யுத்தத்தில் குற்றங்கள் இடம்பெறவில்லையாம்!

முப்பது ஆண்டுகால யுத்தத்தை மூன்று ஆண்டுகளில் முழுமையாக முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்ற ஒரே நோக்கம் மட்டுமே எமக்கு இருந்தது. இந்த யுத்தத்தில் தவறுகள் இடம்பெறவில்லை. அவ்வாறு தவறுகள் இடம்பெற்றிருப்பின் யுத்தம் முடிவுபெற்றிருக்காது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டவர எமக்கு விமானங்கள் தேவைப்பட்ட காரணத்தினால் தான் “மிக்” உடன்படிக்கையை செய்தோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எலிய அமைப்பின் மாநாட்டில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டார்.