Tag Archives: ஆசிரியர்தெரிவு

அரசியல் பாதிப்புக்குள்ளான வழக்குகளை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு!

அரச ஊழியர்களை அரசியல் ரீதியாக துன்புறுத்திய அனைத்து வழக்குகளையும் விசாரணை செய்ய மூன்று பேர் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விசாரணை ஆணைக்குழுவில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன, மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி தயா சந்திரசிறி ஜெயதிலக மற்றும் முன்னாள் காவல் துறை  மா அதிபர்  சந்திர பெர்னாண்டோ ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இந்த விசாரணை ஆணைக்குழுவுக்கு 2015 ஜனவரி 08 முதல் 2019 நவம்பர் 16 ஆம் திகதிகளுக்கிடையிலான காலக் ...

Read More »

கிரீஸின் அதிபராக முதல் முறையாக பெண் ஒருவர் தேர்வு!

கிரீஸின் அதிபராக பெரும்பான்மை ஆதரவுடன் நேற்று (புதன்கிழமை) 63 வயதான கேத்ரினி தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிர்க் கட்சி எம்பிக்கள் ஆதரவுடன் சுமார் 261 பேர் எகடெரினி ஆதரவாக வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து கிரீஸுன் முதல் பெண் அதிபராகி உள்ளார் கேத்ரினி . இதனை கிரீஸின் பிரதமர் கிரியாக்கோஸ் மிட்சோடாகிஸ் தேசிய தொலைகாட்சியில் அறிவித்தார். அதில் அவர் பேசியதாவது, ” அதிபராக பெண் ஒருவரை தேர்ந்தெடுத்து நமது பாரம்பரியத்தை உடைத்துள்ளளோம். மேலும் அவர் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவர் அல்ல. கிரீஸின் எதிர்காலத்தை திறக்க நேரம் வந்துவிட்டது” ...

Read More »

அவுஸ்திரேலியாவுக்கு காத்திருக்கும் மற்றுமொரு ஆபத்து?

அவுஸ்திரேலியாவில் இந்த ஆண்டு ஏற்கனவே காட்டுத் தீ, வெள்ளம் மற்றும் ஆலங்கட்டி மழை ஆகியவற்றினால் பாதிப்படைந்துள்ள நிலையில் தற்போது ஓர் வகையான விசத் தன்மையுடைய சிலந்திகள் (Funnel-web spiders) குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு அவுஸ்திரேலியாவின் ஈரமான வனப் பகுதியில் உள்ள இந்த சிலந்தி வகைகள் விரைவாக செயற்படக் கூடிய மிகவும் நச்சுத் தன்மை கொண்டவை என நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள சோமர்ஸ்பியை மையமாகக் கொண்ட அவுஸ்திரேலிய ஊர்வன பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். என்ற இந்த சிலந்திகளானது உலகின் ...

Read More »

யாழ்.பல்கலைகழக மாணவியை கழுத்தறுத்து கொலை செய்த இராணுவச் சிப்பாய்!

யாழ்., பண்ணை கடற்கரையில் யாழ். பல்கலைக்கழக சிங்கள மாணவி ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்றைய தினம் மதியம் மக்கள் நடமாட்டம் மிக்க பண்ணை கடற்கரையில் இடம்பெற்றுள்ளது. கொலையாளி பரந்தன் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் எனவும், குறித்த பெண்ணுக்கும் குறித்த இராணுவ சிப்பாய்க்கும் இடையில் காதல் இருந்துள்ள நிலையில் இருவரும் அந்த பகுதியில் நீண்டநேரம் உரையாடி கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் எனவும் ஆரம்ப ...

Read More »

வடபகுதியில் இதுவரை 21 ஆயிரம் அபாயகர வெடிபொருட்கள் அகற்றல்!

வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஈடுபடும் ஸார்ப்.நிறுவனமானது இதுவரை 969,670 சதுரமீற்றர் பரப்பளவில் இருந்து 21,173 அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக அந்த நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்தார். இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2020 ஜனவரி ;மாதம்; 21 ஆம் திகதி; வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் ...

Read More »

ஆயும் தரித்த படையினர் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு பணியில்!

பொதுமக்கள் மத்தியில் அமைதியை தொடர்ந்து பேணுவதற்காக ஆயும் தரித்த படையினர் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்துவது தொடர்பான உத்தரவை தொடர்ந்து நீடிக்கும் அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் இன்று (22) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது. கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் நீக்கப்பட்டதையடுத்து,  பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தின் கீழ், ஜனாதிபதியால் பாதுகாப்பு நடவடிக்கையில் முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதற்கமைய நாடு முழுவதிலும் உள்ள ...

Read More »

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – ஆஷ்லே பார்டி, ஒசாகா 3-வது சுற்றுக்கு தகுதி!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஷ்லேவும் ஜப்பானை சேர்ந்த ஒசாகாவும் 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். கிராண்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் முதல் நிலை வீராங்கனையும், கடந்த ஆண்டு பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றவருமான ஆஷ்லே (ஆஸ்திரேலியா) 2-வது சுற்றில் சுலோவெனியாவை சேர்ந்த ஹெர்சாக்கை எதிர் கொண்டார். இதில் ஆஷ்பார்டி 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். 3-வது வரிசையில் ...

Read More »

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தோல்வியில் முடிய நானே காரணம்!

நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் கொண்டுவரப்பட்ட எம்.சி.சி மற்றும் சோபா உடன்படிக்கைகளை மட்டுமல்லாது பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தையும் முழுமையாக எதிர்த்த நபர் நானே. அதனால் தான் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தோல்வியில் முடிந்தது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த சபை முதல்வர் தினேஷ் குணவர்தன :- ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் தான் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்ற சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டது. இதுதான் உண்மையாகும், இதன் காரணமாகவே மக்கள் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு அதிகாரத்தை வழங்கினர். ...

Read More »

69 குழந்தைகளை பெற்றெடுத்த பெண் – பதிவுகளை நம்பலாமா?

சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படத்தில், பெண் ஒருவர் 69 குழந்தைகளை பெற்றெடுத்ததாக கூறப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பரவும் குழு புகைப்படம் ஒன்று சுவாரஸ்ய உலக சாதனையை விளக்கும் வகையில் பகிரப்படுகிறது. புகைப்படத்தில் இருப்பவர்கள் அனைவரையும் ஒரே பெண் தான் பெற்றெடுத்தார் என கூறப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் பக்கம் ஒன்றில், “ஒரே பெண்மணிக்கு பிறந்த அதிகளவு குழந்தைகள் எண்ணிக்கை 69. ரஷ்யாவை சேர்ந்த திருமதி வசில்வேயா என்பவர் 16 இரட்டை குழந்தைகள், ஏழு முறை ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளையும், நான்கு முறை ஒரே பிரசவத்தில் நான்கு ...

Read More »

காயம் காரணமாக நியூசிலாந்து தொடரில் இருந்து தவான் விலகல்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியின்போது ஏற்பட்ட காயம் குணமடையாததால் நியூசிலாந்து தொடரில் இருந்து விலகியுள்ளார் தவான். இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஷிகர் தவான். பெங்களூருவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியின்போது பீல்டிங் செய்தபோது இடது கை தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதன்பிறகு பீல்டிங்கும் செய்யவில்லை. பேட்டிங்கும் செய்யவில்லை. ஸ்கேன் பரிசோதனை அறிக்கையை பார்த்த பின்னர்தான் அவரது காயத்தின் வீரியம் குறித்து தெரியவரும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று நியூசிலாந்து தொடருக்கான இந்திய டி20 அணி ஆக்லாந்து புறப்பட்டது. ...

Read More »