Tag Archives: ஆசிரியர்தெரிவு

இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் பிரஜை ஆஸி.யில் கைது!

இலங்கையைச் சேர்ந்த 25 வயதுடைய முஸ்லிம் இளைஞர் ஒருவர் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந் நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.   இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு கொண்டு பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவரை கைதுசெய்துள்ளதாகவும் அந் நாட்டு செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.

Read More »

அவர் பேசிய விதமே, இது தான் அவரின் கடைசி பேச்சு என்பதை எனக்கு உணர்த்தியது !

அவுஸ்திரேலியாவில் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட காதலன், இறப்பதற்கு முன்னால் காதலிடம் பேசிய விடயம் மனதை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது. மைக்கேல் ஓவென்ஸ் (23) என்பரின் தோழியாக இருந்தவர் ரோசி. மைக்கேலின் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த சமயத்தில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு ரத்த புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனையில் மைக்கேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருடன் ரோசியும் உடனிருந்த நிலையில் திடீரென அவரிடம் மனம் விட்டு பேசினார் மைக்கேல். ரோசியை தீவிரமாக காதலிப்பதாகவும், தன்னை திருமணம் ...

Read More »

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் வடக்கு கிழக்கில் போராட்டங்கள்!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படும் நிலையில், வடக்கு கிழக்கில் இருவேறு போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழ்ப்பாணத்திலும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அம்பாறையிலும் இருவேறு போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர். அத்தோடு, இம்முறை சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட மனித உரிமைசார் அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ள வாகன தொடரணி நேற்று முன்தினம் கொழும்பில் தனது பயணத்தை ஆரம்பித்திருந்தது. இன்று குறித்த பேரணி யாழ்ப்பாணம் சென்றடையவுள்ளதோடு, அங்கு மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. யுத்த காலத்திலும் ...

Read More »

அமெரிக்க அரசாங்கத்தின் ஆலோசகர் பதவி விலகுகின்றார்!

வெள்ளை மாளிகையில் அரசின் ஆலோசகராக பணிபுரிந்து வரும் டான் மெக்கான் விரைவில் வெளியேறவுள்ளார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் திகதி நடந்த ஜனாதிபதி தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டிரம்ப் வெற்றி பெறவும், ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்கிய ஹிலாரி கிளிண்டன் தோல்வி அடையவும் ரஷியா நேரடியாக தலையிட்டது என்ற புகார் எழுந்தது. இது தொடர்பாக ராபர்ட் முல்லர் தலைமையிலான குழுவின் சிறப்பு விசாரணை நடைபெற்று வருகிறது. நேர்மையான அதிகாரி என்ற பெயர் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் குடியேற வருபவர்களை புறநகர் பகுதிகளை நோக்கி அனுப்புவதற்கு ஏதுவான சட்டம்!

ஆஸ்திரேலியாவில் புதிதாக குடியேறுபவர்களை regional areas-புறநகர் பகுதிகளில் குடியமர்த்தும்வகையிலான சட்டமுன்வடிவு நாடாளுமன்றம் மீண்டும் கூடும்போது புதிய அமைச்சரவை முன் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடத்தில் மாத்திரம் ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்த சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குடிவரவாளர்களில் 87 சதவீதமானவர்களுக்கும் அதிகமானவர்கள் மெல்பேர்ன் மற்றும் சிட்னி நகர் பிரதேசங்களை அண்டியே தங்களது இருப்பிடங்களை தெரிவு செய்திருக்கிறார்கள் என்று தரவுகள் மூலம் தெரியவந்திருப்பதாக குடிவரவு அமைச்சு தெரிவித்திருந்தது. எனவே ஆஸ்திரேலியாவின் பிரதான நகரங்களை அண்டிய பகுதிகளில் புதிய குடிவரவாளர்கள் பெருமளவில் குடியேறுவதால் ஏற்பட்டுள்ள சனத்தொகை வளர்ச்சியை ...

Read More »

அட்மிரல் ரவிந்திர விஜயகுணரத்னவை கைது செய்ய உத்தரவு!

நேவி சம்பத் என்றழைக்கப்படும், கடற்படையின் முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டர் பிரசாத் சந்தன ஹெட்டி ஆராச்சி என்பவரே, வெளிநாட்டுக்கு தப்பிச்செல்வதற்கு முயற்சித்தாரெனக் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாதுகாப்பு பணியாளர்களின் பிரதானி, அட்மிரல் ரவிந்திர விஜயகுணரத்னவை கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு (சி.ஐ.டீ), நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More »

அணு ஆயுதங்களை அழித்தால் மட்டுமே வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை!

அணு ஆயுதங்களை அழித்தால் மட்டுமே வடகொரியாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தும் என அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரது சந்திப்பு கடந்த ஜூன் மாதம் 12-ம் திகதி சிங்கப்பூரில் நடைபெற்றது. அப்போது, அணு ஆயுத சோதனை மையங்கள் விரைவில் அழிக்கப்படும் என கிம் ஜாங் அன் டிரம்பிடம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, வடகொரியா அணு ஆயுத சோதனை மையங்களை அழித்து வந்தது. ஆனாலும், வடகொரியா அரசு தற்போதும் ...

Read More »

அரை நிமிடத்தில் பல் துலக்க முடியுமா?

சுத்தமாக பற்களை துலக்க, 3 நிமிடங்களாவது தேவை. ஆனால், 30 வினாடிகளில் பற்களை சுத்தம் செய்ய முடியும் என்கிறது, ‘சீஸ்’ (Chiiz) நிறுவனம். இது வடிவமைத்துள்ள சீஸ் என்ற பல் துலக்கும் கருவி, பார்ப்பதற்கு பாட்டியின் பல் செட் போலவே இருக்கிறது. சீஸ் பிரஷின் மேல் பற்பசையை போட்டு, மேல், கீழ் பற்களில் வைத்து லேசாக கடித்துக்கொண்டு, ‘ஆன்’ செய்தால் போதும். நடுவே இருக்கும் ஒலி அலைகளை எழுப்பும் மோட்டார் இயங்க ஆரம்பிக்கும். பிரஷின் நார்கள் அதிர்ந்து, நுரை கிளம்பி பற்களின் இண்டு இடுக்குகளை ...

Read More »

சதுப்பு நில பகுதியில் சிக்கியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்!

அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைவதற்கான முயற்சியின் போது குயின்ஸ்லாந்தின் முதலைகள் நிறைந்த சதுப்பு நில பகுதியில் சிக்கிய சட்டவிரோத குடியேற்றவாசிகளை கண்டுபிடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதலைகள் நிறைந்த பகுதியில் சிக்கிய படகில் வியட்நாமை சேர்ந்த 17 சட்டவிரோத குடியேற்றவாசிகள் காணப்பட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. படகின் தலைமை மாலுமி மற்றும் அவரின் சகாவை காவல்துறையினர் அழைத்துச்செல்வதை பார்த்ததாக ஏபிசியின் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் எதிர்ப்பு எதுவுமின்றி காவல்துறையினரின் வாகனத்திற்குள் சென்றனர் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். படகு கரையிலிருந்து 200 மீற்றர் தொலைவில் நீரில் மூழ்கிய நிலையில் ...

Read More »

எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ் மாவட்டத்தில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம்!

சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ் மாவட்டத்தில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. வடக்கு மாகாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மேற்கொள்ளப்படும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள். வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி ஒரு வருடங்களை கடந்து அவர்களின் உறவுகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர்சியான போராட்டம் செய்து கொண்டு இருக்கிறார்கள். சர்வதேசம் நீதியை பெற்று தர வேண்டும் என கோரி தமது போராட்டத்தை பல்வேறு ...

Read More »