Tag Archives: ஆசிரியர்தெரிவு

டெங்கு காய்ச்சலை குணப்படுத்த கொசு மூலம் நூதன முயற்சி!

டெங்கு காய்ச்சலை கொசுக்கள் மூலம் குணப்படுத்தும் புதிய முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் கொசுக்கள் மூலம் பரவுகிறது. கொசுக்கள் கடிப்பதால் மனிதர்கள் உடலில் பரவும் வைரஸ்கள் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்துகின்றன. உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் டெங்கு காய்ச்சலை குணப்படுத்த இதுவரை உரிய மருந்துகள் கண்டு பிடிக்கபடவில்லை. எனவே அதற்கான பல்வேறு முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலை அதை உருவாக்கும் கொசுக்கள் மூலமே குணப்படுத்தும் புதிய முயற்சியை மேற்கொண்டனர். அதாவது ஆய்வகத்தில் வளர்க்கும் கொசுக்களின் உடலில் மனிதர்களின் உடல் நலனுக்கு ...

Read More »

சிஐடியின் இயக்குநர் இடமாற்றம்! – அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்!

முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள் குறித்து விசாரணைளை மேற்கொண்டுவந்த  சிஐடியின் இயக்குநர் ஸானி அபயசேகர  புதிய அரசாங்கத்தின் கீழ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை என அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்பெரேரா ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச உடனடியாக தலையிட்டு இந்த இடமாற்றத்தை  தடுத்து நிறுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். புதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளமை ஜனாதிபதியின் கௌரவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மிகச்சிறப்பாக செயற்பட்டபோதிலும் சிஐடியின் ...

Read More »

மைத்திரியை சபாநாயகராக்க முயற்சி!

சபாநாயகராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரால் விடுக்கப்படுவதாக தெரிவிக்கப் படுகின்றது. ஜனாதிபதி தேர்தல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்து செயற்படுவது தொடர்பாக பல சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவந்திருந்தன. அந்த பேச்சுவார்த்தைகளின்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராகவும் மஹிந்த ராஜபக்ஷ்வை பிரதமர் வேட்பாளராகவும் நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கை ஆரம்பமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்ப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் முற்றாக ...

Read More »

சஜித்துக்கு ரணில் இடமளிக்க வேண்டும்!

“சஜித் பிரமேதஸ என்பவர் நாட்டில் தெரிவான இளம் தலைவர். அவர் மக்களின் 55 இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஒருவர். எனவே முன்னாள் பிரமதர் ரணில் விக்கிரமசிங்க, சஜித்துக்கு வழிவிட்டு, அவருக்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவியை வழங்குவதற்கு இடமளிக்க வேண்டும் என்றுக் கேட்டுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரமான இரா.சம்பந்தன், அதேவே, ஜனநாயக மரபாகும் என்றும் வலியுறுத்தினார். எதிர்க்கட்சித் தலைவரை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, தற்போதைய அரசாங்கத்தின் நிலைவரம் குறித்து கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்துரைத்த அவர், நாட்டில் தற்போது ...

Read More »

புதிய அமைச்சரவையின் முழு விவரம்!

புதிய அரசாங்கத்தின்அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முன்னிலையில் இன்று (22) காலை பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். இந்நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, நிதி, பொருளாதாரம், கொள்கை அபிவிருத்தி, புத்தசாசனம், கலாசாரம், மத விவகாரங்கள், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீட்டு வசதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். நிமல் சிறிபால டி சில்வா – நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்த்திருத்தம். ஆறுமுகன் தொண்டமான் – சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு. தினேஷ் ...

Read More »

செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்தால் பைத்தியம் பிடிக்கும்!

செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்ந்தால் டிமென்சியா எனும் மனநோய் ஏற்படலாம் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். சூரியனிலிருந்து நான்காவது கோளாக உள்ளது செவ்வாய். இதன் மேற்பரப்பில் காணப்படும் இரும்பு ஆக்சைடு இக்கோளைச் செந்நிறமாகக் காட்டுகிறது. இதனாலேயே இதற்குச் செவ்வாய் என்ற பெயர் ஏற்பட்டது. செவ்வாய் கிரகத்தை பற்றி வளர்ந்த நாடுகள் அனைத்தும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. பல்வேறு செயற்கைக்கோள்களை அனுப்பி கிரகத்தில் உள்ள தட்பவெப்ப நிலை, நீர், வாயுக்கள் மற்றும் புவியியல் பண்புகள் போன்றவற்றை ஆய்வு செய்து வருகின்றன. செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பும் முயற்சியில் ...

Read More »

பத்தாண்டுகளாக கூரையில் வாழ்ந்த மலைப்பாம்பு!

சீனாவிலுள்ள அழகு நிலைய உட்கூரையில் 10 ஆண்டுகளாக வசித்து வந்த மலைப்பாம்பு கூரையை பிளந்துக்கொண்டு கீழே விழுந்த சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. சீனாவின்  குவாண்டாங் மாகாணத்தில் உள்ள போசன் நகரில் பிரபலமான அழகு மற்றும் உடல்நல ஆரோக்கிய நிலையம் ஒன்று உள்ளது. குறித்த நிலையத்தின் உட்கூரையின் மீது கடந்த வாரம் ஏதோ சலசலப்பு கேட்டது. சத்தம் அதிகமானதால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். திடீரென கூரை உடைந்த போது, 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று கீழே விழுந்த போது அங்கிருந்த ஊழியர்கள் அலறியடித்து ஓடினர். ...

Read More »

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! 63 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌபீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 63பேரின் விளக்கமறியல் டிசெம்பர்  மாதம் 05ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. நுவரெலியாவில் உள்ள தேசிய தௌபீக் ஜமாத் தலைமைகத்தில் ஆயுத பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.   இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது டிசெம்பர் மாதம் ...

Read More »

ஓமந்தையில் வெடிபொருட்கள்!

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதர் பனிக்கர் மகிழங்குளம் பகுதியில் இருந்து பழுதடைந்த நிலையில் வெடிபொருட்களை மீட்டுள்ளதாக ஓமந்தை காவல் துறையினர்  தெரிவித்தனர். நேற்றையதினம் குறித்த பகுதியில் உள்ள தனியார் காணியினை துப்பரவாக்கிய காணியின் உரிமையாளர்கள் மண்ணில் புதையுண்ட நிலையில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்தனர். குறித்த விடயம் தொடர்பாக ஓமந்தை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த காவல் துறை  பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் நீதி மன்ற உத்தரவினை பெற்று இன்றையதினம் அவற்றை அகற்றவுள்ளதாக தெரிவித்தனர். குறித்த ...

Read More »

சிறிலங்கா பிரதமராகிறார் மஹிந்த ராஜபக்ஷ!

மஹிந்த ராஜபக்ஷ சிறிலங்காவின் பிரதமராக நாளை பிற்பகல் 1.00 மணியளவில்  சிறிலங்கா ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்கவுள்ளார்.   அத்துடன் பிரதமராக பதவியேற்றதும் மாலை 3.30 மணியளவில் பிரதமர் அலுவலகத்தில் தனது கடமைகளையும் உத்தியோகபூர்வமாக பெறுப்பேற்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் 15 பேர் கொண்ட இடைக்கால அரசாங்கத்திற்கான அமைச்சர்களின் நியமனமும் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Read More »