Tag Archives: ஆசிரியர்தெரிவு

கிளி. வெள்ளை வேட்டியின் கறுப்பு சட்டைக்காரர்கள் போராட்டத்தை குழப்ப முயன்றனர்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரொருவரின் ஆதரவாளர்கள் என நம்பப்படும் கறுப்பு சட்டை அணிந்த சிலர் போராட்டத்தினை குழப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டத்துடன், ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல்களை விடுத்துள்ளனர். கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை போராட்டத்தை முன்னெடுத்தனர். போராட்டத்திற்கு தலைமை தாங்க அனுமதிக்கவில்லை குறித்த போராட்டம் ஆரம்பமாக முன்னர் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் போராட்டம் ஆரம்பமாகும் இடத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் சமூகம் தந்து, போராட்டத்திற்கு வருகை தந்த ஈ.பி.ஆர்.எல்.எப், கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் ...

Read More »

‘தாமரை மொட்டு’ ராஜபக்சவின் குடும்ப கட்சி!

‘தாமரை மொட்டு’ பொதுமக்கள் கட்சி அன்றி அது ராஜபக்ச குடும்ப கட்சியாகும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்யிட வைப்பது ராஜபக்ச குடும்பத்தில் எந்த ராஜபக்சையை என்பதே பிரச்சினையாகும். என தொழில் மற்றும் தொழிற்துறைத் தொடர்புகள் இராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்தார். பல்லேகலையில் இடம் பெற்ற கரப்பந்தாட்ட மைதான திறப்பு விழாவிலே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது- இன்று ஏற்பட்டுள்ள புதிய பிரச்சினை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்யிட வைப்பது ராஜபக்ச குடும்பத்தில் எந்த ராஜபக்சையை என்பதே பிரச்சினையாகும். கோத்தபாய ராஜபக்ச ...

Read More »

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் இன்று திங்கட்கிழமை (25) காலை கவனயீர்ப்பு போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.   ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் இன்று (25) ஆரம்பமாகவுள்ள நிலையில் அதன் கவனத்தை ஈர்க்கும் நோக்கில், காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அளித்திருந்த வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றத் தவறியுள்ளதை வெளிப்படுத்தியும், தமக்கு இன்னமும் நீதி வழங்கப்படாததைக் கண்டித்தும், இலங்கைக்கு இனிமேலும் கால அவகாசம் வழங்க வேண்டாமென தெரிவித்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு ...

Read More »

வெனிசுலா அதிபர் மதுரோவின் நாட்கள் எண்ணப்படுகின்றன! -அமெரிக்கா

வெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவின் நாட்கள் எண்ணப்படுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். வெனிசுலாவில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அரசியல் குழப்பமும் தொடர்ந்து நீடிக்கிறது. வெனிசுலாவின் இடைக்கால அதிபராக தன்னை அறிவித்துக்கொண்ட ஜூவான் குவைடோவுக்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்ததால், அந்த நாடுகளிடம் இருந்து மனிதாபிமான உதவிகளை பெற அதிபர் நிகோலஸ் மதுரோ மறுக்கிறார். ஆனால் உதவி பொருட்களை கொண்டு வரும் முயற்சியில் ஜூவான் குவைடோ ஈடுபட்டுள்ளார். ஆனால் உணவுப்பொருட்கள் கொண்டு வரும் வாகனங்கள் வெனிசுலாவுக்குள் நுழையாத படி நாட்டின் ...

Read More »

யுத்தத்தில் குற்றங்கள் இடம்பெறவில்லையாம்!

முப்பது ஆண்டுகால யுத்தத்தை மூன்று ஆண்டுகளில் முழுமையாக முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்ற ஒரே நோக்கம் மட்டுமே எமக்கு இருந்தது. இந்த யுத்தத்தில் தவறுகள் இடம்பெறவில்லை. அவ்வாறு தவறுகள் இடம்பெற்றிருப்பின் யுத்தம் முடிவுபெற்றிருக்காது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். மேலும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டவர எமக்கு விமானங்கள் தேவைப்பட்ட காரணத்தினால் தான் “மிக்” உடன்படிக்கையை செய்தோம் எனவும் அவர் குறிப்பிட்டார். எலிய அமைப்பின் மாநாட்டில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டார்.

Read More »

இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை தணிக்க உதவுங்கள்!

காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே எழுந்துள்ள பதற்றத்தை தணிக்க உதவுமாறு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு பாகிஸ்தான் கடிதம் எழுதியுள்ளது. காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் துணை ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் பொறுப்பேற்றது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்து இருப்பதால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நீடித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவின் இந்த பதிலடி எச்சரிக்கை பாகிஸ்தானுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்து உள்ளது. இந்தியாவின் பதிலடி எவ்வாறு இருக்குமோ? என்ற அச்சமும் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் வீட்டுக்கடன்களை வழங்கி பாரிய சிக்கலில் சிக்கிய வங்கி!

அவுஸ்திரேலியாவில் Westpac வங்கிக்கு எதிராக class action எனப்படும் கூட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடன்பெறுவதற்கு தகுதியில்லாத வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக்கடன்களை வழங்கியது தொடர்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் Westpac வங்கி வழங்கிய வீட்டுக்கடன்கள் தொடர்பாகவே இந்த வழக்கு தொடரப்படவுள்ளது. கடனை மீளச்செலுத்தமுடியாத வாடிக்கையளார்களுக்கு வீட்டுக்கடன்களை வழங்கியதன் மூலம் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு கடன் சுமையை ஏற்படுத்தியது. அது மட்டுமல்லாமல் வங்கி வரைமுறைகளை மீறியுள்ளதாகவும் இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் ...

Read More »

`20 மணி நேர தூக்கம்; நடு இரவில் மட்டுமே உணவு!’

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ளது ரிவர்சைடு என்ற நகரம். இங்கு டேவிட் ஆலென் டுர்பின் (57) லூயிஸ் அன்னா டுர்பின் (50) என்ற தம்பதி வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களுக்கு 13 குழந்தைகள். கடந்த 2011-ம் ஆண்டுக்கு முன் வரை தன் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கும் புகைப்படங்கள், நிகழ்ச்சிகள், விழாக்கள் போன்றவற்றை டேவிட் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு வருவார். அந்தக் குடும்பத்தில் இருப்பவர்கள் அருகில் இருக்கும் யாருடனும் தொடர்பில் இல்லாமல் இருந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த வருடம் அவர்களின் 13 குழந்தைகளில் ஒரு பெண் வீட்டை ...

Read More »

அவுஸ்திரேலிய முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் எடுத்த முடிவு!

அவுஸ்திரேலியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், அரசாங்கத்தில் இரண்டுமுறை உயரிய பொறுப்பு வகித்தவருமான ஜுலி பிஷப், தனது அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கவுள்ளதாக கூறியுள்ளார் நீண்ட காலமாக நிலவிவந்த வதந்திகளுக்கு முடிவு கட்டும் வகையில் தனது இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஜுலி பிஷப் தெரிவித்துள்ளார். இதேவேளை, லிபரல் கட்சியின் முதலாவது பெண் துணைத் தலைவராகவும், அவுஸ்திரேலியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பணியாற்றியமையை எண்ணி பெருமை அடைவதாகவும் கூறியுள்ளார். ஜுலி பிஷப், அவுஸ்திரேலியாவில் ...

Read More »

ஜனநாயகத்தைப் பாதுகாக்க கட்சி பேதமின்றி செயற்பட வேண்டுமாம்!

19வது அரசியலமைப்புக்கு அமைய ஜனநாயகம் பாதுகாக்கப்படுகின்றதா என்பது தொடர்பில் தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக  சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். கட்சி பேதமின்றி அனைவரும் ஜனநாயகத்தைப் பாதுகாக்க செயற்பட வேண்டும் என்று சிறிலங்கா பிரதமர் கூறியுள்ளார். ஆனமடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைக் கூறியுள்ளார்.

Read More »