது கொரிய தீபகற்பத்தை அணு ...

Read More »

கூகுள் மேப்ஸ் புது அப்டேட்!

கூகுள் மேப்ஸ் சேவையில் வழங்கப்பட்டு இருக்கும் புதிய அப்டேட் வாடிக்கையாளர்களுக்கு அன்றாட பயணங்களில் பயன்தரும் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. கூகுள் மேப்ஸ் தளத்தில் அன்றாட பயணங்களை கட்டுப்படுத்தும் புதிய அம்சங்கள் வழங்கப்படுகிறது. புதிய கம்யூட் (commute) எனும் டேப் போக்குவரத்து நெரிசல் குறித்த விவரங்களை நேரலையில் வழங்கும். புதிய அம்சம் கொண்டு ஒரே கிளிக் செய்து நீங்கள் பயணிக்கும் வழித்தடத்தில் உள்ள போக்குவரத்து நிலவரத்தை நேரலையில் தெரிந்து கொள்ளலாம். மேலும் உங்களது பயணம் வழக்கமானதாக இருக்குமா அல்லது கூடுதல் நேரம் தேவைப்படுமா என்ற விவரங்களையும் ...

Read More »

இந்தோனேசியாவை தாக்கியது கருவிகளால் கண்டுபிடிக்க முடியாத அதிசய சுனாமி!

இந்தோனேசியாவை தாக்கிய சுனாமி ஏற்பட்டதை ஏன் கருவிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது விஞ்ஞானிகளை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்தோனேசியாவில் கடந்த 28-ந்திகதி ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் சுனாமி உருவாகி அங்குள்ள பேலு நகரையும் அதை சுற்றி உள்ள பகுதிகளையும் தாக்கியது. இதில் 800 பேர் வரை பலியாகி உள்ளனர். மேலும் பலர் உயிர் இழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. கடலில் சுனாமி ஏற்பட்டால் அதை முன்கூட்டியே கண்டுபிடிப்பதற்காக பல நாடுகள் சேர்ந்து கடலில் பல்வேறு கருவிகளை பொருத்தி உள்ளன. ஆனால் இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட ...

Read More »

மாவீரர் நாள் அனுட்டிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது!- லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க

யுத்தத்தில் உயிர்நீத்த தமிழ் மக்களை நினைவுகூருவதில் பிரச்சினை இல்லையென இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். ஆனால் தமிழீழ விடுதலைப்புலிகளின் மறைவுகளை நினைவுகூர்ந்து நினைவஞ்சலி நிகழ்வுகளை நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “வடக்கில் யுத்தம் நிறைவடைந்து மக்கள் சுமூகமாக வாழ ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூரவேண்டியது அவசியமான ஒன்றாகும். ஆனால் நாட்டில் பெரும் அச்சுறுத்தலாக இருந்த தமிழீழ ...

Read More »

சத்தியாகிரகப் போராட்டத்தை புறக்கணித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு!

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் வவுனியாவில் நேற்று இடம்பெற்ற சத்தியாகிரகப் போராட்டத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் புறக்கணித்துள்ளனர். நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் 12 பேர் தம்மை விடுவிக்குமாறும், தம்மீதான வழக்குகளை துரிதப்படுத்துமாறும் கோரி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் மாவட்ட செயலகம் அருகாமையில் காலை 7 மணிமுதல் 5 மணிவரை சத்தியாகிரகப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. இப்போராட்டத்தில் அரசியல் கைதிகளின் நிலையினை ...

Read More »

கடவுச்சொற்களை கொடுத்தே ஆகவேண்டும்!

அவுஸ்திரேலியாவில் தனிப்பட்டவர்களின் கணனிகள், கைத்தொலைபேசிகளின் கடவுச்சொற்களை விசாரணைகளின் போது கொடுக்கப்பட வேண்டுமென்ற சட்டம் அறிமுகமாகவுள்ளது. விசாரணையின் போது வெளிப்படுத்தாவிட்டால் ஐந்து வருட சிறை மற்றும் 60000 டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் (Peter Dutton) கொண்டுவந்திருக்கும் இந்த சட்டமூலம் மூன்று வாசிப்புக்களின் ஊடாக நிறைவேற்ற வேண்டியதாக உள்ளது. தற்போது இரண்டாவது வாசிப்பு நடைபெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டிய தரப்பினருக்கு தெரியாமல் இரகசியமான குற்றங்களை இழைப்பவர்களிடம் விசாரணைகளை முன்னெடுக்கும் போது அவர்கள் ஒத்துழைக்காவிடின் ...

Read More »