கொட்டுமுரசு

நில அபகரிப்பு தொடர்பில் நம்பகத்தன்மையான ஆவணப்படுத்தலும் ஆய்வும் மிக அவசியம்

நில அபகரிப்புக்கு எதிராக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தமிழ் மக்களின் நில அபகரிப்புக்கு எதிரான பல்வேறு வடிவங்களிலுமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நம்பகத்தன்மையான நவீன தொழில்நுட்ப முறைகளில் அமைந்த ஆவணப்படுத்தல் பொறிமுறையும் ஆய்வும் அவசியம் என்று பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான நீதியரசர் விக்னேஸ்வரன் வலியுறுத்தி இருக்கிறார். தமிழ் கட்சிகளுக்கு இடையிலான காணி அபகரிப்பு பற்றிய கருத்துப் பரிமாற்றம் திருநெல்வேலி இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று ஞாயிறுக்கிழமை நடைபெற்றபோது உரையாற்றியபோது விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார். “சர்வதேச தராதரங்களுக்கு அமைவான ஆவணப்படுத்தல் மற்றும் ஆய்வு செயற்பாடுகளை ...

Read More »

சகல கைதிகளும் சமமானவர்கள் அல்ல: வர்க்கபேதம், இனத்துவம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம்

நான் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இருந்தபோது சந்தித்த கனகசபை தேவதாசன் 64 வயதுடைய சிறைக் கைதி ஆவார். அவர் கைது செய்யப்பட்டு 12 ஆண்டுகள் கடந்து விட்டன. அந்தக் காலப்பகுதியில்; பத்து வருடங்களுக்கு மேல் அவர் சிறைச்சாலையில் கழித்து விட்டார். 2021 ஜனவரி 6ஆம் திகதி தேவதாசன் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். தமது வழக்கில் துரிதப்படுத்துவதற்காக அதிகாரிகளுடன் பேசப் போவதாக சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் உறுதியளித்ததை தொடர்ந்து ஜனவரி 16ஆம் திகதி அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டார். தாம் மூன்று வார காலம் தற்காலிகமாக உண்ணாவிரதப் ...

Read More »

நினைவுத் தூபி தகர்ப்பு கற்றுத் தந்த பாடங்கள்!

அதிரடியாக வருகின்ற புல்டோசர் வாகனம் ஓசைபடாமல் யாழ். பல்கலைக்கழகத்துக்குள் நுழைகின்றது. அடுத்த கனமே அங்கு நுழைவாயிலுக்கு அருகில் முள்ளிவாய்க்காலில் இறந்த தமது உறவுகளை நினைவு கூருவதற்காக அமைக்கப்பட்ட தூபியை ஐந்து- ஆறு நிமிடங்களில் இருந்த இடமே தெரியாது தகர்த்தெறிகின்றது அந்த புல்டோசர் இயந்திரம். இந்த தகவல்கள் பல்கலைக்கழகத்தில் இருந்தவர்களால் வெளியில் சொல்லப்பட விரைந்து வந்த மாணவர்கள், அயலவர்கள், அரசியல்வாதிகளுக்கு பேரதிர்ச்சி. அங்கு இருந்த நினைவுத் தூபியைக் காணவில்லை. களத்தில் இருந்த பொலிசாரிடம்  தகர்ப்புக்கு நியாயம் கேட்டனர் மாணவர்கள். துணை வேந்தர் இது மேலிடத்தில் இருந்து ...

Read More »

வாக்குறுதி நிறைவேறுமா?

“யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் உண்மையாகவே, உணர்வு ரீதியாக தனது தவறை உணர்ந்து கொண்டு, அடிக்கல் நாட்டினாரா அல்லது, நிலைமையின் தீவிரத்தை குறைப்பதற்காக, இந்தப் பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்வதற்காக பாசாங்கு செய்தாரா?” போர் முடிந்து விட்டது எல்லா மக்களும் ஒன்றாக இணைந்து வாழ வேண்டும் என்ற சூழலில் நினைவுச் சின்னங்கள் தேவையில்லை, அமைதிச் சின்னங்கள் தான் தேவை என்ற கருத்து இருக்குமானால், வடக்கு, கிழக்கில் ஏன் போர் நினைவுச் சின்னங்களை அரசாங்கம் வைத்திருக்கிறது? முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இடித்து அழித்து விட்டு, அது தூபி அல்ல, ...

Read More »

பேரறிவாளன் விடுதலையில் மாநில உரிமையைத் தக்கவைக்குமா தமிழக அரசு?

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக, பல காலமாகப் பேசப்பட்டுவருகிறது. அரசமைப்பு உறுப்பு 161-ன்படி தன்னை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி பேரறிவாளன் அளித்த மனுவைத் தமிழக அரசு பரிசீலனை செய்யலாம் என கடந்த 2018-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 6-ம் தேதி அன்று அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற மூவர் அமர்வு உத்தரவிட்டது. இது தொடர்பாக மாநில அரசு என்ன நடவடிக்கை மேற்கொண்டது என இரண்டு ...

Read More »

வெகுஜன எழுச்சிக்கு வித்திட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர் போராட்டம்

யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைக்கப்பட்டிருந்த இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின்  நினைவுத்தூபி இரவோடிரவாக இடிக்கப்பட்டமையும் அதை நேரடியாக காணொளி மூலம் பார்த்ததால் ஏற்பட்ட எல்லை மீறிய துயரங்களும் வார்த்தைகளால் அளவிட முடியாத நிஜங்களாகும். மேற்படி சம்பவம் இடம்பெற்ற அந்த கணப்பொழுதில் இருந்தே அதனை கண்டித்து திக்கெட்டும் பரவிய போராட்ட உணர்வலைகள் கவனத்தைப் பெற்ற ஒரு சம்பவமாக மாறி இருந்தது. தொடர்ச்சியாக தனக்கு வழங்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாகவும் இறுதியில் உங்களால் முடியாவிட்டால் நாங்கள் அந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிவரும் என்ற இறுதி எச்சரிக்கையின் பின்னரே ...

Read More »

டிரம்பினை பதவியிலிருந்து நீக்க முடியுமா ? அரசியலில் இருந்து முற்றாக தடை செய்ய முடியுமா?

டொனால்ட் டிரம்பிற்கு எதிராக மீண்டும் அரசியல் குற்றப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்க வரலாற்றில் இரண்டு தடவைகள் அரசியல் குற்றப்பிரேரணை நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதியாக டிரம்ப் மாறியுள்ளார். கடந்த வாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வன்முறைகளை தூண்டினார் என அவருக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அமெரிக்க செனெட்டில் டொனால்ட் டிரம்ப் குடியரசுக்கட்சியின் ஜனாதிபதி விசாரணையை எதிர்கொள்கின்றார் அரசியல் குற்றப்பிரேரணை என்றால் என்ன? விசாரணைகளை நடத்துவதற்கதாக அமெரிக்க காங்கிரசில் குற்;றச்சாட்டுகளை கொண்டுவருவதே அரசியல் குற்றப்பிரேரணை என அழைக்கப்படுகின்றது. இது குற்றவியல் நடவடிக்கையில்லை அரசியல் நடவடிக்கை என்பதுமுக்கியமானது. தேசத்துரோகம்,இலஞ்சஊழல் அல்லது ...

Read More »

படிப்படியாக பறிபோகும் தமிழர் உரிமைகள்

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் வருகைக்குப்பின் மறுபடியும் இலங்கை இனப்பிரச்னைக்கான தீர்வு தொடர்பில் மாகாண சபைகளின் மீது கவனம் குவிந்திருக்கிறது. மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்கும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக சில தினங்களாக பேசப்படுகின்றது. ராஜபக்சக்களின் இரண்டாவது ஆட்சி இம்மாதத்தோடு ஓராண்டைப் பூர்த்தி செய்கிறது. இந்த ஓராண்டுக் காலகட்டத்தில் மாகாண சபைகள் தொடர்பில் ராஜபக்சக்களும் அவர்களுக்கு நெருக்கமான அமைச்சர்களும் தெரிவித்துவரும் கருத்துகளைத் தொகுத்துப் பார்த்தால், அவர்கள் மாகாண சபைக் கட்டமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற ஒரு தோற்றமே கிடைக்கும். அதிபர் பதவியேற்ற புதிதில் இந்தியாவுக்கு விஜயம் ...

Read More »

அமெரிக்க வன்முறையின் வரலாறு

கேப்பிட்டலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தூண்டியதைவிட ரத்தக்களரி நிரம்பிய, மிகவும் நாசகாரத்தன்மை கொண்ட பல அத்தியாயங்களைக் கொண்டிருப்பது அமெரிக்க வரலாறு. அமெரிக்காவின் பயங்கரமான கடந்த காலத்தைப் பற்றிய அறியாமையை வரலாற்றாசிரியர்கள் டபிள்யு.ஈ.பி. டுபோய்ஸ், ஜான் ஹோப் ஃப்ராங்க்ளின், ரிச்சர்டு ஹோஃப்ஸ்டேட்டர் போன்றோர் நன்றாக ஆவணப்படுத்தியுள்ளனர். இந்த அறியாமை தற்போதைய நிகழ்வுக்குப் பிறகு வெளிப்படையாகத் தெரிந்தது. இந்த நாசகாரச் சம்பவமானது வழக்கத்துக்கு மாறான ஒன்றுதான் என்று தொலைக்காட்சியில் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். வேண்டுமென்றே மறக்கும் இந்தச் செயல் – அமெரிக்க அறியாமை என்ற தொன்மத்துடன் சேர்ந்து ...

Read More »

போரின்போதும் அதன் பின்னரும் என்ன நடந்தது?

இலங்கையின் ஐக்கிய நாடுகள் வதிவிட பிரதிநிதி ஹெனா சிங்கரைச் சந்தித்த யாழ். மாவட்ட எம்.பி.யும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் அவருடன் விரிவான பேச்சுக்களை நடத்தியுள்ளார். நேற்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையின் வதிவிட பிரதிநிதி ஹெனா சிங்கரின் அழைப்பின் பேரில் விக்னேஸ்வரன் அவரின் அலுவலகத்திற்கு சென்று சந்தித்தார். அப்போது பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. போரின் பின்னரான வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை, தேர்தலின் பின்னர் அங்கு காணப்படும் நிலைமை, கட்சிகளின் நிலவரம், அவர்களிடையேயான வேற்றுமைகள், ஐக்கிய நாடுகள் எவ்வாறு தமிழ் ...

Read More »